search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் தேர்தல் - பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்
    X

    காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் மந்திரி

    குஜராத் தேர்தல் - பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்

    • பா.ஜ.க. மந்திரி ஜெய்நாராயண் வியாஸ் இம்மாத தொடக்கத்தில் தனது பதவியை ராஜினமா செய்தார்.
    • பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர்.

    இதற்கிடையே, குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார்.

    அடுத்த மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×