search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divakaran"

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும் என்று திவாகரன் கூறியுள்ளார். #SterlitePlant #NGT

    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர், திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி, போது நடந்த கலவரத்தில், பலர் உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசு, அந்த ஆலையை மூட உத்தரவிட்டது,

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பசுமை தீர்ப்பாயம், வழங்கிய, தீர்ப்பு தமிழக மக்களை, குறிப்பாக, தூத்துக்குடி மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும், இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, போராட்டத்தை நடத்த வேண்டும்,

    தமிழகத்தில் விவசாயத்தை கேள்விக் குறியாக்கும் வகையில், சமீபத்தில், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைகட்ட வரைவு திட்டத்திற்கு, அனுமதியளித்துள்ளது. இதை பார்க்கும் போது, ஏதோ சொல்லி வைத்த மாதிரி தமிழகத்தை வஞ்சிப்பதை போல மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது

    நமது அரசியல் இயக்கங்கள், இது போன்ற பொதுப் பிரச்சினைகளில், ஒன்றிணைந்து, போராட வேண்டியது, அவசியமாகும், அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது, நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.

    தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்க போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின், அரசியல் அணுகு முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகும்.

    பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியதுடன், அனைத்து துறைகளிலிலும், அரசியல் தலையீடு, மத இன பிரச்சினையை தூண்டி, நாட்டில் அமைதியின் மையை ஏற்படுத்திய, மக்கள் விரோத நடவடிக்கைகளால், பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வியை கொடுத்திருப்பதாகவே, கருதுகிறேன்.

    தமிழக முதல்- அமைச்சர் முறையில் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினும், ஸ்டெர்லைட், மேகதாது அணை, போன்ற பிரச்சினைகளில், மக்களை காப்பாற்ற பொறுப்புடன், குரல் கொடுக்கவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்.

    தினகரனின், செயல்பாடுகள் பிடிக்காமல் தான் செந்தில்பாலாஜி, தி.மு.க.விற்கு சென்றிருக்கிறார். #SterlitePlant #NGT

    தி.மு.க சார்பில் திருச்சியில் 4-ந் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திவாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். #divakaran #dmk

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை வைத்து சிலர் தங்களின் உள் பகையை தீர்த்து கொள்கின்றனர். அரசியல் வாதிகள் சிலர் பேட்டிகள் மூலமும், அறிக்கைகளை வெளியிட்டும் மக்களை பீதி அடைய செய்கின்றனர். சிலர் ஓட்டு கேட்க வருவது போல் வேனை விட்டு கீழே இறங்காமல் புயல் பாதித்த மக்களை சந்தித்து செல்கின்றனர். (டி.டி.வி.தினகரனை மறைமுகமாக குறிப்பிட்டார்)

    கர்நாடக அரசின் மேகதாது அணை கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய செயல், புயலால் பாதித்த டெல்டா மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயல்.

    தி.மு.க சார்பில் திருச்சியில் 4-ந் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பாகுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும். இதில் எங்கள் கட்சியின் சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

    புயல் பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு வர இன்னும் 20 நாட்கள் ஆகும். முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றும் செயல் கொடுஞ் செயல் ஆகும். தமிழக அரசின் புயலுக்கு முந்தைய பணிகளும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண பணிகளும் பாராட்டுதலுக்குரியது.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ. ஜி. பொன்.மாணிக்க வேலை சிறப்பு அதிகாரியாக ஒராண்டுக்கு நீட்டித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார். #divakaran #dmk

    ஜெயலலிதா மேல் குற்றச்சாட்டு இருக்கும் போது பாரத ரத்னா விருது கேட்பது முறையாக இருக்காது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். #divakaran #jayalalitha #BharatRatnaAward

    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் சொற் பொழிவுகளை தொகுத்து பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அண்ணாவின் சாதனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும்.

    அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் லஞ்ச வாவண்யங்களை தவிர்த்து நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இளைஞர்கள் அண்ணாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் அரிசி பிரச்சினை, பட்டினி சாவை அண்ணா தடுத்து நிறுத்தினார்.அண்ணா இருந்திருந்தால் திராவிடர் கழகம் பிரிந்து இருக்காது.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்ற முள்ளோடு சமாதியில் உள்ளார். அவரின் பெயரில் ஆட்சி நடத்துகிறோம் என சொல்பவர்கள் அந்த முள்ளை அகற்ற முயற்சிக்காமல் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது கேட்பது அரசியல் நாடகம். ஜெயலலிதா மேல் குற்றச்சாட்டு இருக்கும் போது பாரத ரத்னா கேட்பது முறையாக இருக்காது.

