search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன நெரிசல்"

    • தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு, ஐயப்ப சீசன் ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் பல்லாயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் குவிந்தனர்.

    இந்தியாவின் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்குவதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலையில் அக்னி தீர்த்த கடல் பக்தர்கள், பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலை சுற்றி உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. அங்கு வாகனங்கள் வரிசையில் நின்று உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் நகரின் சாலைகளிலும் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. சாலைகள் குறுகலாக இருப்பதால் போக்குவரத்தை சீர்செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி-அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். திட்டக்குடி, மேற்குவாசல், கிழக்கு வாசல், தெற்குவாசல் பகுதிகளில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள், பயணிகள் கோதண்டராமர் கோவில், ராமர் பாதம் ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர். பின்னர் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிக்கு சென்று சுற்றி பார்த்தனர். இதனால் அரிச்சல்முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் நகரில் உள்ள அப்துல்கலாம் வீடு, பேக்கரும்பில் உள்ள மணி மண்டபம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • நேற்று அதிகாலை 12.01 முதல்இரவு 12 மணி வரை 50 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தது சென்றன.
    • 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது.

    விழுப்புரம்:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் தொடர்ந்து 4நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது .சென்னை தலைநகரில் வசிக்கும் அரசு,தனியார்நிறுவன அதிகாரிகள்,கூலித் தொழிலாளர்கள் ,கல்லுாரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தைபொங்கலை தங்களுடைய உறவுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று கார், பஸ், வேன், ஆட்டோ ,பைக் என தங்களதுவாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கினர் .விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நேற்று மாலை பொழுதில் இருந்து வாகனங்கள் அதிக அளவில்பயணிக்க ஆரம்பித்தன.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து சென்றன வாகன போக்குவரத்து அதிகரித்தால் டோல் பிளாசாவில் தென் மாவட்டங்களை நோக்கி 6 வழிகள் இருந்தது வாகன நெரிசல் அதிகமானதால் கூடுதலாக நான்கு வழிகள் திறக்கப்பட்டு மொத்தம் 10 வழிகள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டடு சென்றன. தற்பொழுது 98 சதவிகித வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெற்றுள்ளதால் டோல் பிளாசாவை விரைவாக கடந்து சென்றன. நேற்று அதிகாலை 12.01 முதல்இரவு 12 மணி வரை 50 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தது சென்றன. இது சராசரி போக்குவரத்தான 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது.நேற்றை விட இன்று போகி பண்டிகையன்றும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து தடங்கலின்றி செல்ல கண்காணித்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில்சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது
    • மனோகரா பகுதியில்

    கரூர்:

    கரூர், மனோகரா கார்னரில் சிக்னல் பகுதியில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா கார்னர் பகுதியில் நான்கு வழிகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, திண்டுக்கல், தான்தோன்றிமலை, மணப்பாறை போன்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், பழைய திண்டுக்கல் சாலையில் செல்கின்றன. இதேபோல இந்த வழியாக ஏராளமான மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் சென்று வருகின்றன.

    நான்கு ரோடுகள் சந்திக்கும் மனோகரா கார்னரில் பஸ்கள், மினி பஸ்கள் விதி மீறி நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக் கடி ஏற்பட்டு வந்தது. இதனை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில், மனோகரா கார்னர் சந்திப்பு பகுதியின் எதிரே டிராபிக் ஏற்படாதவாறும் கூண்டு அமைக்கப்பட்டது. அதில், போலீசார் நின்று கண்காணித்து, விதி மீறும் பஸ்களை மைக் மூலம் எச்சரித்து, போக்கு வரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், டிராபிக் கூண்டில் போலீசார் இல்லாத சமயங்களில் பெரும்பாலான பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் அந்த நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மனோகரா கார்னர் பகுதியில் போக்குவரத்து போலீசார் முழு நேரமும் பணியிலிருக்குமாறும், அங்கு வாகன நெரிசல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதியில் சாலையின் இருபுறமும் கடைகள்ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதி நகரின் முதன்மை தெருவாகும். இந்த தெருவில் கடைகள், வங்கி உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. ராஜவீதி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நூலகம், பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் செல்லும் முதன்மை வழியாக உள்ளது.

    இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் முதல் செங்கம் பேரூராட்சி அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை அலுவலக நேரம் உள்பட அவ்வபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் பள்ளிப் பஸ், கல்லூரி பஸ்கள், சரக்கு வாகனங்கள் அடிக்கடி இந்த தெருவை பயன்படுத்தி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுபோன்ற சமயங்களில் சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகள் மற்றும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சார்பதிவாளர் அலுவலக சந்திப்பு முதல் ராஜவீதி பேரூராட்சி அலுவலகம் வரை சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி வாசிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு, காவல்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×