search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெய்ல்"

    ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஸல் தட்டி சென்றார். #AndreRussell
    கொல்கத்தா:

    களம் இறங்கி விட்டால் ருத்ரதாண்டவமாடும் கொல்கத்தா வீரர் ந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) நொறுக்கி இருக்கிறார்.



    ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருக்கிறார். #AndreRussell
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்கெதிராக டாக்கா டைனமைட்ஸ் இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. #BPL
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டாக்கா டைனமைட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    பொல்லார்டு 26 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களும், ரசல் 23 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் (8), மெஹெதி மருஃப் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரோஸவ், முகமது மிதுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ரோஸவ் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 15.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. 27 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தன. 17 ஓவர் முடிவில் ரங்க்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 3 ஓவரில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை அல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் கடைசி மூன்று பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முகமது மிதுன் 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த மோர்தசா முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த பர்கத் ரேசாவையும் டக்அவுட்டில் வீழ்த்தினார். இதனால் ரங்க்பூர் அணி மளமளவென விக்கெட்டை இழந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்த ரங்க்பூர் 2 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் கைவசம் ஒரு விக்கெட் இருக்க கடைசி ஓவரில் ரங்ப்பூர் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை அல் இஸ்லாம் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ஷபியுல் இஸ்லாம் பவுண்டரிக்கு விளாசினார். இதனால் நான்கு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் ஒரு கொடுத்த இஸ்லாம், 4-வது பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.

    அடுத்த இரண்டு பந்திலும் ரங்க்பூர் அணி தலா ஒரு ரன் மட்டுமே அடித்ததால் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டாக்கா டைனமைட்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #ChrisGayle #DefamationCase
    2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.

    இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது. 
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    தாமஸ்

    பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
    ×