search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gst tax"

    • ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இந்த வரியை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதே போல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை முதல்வர் திரும்ப பெற வேண்டும். குப்பை வரி, தொழில்வரி என வரிகளை பிரித்து போடாமல், ஒரே வரியாக வசூலித்து லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைக்கு மேல் சாலை போடுவதால் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் தாழ்வாக சென்று விடுகின்றன. இதனால் மழைக் காலங்களில் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய வேண்டும்.

    தமிழக டி.ஜி.பி. அறிவித்துள்ளபடி மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றன.

    சாமானிய வியாபாரிகள் அப்படி விற்க முடியாது. அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மாவட்ட கவுரவத் தலைவர் ஜபருல்லாகான், மாவட்ட துணைத் தலைவர் ராசி போஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி உள்படட ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

    ஜிஎஸ்டி வரி - பண மதிப்பிழப்பால் கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள் என்று சீமான் பேசியுள்ளார். #seeman #pmmodi #gst

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இந்த தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் பா.ஜனதா- அ.தி.மு.க. ஆகியவற்றின் பின்னால் ஒரு அணி. மற்றொரு பக்கம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் பின்னால் ஒரு அணி.

    தமிழ்நாட்டில் ஒரே ஒரு கட்சி பெரிய கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தனித்து நிற்கிறது. துணிந்து நிற்கிறது. உண்மையும் நேர்மையும் ஆக மக்களை அணுகுகிறது. மது, பணம், உணவு கொடுக்காமல் தன்னெழுச்சியாக மக்கள் தானாக திரண்டு கூடுகிறார்கள் என்றால் தமிழர் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். இது உண்மையிலேயே மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி.

    பா.ஜனதா அது ஒரு மதவாத கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கூட்டணியான தி.மு.க. கூறுகிறது. இதே தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பதவி அனுபவித்து இருக்கிறது. அப்போது அது மதவாதம் அல்ல மிதவாதம். 5 ஆண்டு காலத்தில் செய்யாததை இந்த பா.ஜனதா அடுத்த ஆட்சி காலத்தில் செய்யப்போகிறதா? பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த வரியால் பல கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள். இனிப்பு வார்த்தைகளை கூறி ஏமாற்றுகிறார்கள்.

    நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. உங்கள் உரிமைக்காக பேசுகிறோம். இந்த தேர்தலை ஒரு தேர்தலாக பார்க்காமல் ஒரு மாறுதலாக பார்த்து, இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை தாருங்கள். உழவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற முழக்கத்தோடு நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். எனவே நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சீமான் பேசினார். #seeman #pmmodi #gst

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #kanimozhi #gsttax

    ஓட்டப்பிடாரம்:

    பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி.கவுன்சிலிங் கூடுவதால் வரிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. 124 நாடுகளில் ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ளது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரிவிகிதம் குறைக்கப்படும். நடைமுறைக்கு சாத்திய மில்லாதவற்றை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசுகிறார். 

    தூத்துக்குடியை பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மேலும் வளர்ச்சி பெற புதிய திட்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். ராஜ்யசபாவில் இதுவரை தூத்துக்குடியை பற்றி பேசாத கனிமொழிக்கு திடீர் அக்கறை ஏன்? அரசியலில் எனக்கு பயமே கிடையாது.

    நாங்கள் சொன்னதை செய்வோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். எங்களது கனவு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #kanimozhi #gsttax

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் வரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #Congress #RahulGandhi

    சென்னை:

    காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் இருந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். அங்கு மாணவிகள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஜீன்ஸ்பேண்ட், டி-சர்ட்டுடன் இளமை தோற்றத்தில் வந்த ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாடினார். “சேஞ்ச் மேக்கர்ஸ்” என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது:-

    இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் குறைந்த அளவிலேயே செலவிடுகிறது.

    நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். சவால்களை மேற்கொள்ளும் வகையில் கல்வி தரம் உயர வேண்டும்.

    வட இந்தியாவை விட தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் பெண்களை சிறப்பாக நடத்துகிறார்கள்.

    பெண்கள் இரண்டாம் நிலை என்று கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வரப்படும். அது ஒரே வரியாக இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும்.

