search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Tamilisai"

    • சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வார்கள்.
    • போலீசார் உதவியுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியிருந்தவர்களை கீழே இறக்கிவிட்டனர்.

    சென்னை:

    பீகார் மாநிலம் கயாவில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட தென் மாநிலத்தவர்கள் பயணம் செய்தனர்.

    வட மாநிலங்களில் செல்லும் ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வார்கள்.

    அதே போல் சென்னை ரெயிலிலும் பலர் ஏறி அமர்ந்து கொண்டனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். உடனே அந்த பெட்டியில் பயணித்த புதுவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் கவர்னர் தமிழிசையை தொடர்பு கொண்டு கூறி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.

    உடனடியாக கவர்னர் தமிழிசை டெல்லியில் உள்ள ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

    அதிகாரிகளும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறிது நேரத்தில் அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் போலீசார் உதவியுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியிருந்தவர்களை கீழே இறக்கிவிட்டனர்.

    அதன் பிறகு பயணிகள் நிம்மதியாக பயணித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிய கவர்னர் தமிழிசைக்கு நன்றி தெரிவித்து அவர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்கள்.

    • நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
    • படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.

    காமராஜர் கல்வி வளாகத்தில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில், நடிப்பவர்கள் கூட படிப்பை சொல்லி கொடுத்தால் தான் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

    விழா முடிவில் கவர்னர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கூறியுள்ளாரே? என கேட்டதற்கு, பேச்சு உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது.

    அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்கமாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.

    மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்கிறாரே. இதை அரசியலில் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள்.

    சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்களாக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்நோக்கம் இல்லை என்றார்.

    • இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர்.
    • அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

    சென்னை:

    வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தையரிமாக எதிர் கொண்டவர்.

    இன்றைக்கு விசாரணை என்று அணுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை போல் அழகு முத்துக்கோன் இல்லை.

    இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள்.

    புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 கொடுக்க உள்ளதாக கூறினார்கள்.

    இன்னும் அதைபற்றி சத்தம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும்தான் அறிவித்திருக்கின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதவி தொகை விடுப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும்.

    இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்ல கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதே போல 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் கருணாநிதி கவர்னர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

    கவர்னருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் கருத்து சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம்.

    ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று புதுவைக்கு வந்தார்.

    தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.

    அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    • கவர்னர் தமிழிசை பேச்சு
    • சாமானியர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு பலன் தருகிறது.

    புதுச்சேரி:

    ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் சார்பில் 6-வது ஜி.எஸ்.டி. தின விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அமைக்சர் லட்சுமி நாராயணன், ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தலைமை ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி வசூலின் சராசரி மத்திய அரசை விட புதுவையில் அதிகமாகவே இருக்கிறது. தலைமை ஆணையர் பத்மஸ்ரீ கடந்த வருடத்தை விட ரூ.100 கோடி அதிகமாகவே வரி பெற்று தந்திருக்கிறார். ஜி.எஸ்.டி. முதலில் அமல்படுத்திய போது பிரச்சினைக்குரியதாக பார்க்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. தொடங்கிய போது கடுமையானதாக பார்க்கபட்டாலும்   6 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.

    சாதாரண குடும்பங்களுக்கு ஜி.எஸ்.டி. மிகவும் உதவிகரமாக இருக்கிறது. சாமானியர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு பலன் தருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியானது மக்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருப்பதாய் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டு வரும் முறையாகும்.

    சரியான நேரத்தில் பிரதமர் மோடி பொருளாதார வல்லுனர்களுடன் இணைந்து ஜி.எஸ்.டி. யை இந்தியாவிற்கு கொண்டு வந்தார்.

    ஜி.எஸ்.டி. மிகப்பெரிய பொருளாதார புரட்சி.எல்லோருக்கும் இது பலன் தந்து கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. யானது மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தரும் வகையில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

    சாமானியனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் அனைத்து மாநிலங்களும் முன்னேற்ற மடையவும் ஜி.எஸ்.டி. மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

    • கவர்னர் தமிழிசை பங்கேற்பு
    • சேவையினைப் பாராட்டி அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2 நாட்கள் பாரம்பரிய மற்றும் மரபுசார் மருத்துவ பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. டாக்டர் முகேஷ் தலைமையில் மருத்துவர்கள் ஸ்ரீவித்யா, மோகன், உதயசங்கர், வெங்கடேசன், சௌந்தர்யா, ஹரிஹரசுதன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரின் முயற்சியாலும், தமிழகம், புதுச்சேரி தி சுசான்லி குழுமத்தின் சேர்மேனும், பாண்டிச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி. ஆயுர்வேத டாக்டர்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் நிறுவனருமான சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி மற்றும் கோசிபா, ராசு ஆலோசனைபடி நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில், கவர்னர் தமிழிசை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார்,முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார். புதுச்சேரி ஆயுஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

    மை வீத்ரி ஏட்ஸ் நிறுவ னத்தின் வழிகாட்டியும். சித்தவா ஹெர்பல்ஸ்-புட்ஸ் நிறுவனத்தின் நிறு வனரும், உரிமையாளருமான டாக்டர் விஜயராகவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரது சேவையினைப் பாராட்டி அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கினர்.

