search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

    • மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ஆனையூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மனைவி கமலலலிதா(56). நேற்று இவர் கள்ளழகர் சப்பரம் பார்ப்பதற்காக, கலைஞர் நகருக்கு வந்தார். மீனாட்சி குடியிருப்பு அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த கமலலலிதாவிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மேலூர் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் மேலூர் யூனியன் அலுவல வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து விட்டு பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்அலை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×