    பா.ஜனதா கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிரவ் மோடிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியது. அவர் எத்தனை பேருக்கு வேலை தந்தார். நிரவ் மோடி, விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி மக்கள் பணத்தை திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    குறிப்பிட்ட சிலரை மட்டும் (ராபர்ட் வதேரா) விசாரணை வளையத்துக்கு கொண்டு வருவது ஏன்? யார் மீது வேண்டுமானாலும் விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    அனில் அம்பானியின் நிறுவனம் விமானங்களை தயாரித்தது கிடையாது. எந்த அடிப்படையில் எச்.சி.எல். நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் மறுக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும்.

    காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கொள்கை தவறாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாத தாக்குதல் குறைவாக இருந்தது.

    புல்வாமா தாக்குதலை தடுக்க அரசு தவறி விட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தாக்குதலை முன் கூட்டியே தடுக்காதது ஏன்?

    காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களுடன் பழக வைப்பதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காஷ்மீரில் இந்திய பிரதமரை நேசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டாலும் காஷ்மீர் மக்களை நேசிக்கவும் வேண்டும்.

    பஞ்சாயத்து ராஜ் மூலம் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். அங்கு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்க முடியும்.

    நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    எனது தாயார் சோனியா காந்தியிடம் இருந்து நான் அனைத்தும் கற்றுக் கொண்டேன்.

    காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒரு மாநில மக்கள் மற்ற மாநில மக்களை நினைத்து சண்டை போடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi

    பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைவதால் சிமெண்டு மற்றும் கார், ஏசி விலை இறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. #GST

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது.

    அதன்படி பலமுனை வரிகள் நீக்கப்பட்டு, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்காக வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. அரசு மேற் கொண்ட இந்த மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. அதே சமயத்தில் மத்திய அரசுக்கு வரி வருவாய் கணிசமான அளவுக்கு அதிகரித்தது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவில் 65 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்தும் பட்டியலில் இருந்தன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு மேலும் 55 லட்சம் நிறுவனங்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் தற்போது வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் சுமார் 4 கோடியில் இருந்து சுமார் 7 கோடியாக அதிகரித்தது. இத்தகைய காரணங்களால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதத்தை மத்திய அரசு அடுத்தடுத்து குறைத்தது.

    பொதுமக்கள், தொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மிக முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு 5 சதவீதம், 12 சதவீதம் என்ற வரி திட்டத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 320 பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டது.

    அந்த 320 பொருட்களில் 191 பொருட்கள் மீதான வரி விதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீத வரி விதிப்பு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருந்தன.

    அதில் 191 பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டதால் 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் 35 பொருட்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகும் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. வரி வருவாயில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. மாதம் தோறும் மத்திய அரசுக்கு சராசரியாக 1 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. மூலம் நிரந்தர வருவாயாக கிடைக்கிறது.


    இந்த நிலையில் 28 சதவீதம் வரி விதிப்பு பட்டியலில் இருந்து மேலும் பல பொருட்களை நீக்கி, மக்களுக்கு சலுகைகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மும்பையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மிக எளிதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கமாகும். அதன்படி 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் உள்ள பல பொருட்களின் மீதான வரி விதிப்பு 18 சதவீதம் அல்லது அதற்கு கீழான பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    மத்திய அரசின் உத்தரவின் பேரில் வருகிற 22-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அன்று 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருக்கும் பொருட்களில் 25 முதல் 30 பொருட்களின் மீதான வரி 18 அல்லது அதற்கும் குறைவான சதவீத வரி விதிப்பு பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். அந்த 30 பொருட்கள் என்னென்ன என்பது 22-ந்தேதி தெரிய வரும்.

    அனேகமாக சிமெண்ட், கிரானைட், மார்பிள், டயர்கள், ஏ.சி. எந்திரங்கள், டிஷ்வாசர், இரு சக்கர வாகனங்கள், டிஜிட்டல் கேமிராக்கள், டிஜிட்டல் ரிக்கார்டுகள், வீடியோ கேம்ஸ் கருவிகள், குளிர் பானங்கள், கார் உதிரிப் பாகங்கள் மீதான 28 சதவீத வரியில் சலுகைகள் அளிக்கப்பட்டு 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிப்பு பட்டியலுக்குள் வந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வரிச் சலுகையால் 30 பொருட்களின் விலை மளமளவென குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த நடவடிக்கைக்குப் பிறகு அதிகபட்ச 28 சதவீத வரி விதிப்புப் பிரிவில் 5 அல்லது 7 பொருட்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புகையிலை சார்ந்த பொருட்கள், அதிநவீன சொகுசு கார்கள், விமானங்கள், வெளிநாட்டு மதுபான வகைகள், சுற்றுலா கப்பல்கள், துப்பாக்கிகள் போன்றவை மட்டுமே இனி 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருக்கும். ஜி.எஸ்.டி. வரி முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருந்தன. தற்போது சுமார் 200 பொருட்கள் மீதான வரி விதிப்பு முறை மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 99 சதவீத பொருட்களின் விலை குறையும். சிமெண்ட் மீதான 28 சதவீத வரி விதிப்பை 18 சதவீதமாக மாற்றும் போது மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் சுமார் 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். என்றாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இழப்பை ஏற்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

