search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensity"

    • நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
    • வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை

    மடத்துக்குளம்,நவ.21-

    மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.

    சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
    • இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.

    உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
    • இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    • வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
    • வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    அவினாசி:

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இருந்து கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வருகிற , 25ந் தேதி காலை முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து தினமும் காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், கந்தசஷ்டி பாராயணமும் நடைபெறும்.வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வர சுவாமி கோவில்.காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    • ஏர்வாடி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று சின்ன ஏர்வாடி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். 30 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 30 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழித்து வருகின்றனர்.

    இந்த பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, ராஜசேகரன், சுப்பிரமணியன், ராம்பிரபு, முரளிதரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
    • பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரை பலவீனமாக உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கரை மெலிந்துள்ள பகுதிகளில் மணல் முட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.

    அப்போது கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து கரையை ஒட்டி அங்கேயே தயார் செய்யப்பட்ட மணல் மூட்டைகளை அடிக்கி பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கொள்ளிடம் ஆற்றின் மற்ற பகுதிகளில் பலவீனமான கரைப்பகுதியை பலப்படுத்தும் வகையிலும் பிரதான புது மண்ணியாறு, தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை போட்டு சரி செய்யும் பணியில் 5000 மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளக்கப்படுகிறது மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    அவனியாபுரம்

    மதுரை விமான நிலை யத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய வளாகத் தினைச் சுற்றி ரூ.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தபுள்ளி வெளியிடப்ப ட்டுள்ளது.

    மதுரை விமான நிலையம் 1942 இல் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு முதல் பயணி கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பயணிகள், விமானங்கள் அதிகரித்ததன்பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதிய விமான நிலைய முனைய கட்டடம் கட்டப்பட்டது.

    2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து இலங்கைக்கு(கொழும்பு)முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து சரக்கு போக்குவரத்து விமான முனையம் கட்டப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.

    சர்வதேச விமான நிலையமாகாத நிலையில் சுங்க பயன்பாடு உள்ள விமான நிலைய அந்தஸ்தை கொடுத்து மதுரையிலிருந்து துபை, சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவிலான பயணி களை கையாண்டுவரும் மதுரை விமான நிலையம் இந்திய அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலை யங்களில் 36-வது இடத்தை பெற்றுள்ளது.

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க பெரிய விமானங்கள்(ஏர்பஸ் வகை) வந்து இறங்கி செல்லும் வகையில், தற்போது உள்ள ஓடு பாதை நீளம் 7 ஆயிரத்து 500 அடியிலிருந்து, 12 ஆயிரத்து 500 அடியாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக விமான நிலையத்தைசுற்றியுள்ள 610 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 100 ஏக்கர் அரசு(புறம்போக்கு)நிலங்களைத் தவிர்த்து மீதி உள்ள இடங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடமிருந்து பணம் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது .

    இதையடுத்து தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட இருப்பதை அடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 கோடி ஒப்பந்தபுள்ளி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விமானங்கள் நிற்பதற்கு என ஏழு விமான நிறுத்த இடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூ.97 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்க ஒப்பந்தபுள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் சுற்றுச்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அண்டர் பாஸ் முறையில் பாலம் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. புதிதாக சரக்கு போக்கு வரத்திற்கு என கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று விமான நிலையம் பின்புறம் உள்ள பரமபட்டி பகுதியில் நில அளக்கும் பணி நடை பெற்றது இந்த பணிக்கு இடையூறாக யாரும் இருந்துவிடக் கூடாது என்ப தற்காக 100-ம் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது

    இப்பணிகள் அனை த்தையும் முடிக்கப்படும் நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது.
    • இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சா லைகளுக்கு தேவையான கச்சா பொருட்கள், மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு தேவைப்படும் நிலக்கரி உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் சேலம் மேட்டூர் ரெயில்வே வழித்தடம் பயனுள்ளதாக உள்ளது .

    சேலம் மேட்டூர் வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வசதியாக இந்த பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது .அதில் சேலம் ஓமலூர் மற்றும் ஓமலூர்-மேட்டூர் இடையே என இரண்டு பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    முதல் கட்டமாக மேட்டூர் ஓமலூர் இடையே இரட்டை பாதை அமைக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

    இந்த பணி ரூ. 40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில் மின்சார பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓமலூர்-மேட்டூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு முடிவற்ற நிலையில் சேலம் ஜங்ஷனுடன் ஓமலூர் இரட்டை ரெயில் பாதையை இணைக்கும் வகையில் பணிகள் நிறைவு நிலைக்கு நெருங்கி வருகிறது.பெருமளவு பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடையும். அதன்பின்னர் சேலம்-ஓமலூர் மேட்டூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நேற்று போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோம்புப்பள்ளம் தூய்மை பணி, ஜே.கே.கே. சாலை, சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டது. அப்போது கமிஷனர் விஜயகுமார் பேசுகையில், பொதுமக்கள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தார் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், தெருக்களில், கோம்புப் பள்ளத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது. தூய்மையான நகராட்சியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

    குப்பைகள் கொட்டக்கூ டாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பல இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் 50 மரக்கன்று கள் நடப்பட்டன இதில்

    பொறியாளர் ராஜேந்தி ரன், சுகாதார அலுவ லர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர் நந்தினிதேவி, கதிரவன் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    • மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன.இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. அவ்வகையில் 2 ஆயிரத்து 213 பேர் இப்பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    இப்பணிக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவும் உள்ளது.

    அதன்படி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் 54 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு டி.டி.எட்., பி.எட்., மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக்கொண்ட குழு சரிபார்த்து, தகுதியானவர்களை வகுப்பறையில் டெமோ பாடம் நடத்த அறிவுறுத்தப்படும்.அதன் வாயிலாக அவர்களின் தனித்திறன் கண்டறியப்படுகிறது.

    தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.குறிப்பாகதேர்வுக்குழுவால், தேர்வு செய்யப்பட்ட பட்டியல் விபரம் வருகிற 18ந்தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.பின் 19-ந்தேதி ஏற்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்படும். 20-ந்தேதி தற்காலிக நியமனம் பெற்றவர் பள்ளியில் சேர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 350 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் தொடங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.

    இதனை நம்பி ஆண்டுதோறும் பல ஆயிரம் ஏக்கரில் நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகி விட்டது. இதனால் நீர் தேக்க பகுதி குறைந்து விட்டது. கண்மாய் துார்வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் ராமநாதபுரம் பெரியகண்மாய் பாசனத்திற்கு வரும் வைகை தண்ணீர் போதிய அளவு தேக்க முடியாமல் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கிறது. தலை மதகுப்பகுதி புதர் மண்டி பாழாகி உள்ளது.

    இந்த நிலையில் ரூ.9 கோடியே 93 லட்சம் செலவில் காருகுடியில் உள்ள பெரிய கண்மாய் மதகுகள் முதலூர், குளத்தூர் வரை ஆற்றுபடுகையில் வரத்துவாய்க்கால் மதகுகள் செப்பனிட்டு, ஆற்றுபடுகை ஆழப்படுத்தி உள்ளனர்.

    350 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கும்பணி, புதிதாக 2 ஷட்டர்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடக்கிறது. பருவமழை காலத்திற்குள் சீரமைக்கும் பணிகளை முடிக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பருவ மழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என நாளொன்றுக்கு இரு வேளையிலும் மாநகராட்சி பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சென்று ராட்சத மருந்து தெளிக்கும் எந்திரம் மூலம் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று மாஸ் கிளினிக் என்ற பெயரில் மாநகர் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×