search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL 2019"

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

    நேற்று நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.



    இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.

    ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து  முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
    ஐதராபாத்தில் நாளை நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கியது. ‘லீக்‘ ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி முடிவடைந்தது. இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பிளேப் ஆப்’ சுற்று கடந்த 7-ந்தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் 8-ந்தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து வெளியேற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்று உள்ளன. இதனால் 4-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி 8-வது முறையாகவும், மும்பை அணி 5-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தாலும் மும்பையிடம் 3 முறை தோல்வியை தழுவியது. இரண்டு ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் சரண்டர் ஆகி இருந்தது.

    இதற்கு நாளைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பழி தீர்த்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்த அனைத்து துறைகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சிறப்பாக செயல்பட்டு கடுமையாக போராட வேண்டியது அவசியமாகும்.

    முதல் தகுதி சுற்றில் சென்னை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதில் இருந்து மீண்டு 2-வது தகுதி சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் டோனி நல்ல நிலையில் உள்ளார். அவர் 14 ஆட்டத்தில் 414 ரன் எடுத்து உள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். ஸ்டிரைக்ரேட் 137.54 ஆகும். ரெய்னா 375 ரன்னும், டுபெலிசிஸ் 370 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.


    வாட்சன் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே. டெல்லி அணிக்கு எதிராக அவர் அதிரடியை வெளிப்படுத்தினார். வாட்சன் 2 அரை சதத்துடன் 318 ரன்னும், அம்பதி ராயுடு 281 ரன்னும் எடுத்து உள்ளனர்.

    சி.எஸ்.கேயின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் 24 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 16 விக்கெட்டும், ஜடேஜா 15 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் 19 விக்கெட் கைப்பற்றி நல்ல நிலையில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 2-வது வேகப்பந்து வீரரை (‌ஷர்துல்தாக்கூர்) சேர்த்ததில் எந்த பலனும் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் என்ற முறையில் முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து டோனி முடிவு செய்வார்.

    சென்னை அணியை 3 முறை வீழ்த்தி இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணி மீண்டும் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    மும்பை அணியில் வெற்றியை நிர்ணயம் செய்யக்கூடிய பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இது அந்த அணியின் பலமே.

    பேட்டிங்கில் குயின்டன் டி காக் (4 அரை சதத்துடன் 500 ரன்), சூர்யகுமார் யாதவ் (409), கேப்டன் ரோகித் சர்மா (390), இஷான்கி‌ஷன் ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15), ராகுல் சாஹர் (12), குணால் பாண்ட்யா (11) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட் முத்திரை பதிக்க கூடியவர்கள். ஹர்த்திக் பாண்ட்யா 386 ரன் குவித்துள்ளார். 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான அணிகள் மோதுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    குவாலிபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8-வது முறையாக தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளர்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுக்க முடிந்தது.

     ரிஷப் பந்த் அதிகப்பட்சமாக 25 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முன்ரோ 24 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான்தாகீர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    148 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி கிடைத்தது.

    வாட்சன் 32 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), டுபெலிசிஸ் 39 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். போல்ட், இஷாந்த்சர்மா, அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டதாலும், தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும் சூப்பர் கிங்ஸ் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம், அவர்களால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் என்று கேப்டன் டோனி பவுலர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டும் சேரும். இந்த சீசனில் பந்து வீச்சு துறையால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பவுலர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டு டெல்லி அணியை மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க அனுமதிக்க வில்லை.


    டெல்லி அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எங்களது சுழற்பந்து வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து விட்டனர்.

    தொடக்க வீரர்கள் (வாட்சன், டுபெலிசிஸ்) சிறப்பாக ஆடினார்கள். அவர்களே ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் இந்த வெற்றியை பெற்று இருந்தாலும் மகிழ்ச்சிதான். எங்கள் அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ‘குவாலிபையர்2’ போட்டி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுதான் எங்களது வழக்கமான வழியாகும். கடந்த முறை மட்டும் விதி விலக்கு.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    பவர்பிளேயில் 2 விக்கெட்டை இழந்தது ஏமாற்றம். அதில் இருந்து மீள்வதே கடினமாகி விட்டது. சென்னை அணி சுழற் பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.

