search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife"

    பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளாய்? என கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முனியாண்டி கத்தியால் ராஜாமணியை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜாமணி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

    உத்தனபள்ளி அருகே முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனபள்ளி அருகே உள்ள தேன் துருகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ருணப்பா மகன் அருண்குமார் (வயது25). அதே பகுதியை சேர்ந்த மற்றொரு அருண்குமார் (27). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.  

    இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதனை அருண்குமார் நண்பர் மகேஷ் தட்டி கேட்டார். அப்போது திடீர் என கிருஷ்ணப்பா மகன் அருண்குமார் அவர் நண்பர்கள் சிவப்பா, மாதேவப்பா, தருன்குமார், அருண்குமார் ஆகிய 4 பேர் சேர்ந்து மகேஷை சரமாரி தாக்கி மறைத்து வைத்து இருந்த கத்தியால் மகேஷ் கால், தொடை பகுதியில் குத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஒடினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த மகேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து  உத்தனபள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
    மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகனை போலீசார் கைது செய்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை குமரன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் மாரிபாண்டி (வயது 36). இவரிடம் மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்தவர் கணேசன்(42) என்பவர் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கிடையில் மாரிபாண்டிக்கும், கணேசன் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவர, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

     இந்தநிலையில் நேற்று மாரிபாண்டி கொடுத்த கடனை வாங்குவதற்காக மானாமதுரை சென்றுள்ளார். அப்போது கணேசனும், அவரது தாயார் காயாம்பு(62) ஆகியோர் சேர்ந்து மாரிபாண்டியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், காயாம்பு ஆகியோரை கைது செய்தனர்.
    திருவிழாவில் நடனமாடிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் அடுத்த நீடாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பரப்பனமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சூர்யா. அதே ஊரை சேர்ந்தவர் முருகையன். கடந்த 3-ந்தேதி அப்பகுதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சூர்யா நடனமாடி உள்ளார். இதனை முருகையன் தடுத்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செந்தில்குமார் வீடு வழியாக முருகையன் சென்றபோது அவரை வழி மறித்த செந்தில்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகிய இருவரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை-மகனை தேடி வருகிறார்.

    பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தார்.

    பெரம்பூர்:

    செம்பியத்தில் போலீஸ் காரராக பணிபுரிபவர் சிவலிங்கம். இவர் ‘பாஸ் போர்ட்’ விசாரணைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் கையில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி சென்றனர்.

    அவர்களை போலீஸ்காரர் சிவலிங்கம் மடக்கினார். ஆனால் அவர்கள் நிற்காமல் அவரது கை விரலில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதனால் ரத்த காயம் அடைந்த அவர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே அவர்கள் அந்த வழியாக வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்திய போது அவர்களது பெயர் அஜித் (20), பரத் (19) என தெரியவந்தது. வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆவர்.

    இவர்கள் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தது ஏன் என தெரியவில்லை. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட இருவரும் வந்தனரா? அல்லது கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி திரிந்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையைச்சேர்ந்த ரவுடியை கொலை செய்யும் திட்டத்துடன் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    2 ரவுடிகள் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னசேகர் என்பவரது மகன் பாம்பு என்ற நாகராஜ்(30). பிரபல ரவுடியான இவர் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமைந்தகரையைச்சேர்ந்த பிரபல ரவுடி பல்லி என்ற ரோகனின் கூட்டாளியான சூளைமேட்டை சேர்ந்த குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி ரோகன் தனது எதிரியான நாகராஜை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த நாகராஜூம், ரோகனை கொல்ல சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதனால் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தார்.

    இதற்கிடையே ரோகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மூடூர் கிராமத்தை சேர்ந்த காசி மகன் பொன்ராஜின்(32) மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது நாகராஜூக்கு தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களாக பொன்ராஜ் தனது மனைவியுடன் திண்டிவனத்தில் வசித்து வந்தார். இதனால் ரவுடி ரோகன் தனது கள்ளக்காதலியை பார்ப்பதற்காக திண்டிவனத்துக்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இந்த விஷயத்தை நாகராஜூக்கு பொன்ராஜ் தெரிவித்தார். இதனால் ரோகனை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் நாகராஜ் ஸ்ரீபெரும்புதூரில் கைத்துப்பாக்கி மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி பையில் மறைத்து வைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவில் திண்டிவனத்திற்கு வந்தார்.

    அங்கு தனது கூட்டாளி பொன்ராஜ் உதவியுடன் ரோகனை கொலை செய்யும் திட்டத்துடன் திண்டிவனம் வ.ஊ.சி. திடல் அருகில் பதுங்கி நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பையை(பேக்) சோதனையிட்ட போது, அந்த பையினுள் அரிவாள், கத்தி, மிளகாய்பொடி பாக்கெட் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு 2 ரவுடிகளையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனத்துக்கு விரைந்து வந்து கைது செய்யப்பட்ட இரு ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்.

    ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார். முன்கூட்டியே ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    முன் விரோத தகராறில் முதியவரை கத்தியால் குத்திய விவசாயி போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்தேரடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமுவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாமை சுப்புராயன் (70) என்பவர் பஞ்சாயத்து பேசியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சுப்புராயனுக்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுப்புராயன் வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் கத்தியால் சுப்புராயன் உடலில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கீழே சாய்ந்து கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சுப்புராயனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அங்கு சுப்புராயன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சுப்புராயனை கத்தியால் குத்தியதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என செல்வராஜ் பயந்தார். இன்று அதிகாலை அவர் அதே பகுதியில் தனது அண்ணன் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலம் இன்ஸ் பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    சூளகிரி அருகே எலக்ட்ரீசியனை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே உள்ள பந்தரகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு, சின்னாறு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற 8 பேர், சின்னாறு பஸ் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோவிந்தன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பெங்களூரு நெலமங்களா பகுதியை சேர்ந்த மது (19) என்பவர், கோவிந்தனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×