    திருவாரூர் தொகுதிக்கு கருணாநிதி ஏராளமான திட்டங்களை கருணாநிதி செய்துள்ளார். இதனால் திருவாரூர் மக்கள் இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தான் நன்றிக்கடனுடன் ஓட்டு போடுவார்கள். கருணாநிதி செய்த நலத்திட்டங்கள் இன்னும் 3 தேர்தல்களில் கை கொடுக்கும் என நினைக்கிறேன்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன், மக்களை ஏமாற்றி ஜெயித்தது போல் திருவாரூர் , திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது.


    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதில் கவர்னர் பொறுப்பை தட்டிக்கழித்து காலதாமதம் செய்யக்கூடாது.

    மக்களுக்கு எதிராகவும் இயற்கை மற்றும் விவசாயி களுக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படுகிறது. மோடி விவசாயிகள் நலனுக்கு என்று திட்டங்கள் அறிவிக்க அறிவிக்க விவசாயிகள் பின்னோக்கி தான் செல்கின்றனர் .

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வு சாமான்ய மக்களின் குரல்வளையை நசுக்கி வருகிறது. மத்திய- மாநில அரசுகள் தங்கள் மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #divakaran #jayalalitha #BharatRatnaAward

    திருவாரூர் இடைத்தேர்தலில் நடுநிலையில் இருப்போம். நாங்கள் போட்டியிட வில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார். #Divakaran #dinakaran #thiruvarurelection

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா திராவிடர் கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைகிறார்கள். அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் திராவிட தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி நம்மை விட்டு மறைந்து இருக்கிறார்கள்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் மட்டுமே நடத்துகிறார். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லை.

    தற்போது காவிரியில் தண்ணீர் வந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை.

    சசிகலா செய்த காரியங்கள் தவறாக, கெடுதலாக போய்விட்டது. அவர் சதியில் மாட்டிக் கொண்டார். அதனை மீட்க அண்ணா திராவிட கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    டி.டி.வி. தினகரன் 1 கோடி உறுப்பினர்கள், 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க போவதாக கூறிக்கொண்டு, நலத்திட்டம் என்ற பெயரில் குக்கர் உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருகிறார்கள். மக்கள் கூட்டத்தை பணம் கொடுத்து கூட்டப்படுகிறார்கள். இந்த கூட்டத்தை பார்த்து பலர் ஏமாந்து வருகின்றனர்.

    தமிழகத்திற்கு ரூ. 4.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அரசு எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் ஆகும். தவறான அரசியல் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    தி.மு.க. தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. தியாகம் செய்தவர்கள் மதிக்கப்பட வேண்டும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது, எங்கள் உடம்பில் அ.தி.மு.க. ரத்தம் ஓடுகிறது, திருவாரூர் இடைத்தேர்தலில் நடுநிலையில் இருப்போம். நாங்கள் போட்டியிட வில்லை.

    தேர்தல் தொடர்பாக தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


    டி.டி.வி. தினகரன் அரசியலில் அசிங்கமான சக்தி. ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை பணம் சென்று கொடுத்தனர்.

    தினகரன் பணத்தை கொண்டு அரசியல் செய்கிறார். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என தினகரன் நினைக்கிறார். ஸ்லீப்பர் செல் ஒன்றும் தினகரனுக்கு கிடையாது.

    ஜெயானந்த் திவாகரன் கத்துக்குட்டி என்றால் டி.டி.வி. தினகரன் ஏன் பயப்படுகிறார்?

    இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #thiruvarurelection

    தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது என்று திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #divakaran #TamilnaduGovernment
    தஞ்சாவூர்:

    சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுவை நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றிபெறுவோம் என தினகரன் கூறியிருப்பது அரசியல் வியாபாரத்திற்காகவே. திண்டுக்கல் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து மன்னார்குடி கூட்டத்துக்கு, டோக்கன் கொடுத்து ஆட்களை வரவழைத்திருக்கிறார்கள்.

    இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு குக்கர் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அவர் கூறியிருப்பது அரசியல் பேரத்திற்கு வழி. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி என்பது தனிக்கதை அதைப்பற்றி விரைவில் தெரிவிப்பேன்.

    ஆறுமுகசாமி கமிஷனில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

    பொதுப்பணித்துறையில் பாசனப்பிரிவு செயல்படுகிறதா என தெரியவில்லை. ஆறுகளில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. கடைமடை பகுதிக்கும் தண்ணீர் சென்றடையவில்லை. தமிழக அரசு உள்ளாட்சித்தேர்தலை நடத்த விரும்பவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு நிதி வரவில்லை. பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் சொத்துவரியை உயர்த்தியிருக்கிறார்கள்.



