search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cement"

    • ரூ.1.83 கோடி செலவில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
    • பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது காரைகள் பெயர்ந்து விழும் சூழல் நிலவுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகாமையில் தாசில்தார் அலுவலகம் இயங்கிவந்தது. 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சான்றிதழ் தேவைகளுக்காக தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

    பழமையான இந்த கட்டிடத்தை அகற்றி வேறு புதிய கட்டிடம் கட்ட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டில் ரூ.1.83 கோடி செலவில் கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.

    இதனையடுத்து தாசில்தார் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமண அரங்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டு அது முதல் இயங்கிவருகிறது.

    அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.4 கோடி வரை கூடுதல் நிதி கோரப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதும் இல்லாத நிலையில் உள்ளது.

    அலுவலகத்தின் உள்ளேயும் ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்தும், அதன் கீழ் உள்ள தெர்மாகோல் பால்சீலிங் வேலைபாடுகள் உடைந்தும் தொங்கிகொண்டுள்ளது.

    வளாகத்தின் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் அவ்வபோது உள்ளே புகுந்து அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

    தற்போது துணை வட்டாட்சியர்கள் அலுவலக கான்கிரீட் மேற்கூரைகள் சிமென்ட் காரைகள் அவ்வபோது பெயர்ந்து திடிரென கீழே விழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்லும் பொதுமக்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் கூறுகையில், சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வேறு கட்டடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றிடவும், உடனடியாக புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திடவும் வேண்டும் என்றார்.

    • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?
    • இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெரியகுடி எண்ணெய் கிணற்றில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி கியாஸ் வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து அப்போதைய மாவட்ட கலெக்டர் நடராஜன், இந்த கிணற்தை மூட உத்தரவிட்டார்.

    அதன் பிறகு 2022-ம் ஆண்டு இந்த கிணற்றை செயல்பாட்டு கொண்டு வருவதற்கு மறைமுகமாக நடவடிக்கை நடந்தது. இதை அறிந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தோம்.

    இதை தொடர்ந்து அப்போதைய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்டு 13-ந் தேதி சமாதான கூட்டம் நடந்தது.

    இதில் ஓ.என்.ஜி.சி. அதிகாரி, இந்த கிணற்றை 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிரந்தரமாக மூட அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதுவரை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த சில நாட்களாக இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?, இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?, என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் கொடுத்த அடிப்படையில் இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து குழாய்களை அகற்றி விட்டு நிரந்தரமாக மூடி சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்.

    இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில துணை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் முகேஷ், கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை தொடக்கம்
    • பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தல்

    அரியலூர்:

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை தொடங்கியது.

    அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் மற்றும் உட்கோட்டை, ஆதனக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இம்முகாமுக்கு தலைமை வகித்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ம.தீபாசங்கரி, புதியதாக சிமென்ட் விற்பனையை தொடக்கி வைத்து, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், துணை பதிவாளர் அறப்பளி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் இளஞ்செழியன் மற்றும் கூட்டுறவு சார்பதிவா ளர்கள், சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே உள்ள சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வாலிபர் சங்க மாநாடு நடந்தது.
    • மாவட்டத் தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஜெயம் பாரத், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 17-வது மாநாடு ராஜபாளையத்தில் நடந்தது.

    மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி தொடங்கி வைத்தார். நந்தன் கனகராஜ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன், மாதர் சங்க நகர தலைவர் மைதிலி ஆகியோர் பேசினர்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஜெயம் பாரத், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் ரெஜிஸ் குமார் நிறைவுரையாற்றினார்.வரவேற்பு குழு பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    ராஜபாளையம் நகரச் செயலாளர் செந்தமிழ் செல்வன், நகர தலைவர் அய்யப்பன், பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராஜபாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும், ராஜபாளையத்தில் திட்டப்பணிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிரமங்களில் முக்கியமாக வாகன நெரிசலை முறை ப்படுத்த வேண்டும், செண்பகவல்லி தடுப்பை ணையை சீரமைக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியினை ஏற்படுத்த வேண்டும், ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி மூடி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அச்சன்கோவில்- பம்பை ஆறு இணைந்த அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நான்கு கால் காலம் பகுதியில் ெரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.

    இதற்காக சேலம் கருப்பூர் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை முருகேசன் (வயது 24)என்பவர் ஓட்டி சென்றார்.

    கருப்பூர் கோகுல் கிரானைட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் டிராக்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிமெண்ட் மூடிகளுக்குள் சிக்கிய முருகேசன் பலத்த காயமடைந்தார் .அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடையநல்லூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த 2 லாரிகள் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • அதிர்ஷ்டவசமாக 2 லாரிகளிலும் இருந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அட்டை குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் அதன் கரைகள் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அந்த வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ராஜபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு சென்றது.

    கடையநல்லூர் அருகே சென்ற பொழுது அந்த வழியாக பாதுகாப்பு பணிக்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு வேனில் தென்காசியில் இருந்து கடையநல்லூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக இந்த வேன் மீது லாரி மோதியது. பின்னர் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு சிமெண்ட் லாரி மீதும் மோதியது.இதில் லாரி டயர்கள் வெடித்து சுற்றுச்சுவரில் மோதி நின்றது.

    இதனால் குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் சாலை சேதமடைந்தது. பாரம் தாங்காமல், 2 லாரிகளும் குளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக 2 லாரிகளிலும் இருந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

    பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைவதால் சிமெண்டு மற்றும் கார், ஏசி விலை இறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. #GST

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது.

