என் மலர்
நீங்கள் தேடியது "3rd ODI"
- முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வங்காளதேசம் தொடரை கைப்பற்றியது
- இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்.
சிட்டாகாங்:
வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.
காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர். சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா ? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- முதல் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து முன்னிலை.
- இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹேமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது இதனிடையே, கிறிஸ்ட்சர்ச் பகுதியில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.