என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hockey"
- இந்திய ஜூனியர் ஆக்கி வீரர்கள் 5 கோல்களை அடித்தனர்.
- இந்திய அணி நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஆக்கி போட்டி தொடர், மலேஷியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கேப்டன் உத்தம் சிங் தலைமையிலான இந்திய ஜூனியர் ஆக்கி அணி பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கேப்டன் உத்தம்சிங், ரோகித்,ஜான்சன்,பூர்டி, பாபி சிங் தாமி,அமந்தீப் லக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
பதிலுக்கு ஜப்பான் தரப்பில் இக்குமி சாகி ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய ஜூனியர் ஆக்கி அணி தனது நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.
- மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
- முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ராஜூ நினைவு அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி 3 நாட்கள் நடக்கிறது. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி, திண்டுக்கல் அணி, வாடிப்பட்டி உள்பட 11 அணிகள் மோதுகின்றன.
தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், கவுன்சிலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் ராஜா வரவேற்றார். எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளை சாமி, சரவணன், சந்திர மோகன், ராமசாமி, காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.
- 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது,
- சிறப்பான வெற்றியை பெற்று தந்த அனைத்து அனைத்து வீரர்களையும் பாராட்டினர்.
ஊட்டி
புதுடெல்லியில் உள்ள இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது,
இதன் இறுதி போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கிரெசென்ட் பள்ளி ஹாக்கி வீரர்கள் கலந்துகொண்டு 3 பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கிரெசென்ட் பள்ளி மாணவர்கள் 6-1 என்ற கோல் கணக்கில் பிருந்தாவன் பப்ளிக் பள்ளியையும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் கிரசன்ட் பள்ளி ஹோலி இன்னசென்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது.
17 வயதுக்குட்பட்ட பிரிவில் பிந்தவன் பப்ளிக் பள்ளியிடம் கிரசன்ட் பள்ளி 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தது.
தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்துகொண்டு பள்ளிக்கு சிறப்பான வெற்றியை பெற்று தந்த அனைத்து அனைத்து வீரர்களையும் பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் உமர்பாருக் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- காமன்வெல்த்தின் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது.
- இதில் நியூசிலாந்தை ஷூட் அவுட் முறையில் 2-1 என இந்தியா வீழ்த்தி வெண்கலம் வென்றது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மகளிருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி - நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இதில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.
இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது.
இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
- இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.
இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
#NatpeThunaiFromApril4 🤩🤟
— Hiphop Tamizha (@hiphoptamizha) March 25, 2019
See you all in theatres with your friends and family 🤜🤛#AvniMovies#SundarC#NatpeThunai@AvniGroups@thinkmusicindia@Screensceneofflpic.twitter.com/JsKA8Nk7oG
#NatpeThunai trailer from tomorrow 🤜🤛 This is gonna be fun 🤩🤟#HHT2#AvniMovies#SundarCpic.twitter.com/XUNjz9r43v
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 27, 2019
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் டேனிஷ் கலீம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் டெக்னிக்கல் கமிட்டியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் தாகீர் அகமது தர் அளித்த பேட்டியில், ‘கடந்த சில நாட்கள் எங்களுக்கு மிகவும் கடினமானதாக அமைந்துள்ளது. எங்களது அதிக சக்தியை விளையாட்டு தவிர வேறு விஷயங்களுக்காக வீணாக்கி கொண்டிருக்கிறோம். எங்கள் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சீனியர், கால்பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எந்தவித காரணமும் இல்லாமல் அணியின் துணை கேப்டனுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற தடையை எதிர்த்து முறையிட்டு இருக்கிறோம்.
தற்போது எங்களது உதவி பயிற்சியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய விசாரணையை சந்தித்து வருகிறோம். மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிந்ததும் சில குறிப்புகள் எழுதி அதனை மானேஜர் ஹசன் சர்தாரிடம் கொடுக்குமாறு உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீமை அனுப்பினேன். பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததால் அவர் அதனை கொடுக்க முடியாமல் திரும்பி வந்தார்.
எதிர்பாராதவிதமாக அவர் தன்னுடைய அடையாள அட்டையை மறந்து உடைமாற்றும் அறையில் வைத்து விட்டு சென்று விட்டார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் தரக்குறைவாக நடந்துள்ளனர்’ என்றார். இந்த சூழலில் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் நெதர்லாந்தை நாளை சந்திக்கிறது. #PakistanHockey #HockeyWorldCup2018
A Vertical Video Special of @hiphoptamizha 's Next Film - #NatpeThunai
— Think Music (@thinkmusicindia) November 4, 2018
Fans you can download this #ThinkVerticalStory from this link https://t.co/MH0be48RFM
@AvniGroups@khushsundar#SundarCpic.twitter.com/EfqWNq40TI
😊😊😊 from our family to your family 😊😊😊 Enjoy the first look video on Nov 4 at 12p.m 😊#SundarC#HHT2https://t.co/lebDum2QCl
— Hiphop Tamizha (@hiphoptamizha) October 31, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்