    28 சதவீத வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றம் நடுத்தர பிரிவு மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக பெறப்படும் பிரதிகளுக்கான விலையில் 36 ரூபாய்க்கு 7 ரூபாய் ஜி.எஸ்.டி. வரி சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. #GSTforRTI
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான அஜய் துபே என்பவர் அம்மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை முகமை அலுவலக கட்டுமானப்பணிகளுக்கு ஆன செலவினங்களின் மொத்த தொகை எவ்வளவு? என்பதை அறிந்துகொள்ள விரும்பி, தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக இதற்காக மனு செய்தார்.

    அவருக்கான பதிலாக 18 பக்கங்களை கொண்ட செலவு கணக்கு அளிக்கப்பட்டது. இதற்காக ஒரு பக்கத்துக்கான ஜெராக்ஸ் கட்டணமாக 2 ரூபாய் என்ற விகிதத்தில் 18 பக்கங்களுக்கு 36 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டது.

    மேலும், இந்த 36 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 50 காசுகளும் சேர்த்து மொத்தம் 43 ரூபாய் செலுத்த வேண்டும் என அம்மாநில தகவல் அறியும் உரிமை ஆணையாளர் அலுவகம் தெரிவித்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுநன்மைக்காக தகவல் அறியும் சட்டம் மூலம் சில விபரங்களை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக மேலிடத்தில் முறையீடு செய்யப்போவதாக மனுதாரரான அஜய் துபே குறிப்பிட்டுள்ளார். #GSTforRTI #GSTforinformation
    தமிழக அரசின் கோரிக்கை படி ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைத்து வருவதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். #TNMinister #OSManian #GST
    கோவை:

    தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    கே- கருணாநிதி உடல் நலம் குன்றி இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் அனுதாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறதே?

    ப-கருணாநிதியை பொறுத்தவரை 100 ஆண்டுகள் வாழும் தலைவர். அவர் 50 ஆண்டு காலம் அரசியல் தலைவராக இருந்துள்ளார். பல முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார்.

    அவர் உடல் நலம் குன்றி இருப்பதற்கும் அரசியலுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவரவர் கட்சிக்கும் அவரவர் கொள்கை உள்ளது. மக்கள் அதனை தான் பார்ப்பார்கள்.

    கே-கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்களே?

    ப- துறை சார்ந்த பூங்கா எதுவாக இருந்தாலும் அதனை அமைக்க யாரும் போராட வேண்டி அவசியம் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் பூங்கா அமைக்க தயார். தேவைக்கு ஏற்ப பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் முன் வந்தால் விதிகளை பின்பற்றி பூங்கா அமைக்க நாங்கள் தயார்.

    மத்திய அரசு 40 சதவீதம் அல்லது 40 கோடி இதில் எது குறைவோ அதனை அளிக்க தயாராக உள்ளது. மாநில அரசு 9 சதவீதம் அல்லது 9 கோடி இதில் எது குறைவோ அதனை கொடுக்க தயாராக உள்ளது.

    தொழில் முனைவோர்கள் 50 சதவீதம் நிதி அல்லது வங்கியில் கடன் பெற்று தந்தால் எந்தவொரு பூங்காவையும் எந்த இடத்திலும் அமைத்து தர அரசு தயாராக உள்ளது.

    கே- விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கூலி நிர்ணயம் தொடர்பாக பிரச்சனை உள்ளதே?

    ப- இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைத்து பேசி சமாதான முடிவு ஏற்படுத்தி தருகிறார்கள். இது தான் நடைமுறையில் உள்ளது.

    இந்த பேச்சு வார்த்தையில் தாமதம் ஆனாலோ அல்லது கருத்தொற்றுமை ஏற்படாமல் போனாலோ அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    விசைத்தறி நெசவாளர்களுக்கு எதிர்பாராத அளவு பல்வேறு உதவிகள், நன்மைகளை அரசு கொண்டு வந்துள்ளது.