    ஒட்டு மொத்தத்தில் இந்த சீசனில் சிறப்பாக ஆடினோம். கேப்டன் பதவி வகித்தது பெருமை அளித்தது. சீனியர் வீரர்களான டோனி, வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
    விசாகப்பட்டினம்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக ஸ்லோ பிட்சாக இருந்ததால், சென்னை அணிக்கு கணிசமான ரன்களை இலக்காக வைக்க டெல்லி பேட்ஸ்மேன்கள் நினைத்தனர். இதற்காக துவக்கம் முதலே அதிரடி காட்டினர். ஆனால், அவர்கள் நினைத்ததைவிட பந்து மிகவும் மெதுவாக எழுந்து, பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் திணறச் செய்தது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை 3-வது ஓவரில் பிரித்தார் சாஹர். அவரது துல்லிய பந்துவீச்சில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அவர் 5 ரன்க்கள் மட்டுமே சேர்த்தார். ஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள்  எடுத்தநிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள்.

    பவர் பிளேவுக்கு பிறகு ரன் எடுக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அட்டகாசமான 4 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சார் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.

    களத்தில் இருந்த ரிஷப் பந்த், ரூதர்போர்டு இருவரும், எப்படியாவது கவுரவமான ஸ்கோரை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹர்பஜன் ஓவரில் அபாரமாக சிக்சர் அடித்தார் ரூதர்போர்டு. அதன்பின்னர், ஆப் சைடில் வீசப்பட்ட லென்த் பாலை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 12 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.



    அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 116  ஆனது. அடுத்து களமிறங்கிய கீமோ பால், 3 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ பந்தில் கிளீன் போல்டானார். 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை தட்டிவிட்டு 6 ரன்கள் ஓடி எடுத்த ரிஷப் பந்த், 4வது பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிரென்ட் போல்ட், ஜடேஜா வீசிய கடைசி ஓவரில், 2வது பந்தில் தன் முழு பலத்தையும் காட்டி சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் போல்டானார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் அடிக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது.

    சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர்,  சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும்போது கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த டோனி 9 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100 வது வெற்றியை பதிவு செய்தது. 
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. #CSKvsDC #Qualifier2
    விசாகப்பட்டினம்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சாய்த்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு நடக்கிறது.

    இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சென்னை அணியும், இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய டெல்லி அணியும் மல்லுக்கட்டுகின்றன.

    3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேட்கையில் உள்ளது. இந்த சீசனில் லீக் ஆட்டம் இரண்டிலும் சென்னை அணி, டெல்லியை வீழ்த்தியது. பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்திலும் சென்னை அணி வெற்றி கண்டு இருந்தது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி கடைசி சில ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. குறிப்பாக முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 131 ரன்களே எடுத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனியை தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. டோனி இதுவரை 405 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 364 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 320 ரன்னும், அம்பத்தி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே (ஐதராபாத்துக்கு எதிராக 96 ரன்) சிறப்பாக ஆடினார். இதுவரை 268 ரன்கள் எடுத்துள்ள ஷேன் வாட்சன் நல்ல தொடக்கம் அமைத்து கொடுக்க வேண்டியது சென்னை அணிக்கு அவசியமானதாகும்.

    பந்து வீச்சில் சென்னை அணி பலமாகவே உள்ளது. இம்ரான் தாஹிர் 23 விக்கெட்டும், தீபக் சாஹர் 17 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 14 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 13 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். சென்னை மைதானத்தில் டோனி 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார். விசாகப்பட்டினத்தின் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வீரர்களை அவர் முடிவு செய்வார். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    டெல்லி அணியின் பேட்டிங் வலுவானதாக இருக்கிறது. ஷிகர் தவான் (503 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (450 ரன்கள்), ரிஷாப் பான்ட் (450 ரன்கள்), பிரித்வி ஷா (348 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் அதிரடியாக ஆடினார்கள். பந்து வீச்சில் ரபடா இல்லாதது இழப்பு என்றாலும் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல், கீமோ பால் (இருவரும் தலா 9 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி, விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.விஜய், அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங் அல்லது ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் முன்ரோ, அக்‌ஷர் பட்டேல், ரூதர்போர்டு, கீமோ பால், அமித் மிஸ்ரா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #CSKvsDC #Qualifier2
    ரி‌ஷப் பந்த், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம் எனவும் 2 பேரையும் அவர்கள் போக்கில் ஆட விட்டால் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் எனவும் டெல்லி கேப்டன் கூறியுள்ளார். #ShreyasIyer #DCvsSRH
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தி நாக்அவுட்டில் முதல்முறையாக வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது.

