search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே  தொழிலாளி வீட்டில் தங்க நகைகள் திருட்டு
    X

    களக்காடு அருகே தொழிலாளி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

    • இசக்கிபாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
    • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பகலில் இசக்கி பாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது. இசக்கி பாண்டி வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கம்மல்களை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து இசக்கி பாண்டி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×