    பல ஆண்டு பழமை மாறாமல் புதுமைகளை புகுத்தி இளைஞர்களிடம் வரவேற்பு பெரும் நிலையில் உற்பத்தியை இந்த அரசு செய்து வருகிறது.

    தமிழ்நாடு டெக்ஸ் 2019 என்ற வகையில் உலக வர்த்தக நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் நுகர்வோர்கள் அதிகம் உள்ளனர். ஜி.எஸ்.டி வரியை பொறுத்தவரை எந்தெந்த பொருட்களுக்கு குறைக்க வேண்டும். எந்தெந்த பொருட்களுக்கு நீக்க வேண்டும் என ஓங்கி குரல் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    தமிழகம் வைக்கும் கோரிக்கை படி மத்திய அரசு குறைத்து வருகிறது. கைத்தறி உற்பத்தியை பொறுத்தவரை 5 சதவீதம் வரி உள்ளது. அதனை நீக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. இது நிறைவேறும் என நம்புகிறோம்.

    தமிழக முதல்-அமைச்சர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்த படி கோவை கொடிசியாவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உலக அளவிலான ஜவுளி கண்காட்சி நடத்துவது இதுவே முதல் முறையாகும். வருகிற பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இந்த கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை கேட்க கோவையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கண்காட்சியில் நுகர்வோர் உள்பட பல்வேறு உலக நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். #TNMinister #OSManian #GST
    ஜி.எஸ்.டி. வரியால் பிரம்பு தொழில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். #GST

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பிரம்பு மூலம் கைவினை பொருட்கள் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர். பிரம்பு மூலம் இங்கு ஊஞ்சல், சோபாசெட், குழந்தைகளுக்கான ஊஞ்சல் மற்றும் நாற்காலிகள், டைனிங் டேபிள், கட்டில், அலமாரி, பீரோ, அரிசி கூடை, அர்ச்சனை கூடை, பழ கூடை, அலங்காரகூடை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்கள் அணிந்து கொள்ளும் தொப்பி ஆகியவைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதற்கான பிரம்புகளை அஸ்ஸாம், அந்தமான், மலேசியா ஆகிய பகுதிகளிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் வாங்குகின்றனர் . தைக்கால் கிராமத்தில்மட்டும் 60 பிரம்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரம்பு பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

    மூங்கில்பிரம்பு, அந்தமான்பிரம்பு, ரைடான், ஜாதி என்ற 4 வகை பிரம்புகளை பயன்படுத்தி கைவினை பொருட்களை செய்கின்றனர். ரைடான் வகை பிரம்பு மிகவும் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

    இங்கு செய்யப்படுகின்ற பிரம்பு பொருட்கள் கோவை, சென்னை வேலூர், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தைக்காலில் உள்ள அனைத்து கடைகளில் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து பிரம்பு தொழிலில் காலம் காலமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இத்தொழிலை வைத்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடிசைத்தொழிலாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பிரம்பு தொழில் ஆடம்பர பொருள்கள் தயாரிக்கும் தொழிலில் சேர்க்கப்பட்டு ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுவதால் பிரம்புகளின் விலை அதிகமாகி விட்டது. இதனால் இத்தொழில் மூலம் போதிய லாபம் கிடைக்கவில்லை என்கின்றனர்.

    இதுபற்றி ஜாமாலுதீன் என்பவர் கூறுகையில், தைக்காலில் பிரம்புதொழிலில் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் இத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒருமாதத்திற்கு 15 நாள் முதல் 20 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இத்தொழிலை வைத்து தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது. இத்தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. குடிசைத் தொழிலாக இருந்த இத்தொழிலை அரசு ஆடம்பரபொருட்கள் தயாரிக்கும் தொழிலாக அறிவித்து ஜி.ஸ்.டி. வரியும் விதித்துள்ளதால் பிரம்புகளின் விலையும் அதிகரித்துள்ளது.

    இதனால் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்து தற்போது போதிய லாபம் கிடைக்கவில்லை என்றார். மற்றொரு தொழிலாளர் குறள்தாசன் கூறுகையில், இது வரை பிரம்பு தொழிலுக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை வங்கி கடன் கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் வங்கி கடன் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே அரசு பிரம்பு தொழிலுக்கு இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும். மேலும் ஆடம்பரத்தொழிலை மாற்றி குடிசைத் தொழிலாக மாற்றவும், வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

    ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஆரணி:

    ஆரணி அருணகிரி சத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும். 1 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும்.

    ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ.) அளிக்கப்படும். 1, 6, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து பாடம் நடத்தும் முறை கொண்டுவரப்படும். மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டில் கொண்டுவரப்படும் புதிய பாடத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்.

    அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கழிவறைகள் சுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு பின்னர் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் பொருட்களின் எடை, எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. #GST
    சென்னை:

    மத்திய-மாநில அரசுகள் பொருட்களுக்கு பல்வேறு வகையான மறைமுக வரிகளை விதித்து வந்தன. இதற்கு மாற்றாக ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி’ என்ற முழக்கத்தை முன்வைத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது.

    1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் ஜி.எஸ்.டி.க்கான விதையை உருவாக்கினார். அதனை தற்போது பிரதமர் நரேந்திர மோடி விதைத்துள்ளார்.



    அதன்படி, ஜி.எஸ்.டி. 0 சதவீதம் (வரி விலக்கு), 3 சதவீதம், 5 சதவீதம், 17 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என பொருட்களின் தன்மைக்கு ஏற்ப 6 நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே குறைவான வரி விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பொருட்கள் அதிக வரி விதிப்பிலும், அதிக வரி விதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் குறைவான வரி விதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    அதன்படி, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிராம் எடையுடைய சோப்பு, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர் ரூ.30 ஆக அதிகரித்துள்ளது.

    இதேபோல அரை கிலோ சோப்பு தூள் ரூ.93-ல் இருந்து ரூ.95 ஆகவும், தேங்காய் எண்ணெய் 250 மி.லி. ரூ.83-ல் இருந்து ரூ.105 ஆகவும் அதிகரித்துள்ளது.

    துணிகளை துவைத்த பின்னர் வாசனைக்காக சேர்க்கப்படும் சோப்பு நுரை 800 மி.லி. ரூ.205-ல் இருந்து ரூ.225 ஆகவும், டீத்தூள் ¼ கிலோ ரூ.135-ல் இருந்து ரூ.138 ஆகவும், தலை முடிக்கு போடும் ஷாம்பூ 7 மி.லி. ரூ.3-ல் இருந்து ரூ.4 ஆகவும், 5.6 கிராம் எடையுடைய சிகைக்காய் பாக்கெட் ரூ.3-ல் இருந்து ரூ.4 ஆகவும், தேன் 50 மி.லி. ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், தலைக்கு தேய்க்கும் தைலம் 55 மி.லி. ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

    முகத்துக்கு பூசப்படும் பவுடர் 100 கிராம் ரூ.63-ல் இருந்து ரூ.76 ஆகவும், பேரீச்சம் பழம் 200 கிராம் ரூ.39-ல் இருந்து ரூ.42 ஆகவும், கடிகாரத்துக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி ஒன்று 13 ரூபாய் 50 காசில் இருந்து ரூ.15 ஆகவும், 20 கிராம் எடையுடைய சாக்கலேட் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும், ஜாம் 500 கிராம் ரூ.120-ல் இருந்து ரூ.135 ஆகவும், தலை முடிக்கு தேய்க்கும் ‘டை’ 15 மி.லி. ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும், ஊறுகாய் 300 மி.லி. ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆகவும், 100 கிராம் ‘டூத்பேஸ்ட்’ (பற்பசை) ரூ.45-ல் இருந்து ரூ.49 ஆகவும் அதிகரித்துள்ளது.

    கற்பூரம் (சிறியது) ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்டது, ரூ.2 ஆக அதிகரித்துள்ளது.

    பிஸ்கட் வகைகளில் விலையை அதிகரிக்காமல் அதன் எடை அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஊதுபத்திகளிலும் விலையை அதிகரிக்காமல், அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஜி.எஸ்.டி.க்கு பின்னர் பல பொருட்களின் எடை, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.15 ஆயிரத்து 525-க்கு விற்பனை செய்யப்பட்ட பிரிட்ஜ் ரூ.17 ஆயிரத்து 100 ஆகவும், வாஷிங் மெசின் விலை ரூ.16 ஆயிரத்து 225-லிருந்து, ரூ.18 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை போன்ற நிலை வியாபாரிகளுக்கும் ஏற்படலாம் என்றும் கவலை தெரிவித்தனர். இதனால் ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெறவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். #GST

    28 சதவீதம் வரி விதிக்கப்படும் 50 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விரைவில் குறைக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னையில் ஓராண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் தலைமை தாங்கினார்.