    கப்தில் 19 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), மணிஷ் பாண்டே 30 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னும், விஜய் சங்கர் 11 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    கீமா பால் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், போல்ட், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 163 ரன் இலக்குடன் டெல்லி அணி ஆடியது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 1 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி வெற்றது. அந்த அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரித்வி ஷா 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ரி‌ஷப் பந்த் 21 பந்தில் 49 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ரஷீத் கான் தலா 2விக்கெட்டும், தீபக் ஹூடா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பாஷில் தம்பி வீசிய 18-வது ஓவரில் ரி‌ஷப் பந்த் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆட்டத்தை மாற்றி டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணி முதன் முறையாக நாக்அவுட்டில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஷிரேயாஷ் அய்யர் கூறியதாவது:-

    கடைசி ஓவரில் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உட்கார்ந்து அந்த ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அணியில் உள்ள ஒவ்வொருவரது முகத்திலும் மகிழ்ச்சியை கண்டேன். இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டம் தேவைதான்.

    கப்திலின் அதிரடியான ஆட்டத்தால் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று கருதினோம். ஆனால் அமித் மிஸ்ரா பிரமாதமாக பந்து வீசினார். அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

    ரி‌ஷப் பந்த், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம். அவர்கள் போக்கில் ஆடினால் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள்.



    குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை அணி எதிர்கொள்கிறோம். அந்த அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘நாங்கள் கடினமான ஸ்கோரைதான் டெல்லி அணிக்கு நிர்ணயித்தோம். 162 ரன் என்பது வெற்றி பெறக்கூடிய இலக்குதான்.

    ஒரு கட்டத்தில் நாங்கள் வலிமையான நிலையில் இருந்தோம். வார்னரும், பேர்ஸ்டோவும் இல்லாதது அணிக்கு பாதிப்பே. கடைசி நேரத்தில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார். #ShreyasIyer #DCvsSRH
    விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றனர். #IPL2019 #CSKvsDC #Qualifier2
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியின் பிளேஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து தகுதி பெற்றன.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து ‘லீக்‘ முடிவில் வெளியேற்றப்பட்டன.

    ‘பிளேஆப்’ சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலியர்-1’ ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து ‘குவாலிபையர்-2’ போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

    ‘குவாலிபையர்2’ ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி மும்பை இந்தியன்சுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். இதனால் இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. டெல்லியை 2 முறை ‘லீக்‘ ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    பெரோசாகோட்லாவில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 80 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி கடந்த சில போட்டியில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. 7 போட்டியில் 5-ல் தோற்றது பரிதாபமே. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பையிடம் மிகவும் மோசமாக தோற்றது சி.எஸ்.கே. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கு அணியின் மோசமான பேட்டிங்தான் காரணம். பந்து வீச்சு நல்ல நிலையில் இருந்தாலும் பேட்டிங் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நாளைய முக்கியமான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடுவது அவசியம்.

    கேப்டன் டோனி ஒருவர் மட்டும் நிலையாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் 10 இன்னிங்சில் 405 ரன் குவித்துள்ளார். 7 முறை அவுட் ஆகாததால் அவரது சராசரி 135.00 ஆகும். அதிகப்பட்சமாக 84 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 138.69 ஆகும். 21 பவுண்டரியும், 23 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    டோனிக்கு அடுத்தபடியாக ரெய்னா 364 ரன்னும், டுபெலிசிஸ் 320 ரன்னும், அம்பதி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர்.

    வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே அதிரடியாக விளையாடினார். ஆனாலும் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

    சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் (23 விக்கெட்), ஹர்பஜன்சிங் (14), ஜடேஜா (13) ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் சேர்ந்து 50 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    சேப்பாக்கம் ஆடுகளத்தில் தான் டோனி 3 சுழற்பந்து வீரரை பயன்படுத்துவார். விசாகப்பட்டினம் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு வீரர்களை முடிவு செய்வார். ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீரர் ஒருவர் இடம் பெறலாம். ‌ஷர்துல் தாகூர் அல்லது வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் நல்ல நிலையில் உள்ளார். அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    டெல்லி அணி ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடி இருப்பதால் ஆடுகளத்தை நன்றாக கணித்து இருக்கும். இதனால் சென்னை சூப்பர் கிங்சுக்கு அந்த அணியை வீழ்த்துவது சவாலானதே.

    டெல்லி அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது. தவான் (503 ரன்), ஷிரேயாஸ் அய்யர் (450), ரி‌ஷப் பந்த் (450), பிரித்விஷா (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இது தவிர இங்ராம், ருதர்போர்டு, கீமோபவுல் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் 25 விக்கெட் வீர்த்திய ரபடா இல்லாதது பாதிப்பே. இதை சரி செய்யும் வகையில் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் சர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10) ஆகியோர் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்சுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது.

    இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ‘குவாலிபையர்2’ ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #IPL2019 #CSKvsDC
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி-ஐதராபாத் அணிகள் இன்று இரவு மோதுகின்றன. #IPL2019 #DelhiCapitals #SunrisersHyderabad
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன், இந்த சீசனில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது. அத்துடன் 2012-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டு இருக்கிறது.

    டெல்லி அணியில் ஷிகர் தவான் (486 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (442 ரன்கள்), ரிஷாப் பான்ட் (401 ரன்கள்), பிரித்வி ஷா உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். 25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபடா (தென்ஆப்பிரிக்கா) உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்கு ஆயத்தமாக நாடு திரும்பி விட்டாலும், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அணியில் இருக்கிறார்கள்.

    2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4-வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4-வது இடம் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

    ஐதராபாத் அணியின் பேட்டிங் தூணாக விளங்கிய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), பேர்ஸ்டோ (இங்கிலாந்து) ஆகியோர் உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு தயாராக சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டதால் அந்த அணியின் பேட்டிங் பலவீனம் அடைந்துள்ளது. மனிஷ் பாண்டே (314 ரன்கள்) பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். கேப்டன் கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், விஜய் சங்கர் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் கலீல் அகமது, ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல ரிதத்தில் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2-வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, கீமோ பால், அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, டிரென்ட் பவுல்ட்.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ்: விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, பாசில் தம்பி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #IPL2019 #DelhiCapitals #SunrisersHyderabad 
    சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபையர்-1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2019 #CSKvMI #Qualifier1
    ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.



    டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. டோனி 37 ரன்னுடனும், ராயுடு 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 4, டி காக் 8  ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.  சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ரன்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில்  சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்,

    சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvMI #Qualifier
    உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறினார் பெரேண்டர்ப். #IPL2019 #MI
    ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரேண்டர்ப்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. மலிங்கா இலங்கை சென்றிருந்தபோது இவர்தான் மும்பை அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

    இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சொந்த நாடு திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.



    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த ஸ்டாய்னிஸ் மார்கஸ் ஆஸ்திரேலியா புறப்பட்டுவிட்டார். இந்நிலையில் தற்போது பெரேண்டர்ப் ஆஸ்திரேலியா சென்று விட்டார். இந்த தகவலை மும்பை இந்தியன்ஸ் தெரிவித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னேறி உள்ளது. #IPL2019 #DelhiCapitals #DC
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. ஏற்கனவே 2008, 2009, 2012-ம் ஆண்டுகளிலும் அடுத்த சுற்றை எட்டியிருந்தது. #IPL2019 #DelhiCapitals #DC
    ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஸல் தட்டி சென்றார். #AndreRussell
    கொல்கத்தா:

    களம் இறங்கி விட்டால் ருத்ரதாண்டவமாடும் கொல்கத்தா வீரர் ந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) நொறுக்கி இருக்கிறார்.



    ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருக்கிறார். #AndreRussell
    ×