search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்டிஐ"

    • கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
    • எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், மக்களை ஏமாற்றி, திசைதிருப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும், பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் கோடி கணக்கில் செலவு செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி முன்னதாக குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் (2014- 2024) மோடி அரசு தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.2,974 கோடி செலவிட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

    தொலைக்காட்சியை தவிர, எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.

    இதற்கிடையே, பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர் விளம்பரம், ரெயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு பாஜக அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை.

    • சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா?
    • பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19, 20 மற்றும் 21-ந்தேதிகளில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். முதல் நாளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மறுநாள் திருச்சிக்கு சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி சிறப்பு வழிபாடு செய்து இருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் திருச்சி, ராமேசுவரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அலுவல் ரீதியானதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


    * பிரதமரின் பயணம் தனிப்பட்ட முறையிலானது என்றால் அவர் பயணித்த விமானம், ஹெலிகாப்டர், கார்களுக்கான செலவுகளை மத்திய அரசு செய்ததா?

    * தனிப்பட்ட பயணமாக இருந்தால், போக்குவரத்து செலவுகளை பிரதமரிடம் இருந்து வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதா?

    * தனிப்பட்ட பயணம் என்றால் எந்த கட்டணமும் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த விதிகளின் கீழ் பிரதமர் பயன்படுத்தினார்?

    * சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா?

    * பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார்.
    • மருத்துவ செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார் என ஆர்.டி.ஐ. தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மே 26ம் தேதி முதல் பிரதமராக பொறுப்பேற்று வருகிறார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்காக ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ஆரோக்கியமான இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

    வரி செலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. இது ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் செல்லும் போது பாதுகாவலர்கள் தவிர பயணம் செய்யும் தனி நபர்கள் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #RTI #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, பிரதமருடன் செல்லும் தனி நபர்கள் குறித்த விபரங்களை தர வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

    இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் தர மறுக்கவே, மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், “பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த பட்டியலை மனு தாரருக்கு அளிக்க வேண்டும்” என தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். 
    பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எந்த திட்டமும் முடிக்கப்படவில்லை எனவும், 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவே இல்லை என்றும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. #AIIMS
    புதுடெல்லி:

    பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மத்தியில ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014-15, 2015-16 மற்றும் 2017-18 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை என்றே தெரிகிறது. 

    குறிப்பாக 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

    இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஆர்.டி.ஐ. தகவல் மூலம் பெற்றுள்ள தகவலில், தமிழகத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனையை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனையை கட்டிமுடிக்க அமைச்சரவையின் காலக்கெடு இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் சார்பில் 20-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே மத்திய அமைச்சகத்திடம் இருந்து பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் 21-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.


     
    இதேபோன்று பிற மாநிலங்களில் திட்டத்தை முன்னெடுக்க ஆகும் தொகை எவ்வளவு? வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 1000 கோடிக்கும் அதிகமான செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக பட்சமாக ரூ. 278.42 கோடி மேற்கு வங்காளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்யாணியில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ரூ. 1,754 கோடி செலவில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் ரூ. 278.42 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை 2020-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், இவ்விவகாரத்தில் பணிகள் துரிதமாக நடைபெற்றால் மட்டுமே திட்டமிட்டப்படி மருத்துவமனையை கட்டியமைக்க முடியும். இதேபோன்றுதான் பிற மாநிலங்களுக்கான அறிவிப்பும் உள்ளது. பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் மருத்துவமனை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை எனவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    பாகிஸ்தானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து பேசியதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றம் சாட்டியதற்கு எந்த நம்பகத்தகுந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. #Modi #PMO #RTI
    புதுடெல்லி:

    கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி பலன்புர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரின் டெல்லி இல்லத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் தேர்தல் தொடர்பாக மூன்று மணிநேரம் ஆலோசணை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

    மோடியின் குற்றச்சாட்டு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் காங்கிரஸ் உடன் கைகோர்த்து செல்வாக்கை காட்ட நினைக்கிறது என பாஜகவின் மற்ற தலைவர்களும் மோடியை தொடர்ந்து பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், டிசம்பர் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாகெத் கோகலே என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அனுப்பினார். அதில், மோடியின் குற்றச்சாட்டு எதனை அடிப்படையாக கொண்டது. அதற்கான ஆதாரம் என்ன? என்ற கேள்விக்கு பதில் கேட்டிருந்தார்.




    மனு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த நிலையில், கோகலே மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு பலனாக 30 நாட்களில் பிரதமர் அலுவலகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பிரதமர் அலுலவகம் தனது பதிலை கோகலேவுக்கு அனுப்பியுள்ளது.

    அதில், அந்த தகவல்கள் (மோடியின் குற்றச்சாட்டு) இந்த அலுவலகத்தில் எந்த பிரிவிலும் இல்லை. பல்வேறு தரப்பில் இருந்து வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது. 

    அதாவது, காங்கிரஸ் தலைவர்களும் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் சந்தித்ததற்கு எந்த நம்பகத்தகுந்த ஆவணங்களும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
    ×