    விழாவை மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்திய போது, அனைத்து பொருட்களின் விலை உயரும், பொருட்களை தயாரிக்கும் மாநிலங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும், பாமரமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருட்களின் விலை பலமடங்கு உயரும் என பலவிதமான பிரசாரங்கள் நடந்தன.

    அவற்றை பொய்யாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வரி ஏற்றத்தாழ்வை சரி செய்தன. 200 பொருட்களுக்கு, 28 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பல முறை நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலில், பல பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாகவும், பல பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டன.

    சாதாரண வணிகர்களும் தங்களது கணக்குகளை எளிமையான முறையில் தாக்கல் செய்ய முடிந்தது. இதன் மூலம் அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் முந்தைய ஆண்டுகளை விட ஓராண்டில் கூடுதலாக கிடைத்துள்ளது. வரி வசூலிக்கும் போது நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் வரி செலுத்துவோர்கள் தானாக முன்வந்து வரி செலுத்துவார்கள். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சரக்குகளை கொண்டு செல்ல பதிவு செய்யும் இ-வே பில் குறித்து சரக்குகளை கொண்டு செல்வோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதுவரை 27 தடவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. இதில், பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் 50 பொருட்களின் மீதான வரி விரைவில் அதாவது சில வாரங்களில் குறைக்கப்படும். பிற நாடுகளை விட, நம் நாட்டு ஜி.எஸ்.டி. முறை பெரும் சாதனை படைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை வெற்றிகரமாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தமிழகத்திலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்கு பின் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதில் தமிழகமும் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. அத்துடன் மத்திய அரசிடமிருந்தும் குறைவான இழப்பீடையே பெறுகிறது’ என்றார்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்து 9 மாதங்களில், 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வருவாய் அளிக்கும் பொருட்கள். எனவே அவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர முடியாது. அதே சமயம் மத்திய அரசு இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி இழப்பு 3 சதவீதம் தான். வரும் ஆண்டுகளில் இதுவும் முற்றிலுமாக குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

    இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புதுச்சேரி மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் அஜித்குமார், தமிழக வணிக வரித்துறை ஆணையர் டி.வி.சோமநாதன், வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் கே.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜி.எஸ்.டி. ஆணையர் ராஜேஷ் சோடியா வரவேற்றார். இணை ஆணையர் மானச கங்கோத்ரி கட்டா நன்றி கூறினார்.

    ஜி.எஸ்.டியால் அதிக வரி வருவாய் கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #GST #GSTDay

    புதுடெல்லி:

    இந்தியாவில் இதற்கு முன்பு உற்பத்தி பொருள் மற்றும் விற்பனை செய்யும் பொருட்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தனித்தனியாக வரி விகிதங்களை வைத்திருந்தன.

    அதை நாடு முழுவதும் ஒரே வரியாக்கி சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டு வரப்பட்டது.

    ஜி.எஸ்.டி. வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இன்றுடன் இந்த வரி முறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகிறது.

    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட போது, 4 விகிதங்களில் வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி 28 சதவீதம், 18 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என 4 அளவீடுகளில் வரி விதிக்கப்பட்டது.

    இவற்றில் சில பொருட்களுக்கு வரிகளை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதால் சுமார் 320 பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.

    ஜி.எஸ்.டி. மூலம் ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி வருமானம் வரும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தனர். ஆனால், அதை விட அதிகமாகவே வருவாய் வந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டு முடிவில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.

    எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் ரூ.94 ஆயிரத்து 63 கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.93 ஆயிரத்து 590 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.93 ஆயிரத்து 29 கோடியும், அக்டோபர் மாதம் ரூ.95 ஆயிரத்து 132 கோடியும், நவம்பர் மாதம் ரூ.85 ஆயிரத்து 931 கோடியும், டிசம்பர் மாதம் ரூ.83 ஆயிரத்து 716 கோடியும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 929 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 47 கோடியும், மார்ச் மாதம் ரூ.89 ஆயிரத்து 264 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடியும், மே மாதம் ரூ.94 ஆயிரத்து 16 கோடியும், வசூல் ஆகி உள்ளன.

    அதாவது ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்ததை விட அதிக வரி வசூல் கிடைத்துள்ளது.

