search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததுடிரைவர் படுகாயம்
    X

    சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததுடிரைவர் படுகாயம்

    • சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நான்கு கால் காலம் பகுதியில் ெரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.

    இதற்காக சேலம் கருப்பூர் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை முருகேசன் (வயது 24)என்பவர் ஓட்டி சென்றார்.

    கருப்பூர் கோகுல் கிரானைட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் டிராக்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிமெண்ட் மூடிகளுக்குள் சிக்கிய முருகேசன் பலத்த காயமடைந்தார் .அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×