என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
குஜராத்தில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் 18 கிராமங்கள்: காரணம் இதுதான்..!
- கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
- ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கிராம மக்கள் சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை' என எழுதப்பட்டுள்ளது.
இங்குள்ள அஞ்செலி ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் படிப்பில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலும் அவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு தாமதமாகிறது. இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்