என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewellery"
- பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு நடந்தது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவக்கோட்டை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது மதுரையில் உள்ள ஒரு வேறு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாம்பிகை (வயது54).
சம்பவத்தன்று இவர் வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றார். வேலைக்கார பெண் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார்.
அதன்பின்னர் மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் பீரோவில் பார்த்த போது 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் மீனாம்பிகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரிகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
- அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 40). உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்றார். ஹரிகிருஷ்ணன் மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கவிதாவின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில் திடுக்கெட்டு எழுந்த கவிதா திருடன் திருடன் என்று கூச்சலிட்டு தாலிச் சங்கிலியை இழுத்தார். இதில் பாதி தாலிசங்கிலியுடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றான். இது குறித்து ஹரிகிருஷ் ணன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். வனத்துறை அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சீனியம்மான் (வயது32). இவர் குழந்தைகள் வீட்டில் இருந்ததால் வீட்டை திறந்து வைத்து விட்டு பக்கத்து ஊருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்து 5பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது45). இவரது வீட்டில் புதிதாக ஏ.சி.பொருத்தியுள்ளனர். அந்த பணியை முடித்து பின் பார்த்த போது 1 1/2 மோதிரம் காணாமல் போயியுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் சீனிவாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே கீழராஜகுல ராமன் பகுதியில் அச்சம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி சங்கர நாராயணன் வந்தார்.
அப்போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி நவநீத கிருஷ்ணன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்பட 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து முருகன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், மகன் மருதுபாண்டி(28), அண்ணாநகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு அம்மாசி கண்ணன் மகன் ராஜ்குமார்(28) ஆகியோரை ேபாலீசார் போலீசார் கைது செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (52). இவர் தனது மகளை பின்னால் அமர வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அரசரடி மகபூப்பா ளையம் பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இளம்பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பே ரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
- 50-க்கும் மேற்பட்டோர் திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரூர்:
சென்னை முகப்பேர் பகுதியில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நகைக்கடை மற்றும் ஏ.ஆர்.டி. டிரஸ்டட் பிராப்பிட் உள்ளிட்ட பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இதனை சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.
இவர்கள் கவர்ச்சி கரமான பரிசு பொருட்களுடன் கூடிய தீபாவளி சீட்டு, நகைச்சீட்டு, ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.1½ லட்சத்துக்கு நகை வாங்கி கொள்ளலாம், முதலீடு செய்யும் தொகைக்கு வாரம் தோறும் 3 சதவீதம் வட்டி, ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 12 மாதத்தில் ரூ.2.40 லட்சத்துக்கு நகை வாங்கிக் கொள்ளலாம், வட்டியில்லாத நகைக்கடன், குலுக்கல் சீட்டு உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதை நம்பிய பொது மக்கள் பலர் தங்களது பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் பேசி பணத்தை முதலீடு செய்ய வைத்தால் அவர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளனர்.
இதனால் அங்கு நகைக்கடை மற்றும் நிறுவனங்களில் வேலைபார்த்த ஊழியர்களும் ஏராளமானோரை பணத்தை முதலீடு செய்ய வைத்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நகைக்கடை மற்றும் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை முதலீடாக பெற்றது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் திடீரென ஏ.ஆர்.டி. நகைக்கடை மற்றும் நிறுவனத்தை மூடிவிட்டு சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் தலைமைறைவாகி விட்டனர்.
இதுகுறித்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக்கடை தொடங்கிய 2 ஆண்டுகளில் சகோதரர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள் மீது இதுவரை 925 பேர் மோசடி புகார் அளித்து உள்ளனர். மேலும் தினமும் 5 பேர் வரை ஏ.ஆர்.டி.நகைக்கடை மற்றும் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து இழந்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்து இழந்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இது வரை ரூ.13 கோடி மட்டும் மோசடி நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் மேலும் பல கோடி மோசடி நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இதுவரை ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்கள் மீது 925 புகார்கள் வந்துள்ளன. மேலும் தினசரி 5 பேர் வரை தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூ.13 கோடி மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.
