search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey"

    இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை இன்று மாலை சந்திக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsianGames2018 #hockey
    ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் மலேசியாவிடம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தது. பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

    இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் மலேசியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #hockey
    ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #AshianGames2018 #INDvsMALAYSIA
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரில், ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.

    லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 76 கோல்கள் அடித்து அசத்திய இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் இந்த முக்கிய போட்டியில் தவறுகள் அதிகம் நிறைந்ததாக இருந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 முறை முன்னிலை பெற்றாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    முதல் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது. 6-வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங்கும், கடைசி பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணி வீரர் வருண்குமாரும் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் பைசல் சாரி 39-வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முகமது ராஸி 58-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.


    வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமநிலை பெற்றதால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அளிக்கப்பட்ட 5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. 3 வாய்ப்புகளை கோட்டை விட்டன.

    மீண்டும் சமநிலை நீடித்ததால் வெற்றியை நிர்ணயிக்க ‘சடன் டெத்’ முறை அமல்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தொடர்ச்சியாக 4 பெனால்டி வாய்ப்புகளை அடுத்தடுத்து கோலாக மாற்றியதால் பரபரப்பு மேலும் எகிறியது. 5-வது வாய்ப்பை மலேசியா கோலாக்கி முன்னிலை பெற்றது. இதன் பிறகு இந்தியாவுக்குரிய 5-வது வாய்ப்பில் சுனில் பந்தை வெளியில் அடித்ததுடன், இந்திய அணியின் தோல்விக்கும் வித்திட்டார்.

    ‘ஷூட்-அவுட்’ முடிவில் இந்திய அணி 6-7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது. ஆசிய போட்டியில் வாகை சூடும் அணிக்கு அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு கிட்டும். அந்த பொன்னான வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல் கண்டது.

    நாளை நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

    பெண்கள் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 1982-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #AshianGames2018 #INDvsMALAYSIA
    கூவம் மற்றும் அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். #ChennaiCorporation

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை நகரத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம், சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களே என நீதி மன்ற ஆணைகளின்படி நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது.

    அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் என கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விரிவாக்கப்பட்ட பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக்கால்வாய்களில், 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiCorporation

    14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ‘டி’ பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது ஜப்பான். #WomenWorldCupHockey #Japan #NewZealand
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.

    இன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது.  #WomenWorldCupHockey #Japan #NewZealand
    இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்தை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. #India #NewZealand #hockey
    இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடியது. இந்திய அணியில் ரூபிந்தர்சிங் (8-வது நிமிடம்), சுரேந்தர் (15-வது நிமிடம்), மன்தீப்சிங் (44-வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது. #India #NewZealand #hockey 
    ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame

    புவனேஷ்வர்:

    இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் எழுதிய கடிதத்தில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற  நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறியப்படும் ஹாக்கி விளையாட்டு, தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.



    நீங்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகும் தகுதி உள்ளது. இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும். மேலும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் நவின் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame
    ×