search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் சட்டசபை தேர்தல் - 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது
    X

    குஜராத் சட்டசபை தேர்தல் - 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது

    • குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    அகமதாபாத்:

    182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சூரத் நகரில் பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.

    காங்கிரசுக்காக சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×