search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsAUS"

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
    • கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

    களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.

    பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார். 

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    241 ரன்கள் எனும் இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    - 70 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.

    - லீக் போட்டியை போன்றே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் விக்கெட்டை துவக்கத்திலேயே வீழ்த்த வேண்டும்.

    - முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    - மிடில் ஓவர்களில் ஜடேஜா 30 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் பந்துவீச வேண்டும்.

    - ஸ்மித், லபுஷேன் நீண்ட நேரம் களத்தில் இருப்பதை அனுமதிக்காமல், விக்கெட் வீழ்த்த வேண்டும்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • இந்தியா சார்பில் கே.எல். ராகுல் 66 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. இருவரும் முறையே 47 மற்றும் 4 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 107 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே விளாசினார். இவருடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களை குவித்தார்.

    முகமது ஷமி 6 ரன்களிலும், ஜஸ்பிரித் பும்ரா 1 ரன்னிலும், குல்தீப் யாதவ் 10 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணி ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் ரன்களை பொறுமையாக சேர்த்து வந்தது. இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்டீவன் ஸ்மித் உடன் பகிர்ந்து கொள்கிறார்.

    2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு விராட் கோலி 2019 மற்றும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    இதன் மூலம் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் விராட் கோலி 765 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 95.62 ஆகும். இதில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா புது சாதனை.
    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிதானமாக ஆடியது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களை குவித்து அசத்தினார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.

    இன்றைய இறுதிப் போட்டியில் 151.61 எனும் அதிரடி ரன்ரேட்டில் விளையாடி வந்த ரோகித் சர்மா மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார். நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய போட்டியிலும் ரோகித் சர்மா அபார துவக்கத்தை கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோகித் மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே 87 சிக்சர்களை அடித்துள்ளார்.

    முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிஸ் கெயில் 85 சிக்சர்களை அடித்ததே, ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இன்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த சாதனை மட்டுமின்றி ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர், கேப்டனாக உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர், உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 597 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி ரன்கள் 54.27 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 125.94 ஆகவும் இருந்துள்ளது. இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதில் ரோகித் சர்மா 31 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.

    • உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.

    முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

    2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.

    எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

    கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

    இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். 

    • நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.
    • நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை காண நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகள் முன்பு முடங்கி கிடக்கிறார்கள்.

    இந்த உலக கோப்பையை பாரீசில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் நடிகை மீனா. இன்று எல்லா வேலைகளையும் ரத்து செய்து விட்டு நடிகை மீனா தனது வீட்டில் டி.வி. முன்பு அமர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ரொம்ப பக்.... பக்... என்று உள்ளது. நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.

    இந்தியா வெல்லும் என்ற முழு நம்பிக்கையோடு நான் உலக கோப்பையை அறிமுகப்படுத்திய ஸ்டில்லையும், இந்திய அணி வெற்றி பெற்றதும் அந்த கோப்பையை வாங்குவதையும் இணைத்து நினைத்தது நடந்தது என்று வலைத்தளத்தில் பதிவிட ஒரு பட காட்சியையும் தயார் செய்து வைத்துள்ளேன். நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது.
    • கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2-வது உலக கோப்பை டோனி தலைமையில் கிடைத்தது. கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா 3-வது உலக கோப்பையை பெற்று தரும் வேட்கையில் உள்ளார்.

    இந்த போட்டித் தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தான் விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 9 'லீக்' ஆட்டத்திலும் எளிதில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் மட்டும் சற்று போராட வேண்டி இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    ஆலன்பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1987-ம் ஆண்டு முதல் தடவையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதை தொடர்ந்து 1999-ல் ஸ்டீவ் வாக் தலைமையில் 2-வது உலக கோப்பையை வென்றது. ரிக்கி பாண்டிங் தலைமையில் 2003, 2007-ல் உலக கோப்பை கிடைத்தது.

    2015-ம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா 5-வது உலக கோப்பையை கைப்பற்றியது. ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்ளும் வேட்கையில் கம்மின்ஸ் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், டிரெவிஸ் ஹெட் ஆகியோரும், பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டார்க், ஹாசல்வுட் கம்மின்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இறுதிப் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இந்த ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இறுதிப்போட்டியை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே அகமதாபாத் மைதானத்தில் குவிய தொடங்கினர். நாட்டின் பல்வேறு நகரத்தில் இருந்து போட்டியை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியும், இசைக் கருவிகளும் இருந்தன.

    டிக்கெட் கிடைக்காதா? என்ற ஏக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர்.

    இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை ஜோராக இருக்கிறது.

    ஒரு டிக்கெட் ரூ.1.87 லட்சத்துக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனையானது. ரூ.32 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ரூ.1.87 லட்சத்துக்கு விலை போனது.

    நாடு முழுவதும் கிரிக்கெட் இறுதிப் போட்டியை டெலிவிசனில் பார்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உலக கோப்பை கிரிக்கெட் ஜூரம் ஒட்டிக் கொண்டுள்ளது.

    • மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதய துடிப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் அபார வெற்றியை பெற்று இந்த உலக கோப்பை போட்டியில் அசைக்க முடியாத அணியாக திகழும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு களம் இறங்குகிறது.

    இந்திய அணியின் வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். சென்னையிலும் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய திரை அமைக்கப்பட்டு ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே 38 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் லேசர் ஷோ, விமான சாகசம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் ஆட்டத்தை காண்பதற்கும், வெற்றியை கொண்டாடுவதற்கும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் மெரினாவில் ரசிகர்கள் திரள்கின்றனர். பெண் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு திரண்டிருந்தனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளிலும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை மனதில் வைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக வெறித்தனமாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி நாடு முழுவதும் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஜூரம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவே காணப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள். இந்திய அணி கோப்பையை வென்று இந்திய மக்களின் மனதையும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

    • அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    • மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கிய இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் கடந்த 12-ந்தேதி முடிவடைந்தது.

    இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    மும்பையில் 15-ந்தேதி நடந்த முதல் அரைஇறுதியில் இந்திய அணி 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தின.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.

    உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்திய அணி 4-வது முறையாகவும், ஆஸ்திரேலியா 8-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளை யாடுகிறது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2-வது தடவையாக உலக கோப்பை 2011-ம் ஆண்டில் கிடைத்தது.

    தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி மிகவும் அபாரமாக ஆடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் தான் விளையாடிய 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

    இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    2003-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். ஆஸ்திரேலியா பலம் வாய்ந்தது என்பதால் கடுமையாக போராட வேண்டும். வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டத்தில் தோற்ற பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் இறுதிப் போட்டி என்பதால் கூடுதல் நெருக்கடி இருக்கும்.

    அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால் முகமது சிராஜ் அல்லது சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம். பேட்டிங்குக்கு முக்கியத்துவம் அளித்தால் சிராஜ் கழற்றி விடப்படுவார். ஒருவேளை இஷான் கிஷன் வாய்ப்பை பெற்றால் சூர்யகுமார் யாதவ் இடத்தில் தேர்வு பெறுவார்.

    ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் மாற்றம் இருக்குமா? என்பது முடிவு செய்யப்படும். இந்த தொடரின் 5-வது போட்டியில் இருந்து இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து வெற்றியை பெற்று வரும் அணியில் முக்கியமான இறுதி ஆட்டத்தில் மாற்றம் செய்ய கேப்டன் ரோகித் சர்மாவும் , பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விரும்ப மாட்டார்கள்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. டாப் 5 பேட்ஸ்மேன்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி 3 சதம், 5 அரைசதத்துடன் 711 ரன்னும், ரோகித் சர்மா 550 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), ஸ்ரேயாஸ் அய்யர் 526 ரன்னும் (2 சதம், 3 அரைசதம்), கே.எல். ராகுல் 386 ரன்னும் (1 சதம், 1 அரைசதம்), சுப்மன்கில் 4 அரை சதத்துடன் 350 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகித் சர்மா சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 28 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதேபோல ஸ்ரேயாஸ் அய்யர் 24 சிக்சர் அடித்துள்ளார்.

    பந்துவீச்சில் முகமது ஷமி முதுகெலும்பாக திகழ்கிறார். அரைஇறுதியில் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 6 ஆட்டத்தில் 23 விக்கெட் கைப்பற்றி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இறுதிப் போட்டியிலும் ஷமி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    பும்ரா 18 விக்கெட்டும், ஜடேஜா, 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 15 விக்கெட்டும், முகமது சிராஜ் 13 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    இந்திய அணியிடம் லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அந்த அணி பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இந்தியாவுக்கு சவாலாக விளங்குவார்கள்.

    ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 துறைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2 சதம், 2 அரை சதத்துடன் 52 8 ரன்னும், மிச்சேல் மார்சல் 2 சதம், 1 அரை சதத்துடன் 426 ரன்னும், லபுஷேன் 304 ரன்னும், ஸ்டீவ் சுமித் 298 ரன்னும் எடுத்துள்ளனர். மேக்ஸ்வெல் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து சாதித்தார். அவர் 398 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல டிரெவிஸ் ஹெட்டும் சிறந்த அதிரடி வீரர் ஆவார்.

    வேகப்பந்திலும், சுழற்பந்திலும் ஆஸ்திரேலியா சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்து வீரரான ஆடம் ஜம்பா 22 விக்கெட் வீழ்த்தி இந்திய போட்டித் தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்களான ஹாசல்வுட் 14 விக்கெட்டும், ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ் தலா 13 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதிரடி, விறுவிறுப்புடன் இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொடக்க ஆட்ட வீரராக களமிறங்க ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார்.
    • இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர்.

    இதில் ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, விராட் கோலி சதம் அடித்த 56 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதேபோல், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும், குல்தீப் யாதவ் 2 ரன்களிலும், முகமது சிராஜ் ஒரு ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    பிரசித் கிருஷ்ணா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.

    இதனால், ஆஸ்திரேலிய அணி விதித்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இருப்பினும், இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    ×