தலைமறைவான மோசடி சகோதரர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
இதற்கிடையே பணத்தை பறிகொடுத்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் ஏ.ஆர்.டி.நகைக்கடை, அதன் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
ஆனையூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மனைவி கமலலலிதா(56). நேற்று இவர் கள்ளழகர் சப்பரம் பார்ப்பதற்காக, கலைஞர் நகருக்கு வந்தார். மீனாட்சி குடியிருப்பு அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த கமலலலிதாவிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மேலூர் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் மேலூர் யூனியன் அலுவல வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து விட்டு பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்அலை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்தலம்பட்டு பகுதியில் கடந்த 6மாத ங்களுக்கு முன்பு 2 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள சித்தலம்பட்டு கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42) . புதுவையில் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இவர் சித்தலம்பட்டு பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை குடும்பத்துடன் கே ரளாவிற்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 5 மணியளவில் சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர் .
அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டினுள் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து 6 பவுன் நகை 30 ஆயிரம் ரொக்க பணம் 1/2 கிலோ மதிப்புமிக்க வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சித்தலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் சித்தலம்பட்டு புதுவை பகுதியான திருக்கனூர் பகுதிக்கு அருகாமையில் இருப்பதால் திருக்கனூர் போலீசாரும் இந்த திருட்டு சம்பந்தமாக அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் . மேலும் இந்த சித்தலம்பட்டு பகுதியில் கடந்த 6மாதங்களுக்கு முன்பு 2 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை இதனால் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் . இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இசக்கிபாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
- பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பகலில் இசக்கி பாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது. இசக்கி பாண்டி வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கம்மல்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து இசக்கி பாண்டி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
- பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்.
- மதுரை ஸ்ரீபாலகோபாலன் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை ஸ்ரீபால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.டி.செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து ள்ளது. இனிமேல் பிஐஎஸ் தர குறியீடு கொண்ட தங்கம் மட்டுமே விற்கவும், வாங்கவும் வேண்டும்.
ஹால் மார்க் முத்திரை என்பது 3 குறியீடுகளை கொண்டது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையான தங்கம் கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் சேர்க்கப் படும்.
அதன் மூலம் தான் நமக்கு தேவையான தங்க நகைகளை வடிவமைக்க முடியும். எனவே தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும்.
ஹால் மார்க் முத்திரை 3 சதவீதமாக பிரிக்கப்ப டுகிறது. 22 கே 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18கே750 என்றால் 18 காரட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 14கே858 என்றால் 14 காரட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.
உண்மையான ஹால்மா ர்க் முத்திரை பதித்த நகைகளை வாங்கும் போது அதற்கான நன்மை களும் நமக்கு கிடைக்கும். வங்கியில் தங்க நகை கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது.
எனவே பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உறவினரை பார்ப்பதற்காக சுந்தரி கரிசூழ்ந்த மங்கலத்திற்கு பஸ்சில் சென்றார்.
- நகை திருட்டு போனது குறித்து சுந்தரி டிரைவரிடம் கூறினார்.
நெல்லை:
வி.எம். சத்திரத்தை சேர்ந்தவர் கடற்கரை முத்து. இவரது மனைவி சுந்தரி (வயது65). இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பத்தமடை அருகே உள்ள கரிசூழ்ந்த மங்கலத்திற்கு சென்றார். பத்தமடையை தாண்டி பஸ் சென்ற போது தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை திருட்டு போனதை கண்டு சுந்தரி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டிரைவரிடம் கூறினார். பின்னர் அவர் பஸ்சை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் விசாரணை நடத்தி நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.
செங்கோட்டை:
செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.
- தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- வீடுகளில் நகை -பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து இரவு நேரங்களில் குற்றச்சம்பவம் நடைபெற்று வந்தது.
இதை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ்காரர்கள் கோதண்ட பாணி, திருக்குமரன், அருண்மொழிவர்மன், ரகு ஆகியோர் அடங்கிய தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோடு கரசங்கால் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 26 ) என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர் தஞ்சையில் வீடுகளில் நகை -பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.குற்றவாளியை பிடிப்ப தற்கு மாவட்ட சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், பிரகதீஸ்வரன், திருவரம்பூர் உட்கோட்ட குற்ற பிரிவு தலைமை காவலர் ஹரி மற்றும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜவகர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசார் மற்றும் உறுதுணையாக இருந்த போலீசாரை , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்