    அதன்படி பலமுனை வரிகள் நீக்கப்பட்டு, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்காக வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. அரசு மேற் கொண்ட இந்த மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. அதே சமயத்தில் மத்திய அரசுக்கு வரி வருவாய் கணிசமான அளவுக்கு அதிகரித்தது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவில் 65 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்தும் பட்டியலில் இருந்தன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு மேலும் 55 லட்சம் நிறுவனங்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் தற்போது வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் சுமார் 4 கோடியில் இருந்து சுமார் 7 கோடியாக அதிகரித்தது. இத்தகைய காரணங்களால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதத்தை மத்திய அரசு அடுத்தடுத்து குறைத்தது.

    பொதுமக்கள், தொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மிக முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு 5 சதவீதம், 12 சதவீதம் என்ற வரி திட்டத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 320 பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டது.

    அந்த 320 பொருட்களில் 191 பொருட்கள் மீதான வரி விதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீத வரி விதிப்பு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருந்தன.

    அதில் 191 பொருட்கள் மீதான வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டதால் 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் 35 பொருட்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகும் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. வரி வருவாயில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. மாதம் தோறும் மத்திய அரசுக்கு சராசரியாக 1 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. மூலம் நிரந்தர வருவாயாக கிடைக்கிறது.


    இந்த நிலையில் 28 சதவீதம் வரி விதிப்பு பட்டியலில் இருந்து மேலும் பல பொருட்களை நீக்கி, மக்களுக்கு சலுகைகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மும்பையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மிக எளிதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கமாகும். அதன்படி 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் உள்ள பல பொருட்களின் மீதான வரி விதிப்பு 18 சதவீதம் அல்லது அதற்கு கீழான பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    மத்திய அரசின் உத்தரவின் பேரில் வருகிற 22-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அன்று 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருக்கும் பொருட்களில் 25 முதல் 30 பொருட்களின் மீதான வரி 18 அல்லது அதற்கும் குறைவான சதவீத வரி விதிப்பு பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். அந்த 30 பொருட்கள் என்னென்ன என்பது 22-ந்தேதி தெரிய வரும்.

    அனேகமாக சிமெண்ட், கிரானைட், மார்பிள், டயர்கள், ஏ.சி. எந்திரங்கள், டிஷ்வாசர், இரு சக்கர வாகனங்கள், டிஜிட்டல் கேமிராக்கள், டிஜிட்டல் ரிக்கார்டுகள், வீடியோ கேம்ஸ் கருவிகள், குளிர் பானங்கள், கார் உதிரிப் பாகங்கள் மீதான 28 சதவீத வரியில் சலுகைகள் அளிக்கப்பட்டு 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிப்பு பட்டியலுக்குள் வந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வரிச் சலுகையால் 30 பொருட்களின் விலை மளமளவென குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த நடவடிக்கைக்குப் பிறகு அதிகபட்ச 28 சதவீத வரி விதிப்புப் பிரிவில் 5 அல்லது 7 பொருட்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புகையிலை சார்ந்த பொருட்கள், அதிநவீன சொகுசு கார்கள், விமானங்கள், வெளிநாட்டு மதுபான வகைகள், சுற்றுலா கப்பல்கள், துப்பாக்கிகள் போன்றவை மட்டுமே இனி 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருக்கும். ஜி.எஸ்.டி. வரி முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருந்தன. தற்போது சுமார் 200 பொருட்கள் மீதான வரி விதிப்பு முறை மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 99 சதவீத பொருட்களின் விலை குறையும். சிமெண்ட் மீதான 28 சதவீத வரி விதிப்பை 18 சதவீதமாக மாற்றும் போது மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் சுமார் 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். என்றாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இழப்பை ஏற்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

    28 சதவீத வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றம் நடுத்தர பிரிவு மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST

    வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    17 உள்ளூர் வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, ஓராண்டில், 384 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 68 வகையான சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்ச வரியான 28 சதவீத வரி, இன்று படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வரிவரம்பில், சொகுசு பொருட்களும், புகையிலை, சிகரெட், பான் மசாலா போன்ற பாவ பொருட்களுமே பெரும் பாலும் இருக்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. உள்ளிட்ட ஒருசில பொருட்கள்தான் இருக்கின்றன.

    இந்த பொருட்களால் வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், இவற்றின் மீதான ஜி.எஸ்.டி.யும் கூடிய விரைவில், 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படும். அதன்பிறகு, சொகுசு பொருட்களும், பாவ பொருட்களும் மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. வளையத்துக்குள் இருக்கும். அதன்மூலம், ‘காங்கிரசின் பரம்பரை வரி’க்கு முடிவுரை எழுதப்படும்.



    ஏனென்றால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களுக்கு 31 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.

    கட்டுமான பொருட்களில், சிமெண்டைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்துக்கும் வரி குறைக்கப்பட்டு விட்டது. அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் களுக்கு செலவு குறைவதுடன், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பொருட்களை கொள்முதல் செய்ய இதுவே சிறந்த தருணம் ஆகும்.

    ஜி.எஸ்.டி. குறைப்பால், அரசுக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிகர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்வதாக மாநில அரசுகளுக்கு உறுதி அளித்துள்ளோம். எனவே, இந்த சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். 
    ×