search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி அருகே எலக்ட்ரீசியனுக்கு சரமாரி கத்திக்குத்து - வாலிபர் கைது
    X

    சூளகிரி அருகே எலக்ட்ரீசியனுக்கு சரமாரி கத்திக்குத்து - வாலிபர் கைது

    சூளகிரி அருகே எலக்ட்ரீசியனை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே உள்ள பந்தரகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு, சின்னாறு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற 8 பேர், சின்னாறு பஸ் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோவிந்தன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பெங்களூரு நெலமங்களா பகுதியை சேர்ந்த மது (19) என்பவர், கோவிந்தனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×