    அதிக வரி கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது சம்பந்தமாக மத்திய நிதித்துறை பொறுப்பு மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறும் போது, வரி வருவாய் அதிகரிக்கும் போது, அந்த வருவாய் நுகர்வோருக்கு சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தப்படும்.

    அதிக வருவாய் கிடைக்கும் போது மத்திய பட்ஜெட்டில் பற்றாக்குறை குறையும். எனவே, அவை அடிப்படை கட்டுமானங்களுக்கு செலவிடப்படும். மேலும் வரி வருவாய் விகிதங்களை குறைப்பதற்கும் அது வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

    இப்போது வரி வருவாய் எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிகமாக வந்திருப்பதால் வரியை குறைக்க உள்ளனர்.

    குறிப்பாக 28 சதவீதம் வரை வரி உள்ள பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     


    கட்டுமான பொருட்களான சிமெண்டு, பெயிண்டு உள்ளிட்டவைகளுக்கு வரி குறைப்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இன்னும் 11 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மக்களை கவரும் வகையில் இந்த வரி குறைப்பு இருக்கும்.

    விரைவில் நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடை பெறும். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிய வந்துள்ளது.

    ஏற்கனவே மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி சில பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி இருந்தார். இப்போது வரி வருவாய் அதிகமாக இருப்பதால் அதற்கான சாத்தியம் உருவாகி உள்ளது.

    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

    குறிப்பாக கார், புகையிலை பொருள், குளிர்பானங்கள் உள்ளிட்ட லக்சரி பொருட்களுக்கு 28 சதவீதம் வரி இருப்பதை சற்று குறைக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.

    சீரான வரி விகிதம் இவற்றில் இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை சொல்லி இருக்கிறார். எனவே, அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களின் வரி குறைய வாய்ப்பு உள்ளது.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறும்போது, மக்கள் எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் வருவாய் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கு வரி குறைப்பு செய்ய முடியும் என்று கூறினார்.

    ஜி.எஸ்.டி. வரி வருவாய் அதிகரித்து இருப்பது குறித்து ஜி.எஸ்.டி. சேர்மன் அஜய்பூ‌ஷன் பாண்டே கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி திட்டம் செயல்பாடுகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து உள்ளது. அதன் நடைமுறைகள் சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் அதிகரித்து வருகிறது.

    மாதத்துக்கு சராசரியாக ரூ.90 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் 1 கோடி கணக்கு தாக்கல்கள் நடைபெறுகின்றன. இதுவரை 12 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 380 கோடி கணக்கு வழக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன.

    ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலில் இருந்த பிழைகள் இப்போது குறைந்து வருகிறது.

    இதுவரை 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 693 பேர் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்ந்து பதிவு செய்துள்ளனர். இது, ஏற்கனவே வரி செலுத்துவோர் எண்ணிக்கையை விட 48 லட்சத்து 38 ஆயிரத்து 726 அதிகமாகும்.

    இதற்கு முன்பு 35 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு முறையான வரி விகிதங்கள் இருந்தன. மாநிலத்துக்கு மாநிலம் மதிப்பு கூட்டு வரி மாறுபட்டு இருந்தது.

    இப்போது ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகித வரி முறை வந்துள்ளது. மேலும் இதற்கு முன்பு 37 வகையான கணக்கு வழக்கு பாரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. மூலம் அவற்றையும் எளிமையாக்கி ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் விகிதத்தில் கொண்டு வந்துள்ளோம்.

    இதில், இன்னும் எளிமையை கொண்டு வரப்போகிறோம். வருமான வரி தாக்கலுக்கு எவ்வாறு ஒரே பாரத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றனவோ அதேபோல் ஜி.எஸ்.டி.யிலும் ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் வகையில் எளிமைப்படுத்த உள்ளோம்.

    மேலும் இந்த வரிமுறைகள் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது, வியாபாரிகளுக்கு எளிமையாக அமைகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேலும் இது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை நடத்தி இன்னும் எளிமைப்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    ஜி.எஸ்.டி. வரி முறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதால் இதில், வரி ஏய்ப்பு செய்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. எங்கேனும் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, யாரும் ஏமாற்ற முடியாது.

    சிறு வியாபாரிகளும் எளிமையாக கணக்கை தாக்கல் செய்யும் வகையில் எல்லா வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு விளக்கங்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

    சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் புதிய சாப்ட்வேர்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GST #GSTDay

    ×