search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா?: வங்காளதேச அணியுடன் இன்று 3வது ஒருநாள் போட்டி
    X

    இந்திய அணி வீரர்கள் 

    ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா?: வங்காளதேச அணியுடன் இன்று 3வது ஒருநாள் போட்டி

    • முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வங்காளதேசம் தொடரை கைப்பற்றியது
    • இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்.

    சிட்டாகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர். சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா ? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    Next Story
    ×