search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Polls"

    • தபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    • மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    அகமதாபாத்:

    182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு அமைதியான முறையில இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இன்றைய தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.24 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் காத்திருந்தவர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகமாக இருக்கும்.

    தபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள இந்த மாவட்டத்தில் வியாரா மற்றும் நிசார் ஆகிய தொகுதிகள் உள்ளன. நர்மதா மாவட்டத்தில் 68.09 சதவீத வாக்குகள் பதிவாகின. பாவ்நகரில் மிகக்குறைந்த அளவாக 51.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நர்மதா தவிர நவ்சாரி (65.91 சதவீதம்), தாங் (64.84 சதவீதம்), வல்சாத் (62.46 சதவீதம்) மற்றும கிர் சோம்நாத் (60.46 சதவீதம்) ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்தை தாண்டி வாக்கு பதிவாகி உள்ளது.

    முதற்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 8- ந்தேதி நடக்கிறது.

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது 

    • அகமதாபாத்தில் இருந்து தொடங்கிய பிரசார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைகிறது.
    • குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக களப்பணியாற்றி வருகிறது.

    அகமதாபாத்:

    குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை இன்று தொடங்கினார். வாகன பிரசாரத்தில் அவருடன் ஏராளமான நிர்வாகிகள் அணிவகுத்து செல்கின்றனர். மொத்தம் 16 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அகமதாபாத்தின் நரோதா காமில் இருந்து தொடங்கிய பிரசார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைகிறது. 3 மணி நேரத்தில் 50 கிமீ தூரம் சென்று பிரசாரம் செய்கிறார் மோடி. இந்த பிரசாரத்தின்போது வழியில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் நினைவிடங்களில் சிறிது நேரம் வாகனம் நிறுத்தப்பட்டு, பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2017 சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது. இந்த முறை, 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், 140 இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது.

    டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

    • குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    அகமதாபாத்:

    182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சூரத் நகரில் பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.

    காங்கிரசுக்காக சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    • பா.ஜ.க. மந்திரி ஜெய்நாராயண் வியாஸ் இம்மாத தொடக்கத்தில் தனது பதவியை ராஜினமா செய்தார்.
    • பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர்.

    இதற்கிடையே, குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார்.

    அடுத்த மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாஜக தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாக மணீஷ் சிசோடியா விமர்சனம்
    • ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகியிருப்பதாக பாஜக கூறியுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறி உள்ளது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

    என்னை யாரும் கட்டாயப்படுத்தியதால் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. நானாக முன்வந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நான் பிரசாரம் செய்யும்போது, தேசவிரோத மற்றும் குஜராத்திற்கு எதிரான கட்சியின் வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்டார்கள். நானும் யோசித்துப் பார்த்தேன். என் உள் மனம் சொல்வதை கேட்டேன். எந்த அழுத்தமும் இன்றி வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளேன். அப்படிப்பட்ட கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேட்பாளரை பாஜக கடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி அழுத்தமாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வேறு மாதிரியாக கூறியிருக்கிறார். அவர் தனது சொந்த கட்சியையே வசை பாடியது, இந்த விஷயத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    • பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் மணீஷ் சிசோடியா விமர்சனம்

    அகமதாபாத்;

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    இந்நிலையில், தங்கள் வேட்பாளர்களில் ஒருவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் புகார் கூறி உள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா பாஜகவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், காவல்துறையினரால் தேர்தல் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்துள்ளது.

    வேட்பாளரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரது வீடு பூட்டி கிடக்கிறது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஜரிவாலாவை இழுத்து வந்து அவரது வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதாக கூறி ஒரு வீடியோவை ஆம் ஆத்மி கட்சித் தலைவரான ராகவ் சத்தா, வெளியிட்டார். காவல்துறையும் பாஜக குண்டர்களும் சேர்ந்து, எங்கள் சூரத் கிழக்கு வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, வேட்புமனுவை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதைப் பாருங்கள்... 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்' என்ற வார்த்தை ஜோக் ஆகிவிட்டது என அவர் ட்வீட் செய்துள்ளார்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    • கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
    • ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கிராம மக்கள் சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை' என எழுதப்பட்டுள்ளது.

    இங்குள்ள அஞ்செலி ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் படிப்பில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலும் அவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு தாமதமாகிறது. இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

    • இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    • குஜராத் தேர்தலுக்காக சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை பாஜக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பா.ஜ.க. மீண்டும் சி.ஏ.ஏ.வை பற்றி பேசுகிறது.

    நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பா.ஜ.க. யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது. மேற்கு வங்காளத்தைப் பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க. பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. பா.ஜ.க. பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசி கைது செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி சொந்த மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    அகமதாபாத்:

    பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இதற்கிடையே, முன்னாள் மந்திரியான ஜெய் நாராயண் வியாஸ் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரான ஹிமான்ஷு வியாஸ் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

    • நாளை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • மாலையில் பாவ் நகரில் நடைபெறும் வெகுஜன திருமண விழாவில் பங்கேற்கிறார்.

    அகமதாபாத்:

    பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், வல்சாத் மாவட்டத்தில் நாளை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதன்பின்னர், மாலையில் பாவ் நகரில் நடைபெறும் வெகுஜன திருமண விழாவிலும் பங்கேற்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இத்தகவலை பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தவே தெரிவித்துள்ளார்.

    • 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதி
    • டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.

    சூரத்:

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்ததும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். டிசம்பர் 2021 வரையிலான நிலுவையில் உள்ள மின் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

    கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்திருக்கிறது. அவர்களிடம் புதிய யோசனைகள் இல்லை. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாத பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்த தேர்தல் அறிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். எனவே, எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தமுறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

    ×