search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுபுகுந்து நகை திருட்டு
    X

    வீடுபுகுந்து நகை திருட்டு

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சீனியம்மான் (வயது32). இவர் குழந்தைகள் வீட்டில் இருந்ததால் வீட்டை திறந்து வைத்து விட்டு பக்கத்து ஊருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    திரும்பி வந்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்து 5பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது45). இவரது வீட்டில் புதிதாக ஏ.சி.பொருத்தியுள்ளனர். அந்த பணியை முடித்து பின் பார்த்த போது 1 1/2 மோதிரம் காணாமல் போயியுள்ளது.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் சீனிவாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே கீழராஜகுல ராமன் பகுதியில் அச்சம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி சங்கர நாராயணன் வந்தார்.

    அப்போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி நவநீத கிருஷ்ணன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×