search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமெண்டு"

    • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?
    • இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெரியகுடி எண்ணெய் கிணற்றில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி கியாஸ் வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து அப்போதைய மாவட்ட கலெக்டர் நடராஜன், இந்த கிணற்தை மூட உத்தரவிட்டார்.

    அதன் பிறகு 2022-ம் ஆண்டு இந்த கிணற்றை செயல்பாட்டு கொண்டு வருவதற்கு மறைமுகமாக நடவடிக்கை நடந்தது. இதை அறிந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தோம்.

    இதை தொடர்ந்து அப்போதைய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்டு 13-ந் தேதி சமாதான கூட்டம் நடந்தது.

    இதில் ஓ.என்.ஜி.சி. அதிகாரி, இந்த கிணற்றை 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிரந்தரமாக மூட அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதுவரை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த சில நாட்களாக இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்கிறதா?, இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?, என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதுவரை ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடாதது ஏன்?

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் கொடுத்த அடிப்படையில் இந்த எண்ணெய் கிணற்றில் இருந்து குழாய்களை அகற்றி விட்டு நிரந்தரமாக மூடி சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்.

    இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில துணை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் முகேஷ், கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.

    ×