search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holidays"

    • காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் புத்தாண்டு முன்னிட்டு இன்று முதல் வருகிற 16-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் நாளை வரை சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, புதுக்்கோட்டை, கரூர், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோ ட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் தொடர் விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல வசதியாக 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது.
    • தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினை கொண்டு, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 31.12.2022ல் சொத்துவரி ரூ. 50.73 கோடி, காலியிட வரி ரூ. 1.75 கோடி, தொழில் வரி ரூ.2.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.11.84 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ.3.56 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 79.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 31.1.2023ல் சொத்துவரி ரூ. 66.47 கோடி, காலியிட வரி ரூ. 1.99 கோடி, தொழில் வரி ரூ.2.53 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.15.66 கோடி, வாடகை -குத்தகை இனங்கள் ரூ.3.66 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 101.83 கோடி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அதன்படி 16.2.2023ல் சொத்துவரி ரூ. 73.66 கோடி, காலியிட வரி ரூ. 2.12 கோடி, தொழில் வரி ரூ. 3.20 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.17.68 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ. 3.68 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 64 லட்சம் என மொத்தம் ரூ. 13.58 கோடி பொது மக்கள் கட்டணங்களாக செலுத்தியுள்ளனர்.

    மேற்கண்ட தகவலின்படி டிசம்பர் 2022 ல் 36.36 சதவீதமும், ஜனவரி 2023ல் 44.22 சதவீதமும் பிப்ரவரி 2023 நாளது வரை 47.96 சதவீதமும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்த.Use "Quick Payment" or "Register & Login" tohttps://tnurbanepay.tn.gov.in. மேலும்,அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையைெயாட்டி சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனையானது.
    • வழக்கமாக மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.5 கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த முறை ரூ.15 கோடி வரை விற்பனையாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும் அதிக அளவில் மதுபாட்டில்களும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று கடை விடுமுறை என்பதால் அதற்கு முன்பாக 2 நாட்கள் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. இதில் 14-ந் தேதி ரூ.5.5 கோடிக்கும், 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று ரூ.10.25 கோடிக்கும் என ரூ.15 .25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    வழக்கமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று அதிகாலை 12.01 முதல்இரவு 12 மணி வரை 50 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தது சென்றன.
    • 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது.

    விழுப்புரம்:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் தொடர்ந்து 4நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது .சென்னை தலைநகரில் வசிக்கும் அரசு,தனியார்நிறுவன அதிகாரிகள்,கூலித் தொழிலாளர்கள் ,கல்லுாரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தைபொங்கலை தங்களுடைய உறவுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று கார், பஸ், வேன், ஆட்டோ ,பைக் என தங்களதுவாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கினர் .விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நேற்று மாலை பொழுதில் இருந்து வாகனங்கள் அதிக அளவில்பயணிக்க ஆரம்பித்தன.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து சென்றன வாகன போக்குவரத்து அதிகரித்தால் டோல் பிளாசாவில் தென் மாவட்டங்களை நோக்கி 6 வழிகள் இருந்தது வாகன நெரிசல் அதிகமானதால் கூடுதலாக நான்கு வழிகள் திறக்கப்பட்டு மொத்தம் 10 வழிகள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டடு சென்றன. தற்பொழுது 98 சதவிகித வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெற்றுள்ளதால் டோல் பிளாசாவை விரைவாக கடந்து சென்றன. நேற்று அதிகாலை 12.01 முதல்இரவு 12 மணி வரை 50 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தது சென்றன. இது சராசரி போக்குவரத்தான 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது.நேற்றை விட இன்று போகி பண்டிகையன்றும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து தடங்கலின்றி செல்ல கண்காணித்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில்சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • கன மழை பெய்வதால் மாவட்டம் முழுவதம் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக தலைவாசல், தம்மம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் , சங்ககரி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    வாகன ஓட்டிகள்அவதி

    இந்த மழையால் இரு சக்கர வாகனங்களில் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். மேலும் சிலர் குடை பிடித்த படியும், மழை கோர்ட் அணிந்த படியும் சாலைகளில் சென்றனர்.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரி விடுமுறை

    கன மழை பெய்வதால் மாவட்டம் முழுவதம் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 13மி.மி.பதிவாகியுள்ளது வீரகனூரில் 9, தம்மம்பட்டி 7, கெங்கவள்ளி 6, பெத்தநாயக்கன்பாளையம் 4.5, சேலம் 4 ஆத்தூர் 4, ஏற்காடு 2.6, கரிய கோவில் 1 மி.மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    இதே போல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மோகனூர், திருச்செங்கோடு உள்பட பகுதிகளில் கன மழை பெய்தது.இன்று காலையும் நாமக்கல் நகர பகுதி, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி, கொல்லி மலை, ராசிபுரம் உள்பட பல பகுதகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதை அடுத்து மாணவர்கள் நலன் கருதி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 32 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல்லில 2, பரமத்தி வேலூரில் 3, ராசிபுரம் 1.2, சேர்ந்தமங்கலம் 3.2, திருச்செங்கோடு 15, கலெக்டர் அலுவலகப் பகுதி, கொல்லிமலை 4 மல்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 61.4.மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

    கொல்லி மலையில் தடை

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருவதால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிக ள்செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

    மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions
    சென்னை:

    மழைக்காலங்களில், மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்திற்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இந்த நிலையைப் போக்க மழைக்காலங்களில் விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. அதாவது, வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும், ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை.  கோவில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க  வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்  பிரதீப் யாதவ் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-



    மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.  மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும்.  மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.   

    விடுமுறை விடப்பட்டால் அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

    மழை காரணமாக  கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.

    திருவிழா போன்றவற்றிற்கு  உள்ளூர் விடுமுறை விடும்போது  ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.  

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions 
    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #HeavyRain
    காரைக்கால்:

    தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வந்தது.

    இன்று அதிகாலை காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடை விடாது கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேப்போல் திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. #HeavyRain
    புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews
    ×