    தமிழக அரசு தற்போது பல்வேறு சிக்கலில் மாட்டி தவிக்கிறது.

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது. ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பது தெரியவில்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றினாலும் சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் சாமி சிலைகள் செய்ததில் மோசடி தொடர்பாக இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

    பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர்கள் பதவிக்கு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் இருக்கிறது.

    எந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை. கட்சியை வளர்க்கவேண்டும், பணத்தின் பரிபாலனத்தை படிப்படியாக குறைக்கவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். #divakaran #TamilnaduGovernment
    ஊழல் அதிகம் புரளும் மாநிலம் தமிழ்நாடு என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.

    தமிழகம், ஊழல் அதிகம் உள்ள மாநிலம் என்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் குற்றச்சாட்டு, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசாகும்.

    அமித்ஷா மேடையில் பேசுவதைப்போல ஊழலை கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகம் என்றனர். தற்போது தேர்தலுக்காக தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் என்கின்றனர்.


    நாட்டை ஆளும் தேசிய கட்சியின் தலைவர் தமிழகத்துக்கு வந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும்.

    ஒரு நாடு ஒரே தேர்தலை அண்ணா திராவிடர் கழகம் எதிர்க்கிறது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், ஏற்கனவே கொடுத்த நிலங்களுக்கான தொகை அப்பகுதி மக்களிடம் சென்றடையவில்லை.

    மீன்களில் ரசாயனம் கலந்தது எப்படி? என்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கு முன்னுரிமை வழங்கி, தனது நேரடி கண்காணிப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரும்பாலான அமைச்சர்கள் தொண்டர்கள் மத்தியில் அம்மா என்றும், தங்களுக்குள் பேசும்போது ஜெயலலிதா என்றும் பேசி ஜெயலலிதாவை அவமரியாதை செய்து வருகின்றனர்.

    முட்டையில் ஊழல் செய்துள்ள வளர்மதி பற்றி பேசும் தினகரன் தான், வளர்மதிக்கு அந்த பதவியை பெற்று தந்தார். பாடநூல் கழக தலைவராக வளர்மதியை கொண்டு வந்தவர் தினகரன் தான்.

    அண்ணா திராவிடர் கழகத்தில், புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AmitShah #EdappadiPalanisamy #Divakaran
    திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். அவரது புதிய கட்சிக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறினார். #TTVDhinakaran #Divakaran
    முத்துப்பேட்டை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவிரி பிரச்சனைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைக்கட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும்.

    விதி எண் 110-ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இல்லை என சொல்லி தட்டிக் கழிக்கவெல்லாம் முதல்வர், விதிஎண் 110-ஐ இப்போது பயன்படுத்துகிறார்.

    மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு ஓடிக்கொண்டுள்ளது. இவர்களது ஆட்சியில் தொடர முடியாமல் தான் 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்தனர். இவர்கள் கட்சி நலனுக்காக தியாகம் செய்துள்ள அனைவரும் இன்றைக்கே ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர்.

    இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் தான் எல்லா போராட்டமும் நடக்கும். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்துவிடும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும் ஆர்.கே.நகர் போலவே மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளன.

    வரும் தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றி பெற்று மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.

    தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி 3 பேரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர்.



    மன்னார்குடியில் புதிய கட்சி உதயம், கொடியேற்றம் குறித்தெல்லாம் எதுவும் சொல்வதிற்கில்லை. இந்த மாதத்தில் கேட்ட சிறந்த ஜோக்குகளில் புதிய கட்சி தகவலும் நல்ல ஜோக்ஸ் என்பதை தவிர, அந்த கட்சி குறித்து வேறெதுவும் எதுவும் சொல்வதற்கில்லை,

    திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். கட்சி பெயரை கேட்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அண்ணாவிற்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க.வில் அவர் உறுப்பினர் கூட கிடையாது. எப்படி கட்சியினர் அவர் பக்கம் செல்வார்கள்? அவர் என்றும் தனிமரம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #Divakaran
    திவாகரனுக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்றிரவு சேலத்திற்கு வந்தார். இன்று காலை சேலத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணன் தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல, அவருக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை.

    துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அவர் ஏஜெண்டாக செயல் படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.


    கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம்.

    104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கதக்கது.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

    இது தொடர்பாக எங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன். மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 

    இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என திவாகரனுக்கு சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Sasikala #Divakaran
    சென்னை:

    டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் - துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால், தினகரன் - திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். உடன்பிறந்த சகோதரி என சசிகலா என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் குறித்து திவாகரன் தரப்பில் எந்த கருத்தும் இதுவரை கூறப்படவில்லை. #Sasikala #Divakaran
    ×