    டாக்டர் சி.ஏ.ரவிக்கு ஆயுஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன் விருது வழங்கினர். முகேஷ் பொதுச்சேவையினையும். பாரம்பரிய மருத்துவ பாதுகாப்பிற்காக அவரின் செயல்பாட்டினை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

    மாநாட்டின் சிறப்பு மலரினை கவர்னர் தமிழிசை வெளியிட மை சித்துவா ஹெர்பல்ஸ்-புட்ஸ் வீத்ரி ஏட்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டியுமான டாக்டர் விஜயராகவ் பெற்று கொண்டார்.

    • கவர்னர் தமிழிசை தகவல்
    • பல வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி.யாக மாற்றப் பட்டுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

    மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்து க்களை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றுகின்றனர். இது அவர்களுக்கு நன்றி செலுத்தும் நாள். கொரோனா காலத்தில் பலர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுவை அரசு மருத்துவமனையில் இன்னும் பல புதுமைகள் வர உள்ளது. குஜராத்தில் பிரதமரின் டயாலிசிஸ் சிகிச்சை வெற்றிகரமாக செயல்படுகிறது. இது விரைவில் புதுவைக்கும் வர உள்ளது.

    எல்லா மருத்துவமனை களிலும் 10 படுக்கை கொண்ட அதி நவீன அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வரப்பட உள்ளது.

    அனைத்து துறைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் இல்லாத புதுவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற நிலை வரக் கூடாது என ஒளி படைத்த புதுவை என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    புதுவையில் மருத்துவ திருவிழா நடத்தினோம். கிராமங்களிலும் சுகாதாரத்துறை மருத்துவ திருவிழா நடத்த உள்ளது. இன்று ஜிஎஸ்டி தினம். ஜி.எஸ்.டி.யால் வரி உயர்ந்துள்ளது போல மாய தோற்றம் உள்ளது. பல வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி.யாக மாற்றப் பட்டுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    குடும்பத்தில் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யால் மக்களும், அரசும் பலன் பெறுகின்றனர். வரும் ஆண்டில் மருத்துவர் தின விழா அனைவரையும் சேர்த்து கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலுக்கு செல்ல ஆசிரியர்கள் மட்டுமல்ல, டாக்டர்கள் உட்பட பலரும் செல்ல மறுக்கின்றனர்.

    இது மாற்றப்பட வேண்டும். அதுவும் புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியம்தான். அனைத்து துறையிலும் உள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. இடமாறுதலில் விதிகளை மாற்றி மகிழ்ச்சியாக இடமாற்றத்தை ஏற்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரும் பேசி வருகிறார், நானும் பேசி வருகிறேன். எதிர்கட்சிகள் பல ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை என கூறுகின்றனர்.

    அவர்கள் ஆட்சியில் பல ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு துறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்
    • தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி மையத்தினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். "தி கலர்ஸ் ஆப் லைப்" என்னும் தலைப்பில் ஓவியர் சத்திய அருணாச்சலம் உருவாக்கிய ஆயில் மற்றும் ஆக்கிரலிக் மூலம் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் இதில் இடம் பெற்று இருந்தது.

    பின்னர் ஒடிசா மாநில கலைஞர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கலாச்சார மையங்கள் இயங்கி வரும் பாரத் நிவாஷில் பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் மரபு மைய வளாகத்தில் முழு உருவ திருவள்ளுவர் சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

    திறக்கப்பட்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவர்கள் மத்தியில் திருக்குறளையும் வாசித்தார். தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த சிலையை வி.ஜி.பி நிறுவனம் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் தமிழிசை உறுதி
    • பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி கட்டிடம் சிதிலமடைந்துள்ளது.

    இதனால் பள்ளியை கடந்த ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. பள்ளியில் இணைத்தனர். அப்போது அங்கு படித்து வந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளி கடந்த கல்வியாண்டில் அங்கேயே இயங்கியது. பாரதியார் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்படவில்லை.

    நடப்பு கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர். வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளியை திரு.வி.க. பள்ளியில் இணைக்க சம்மதிக்கமாட்டோம்,

    ஷிப்ட் முறையில் இயங்க–வும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம் மறியல் செய்த மாணவிகளை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஓராண்டு மட்டும் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

    இதன்பிறகு இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமா–முனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து கேள்விப்பட்ட கவர்னர் தமிழிசை, இன்று வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார். பள்ளி துணை முதல்வர் கவுரி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவியை கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் மாணவிகள் நன்றி தெரி–வித்த–னர்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார். பின்னர் பரிசோதனை கூடத்துக்கு சென்றார். அது பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்வையிட்டு பின் கீழே வந்தார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவ–மனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போரா–டியதை பாராட்ட என வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது. அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை.

    பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும்.

    இதில் தனியார் பங்களிப்பும் இருந்தால் நல்லது. அரசு பள்ளிகளை மேம்படுத்த புதுவையை சேர்ந்த தொழிலதிபர்கள் முன்வந்தால் நன்றாக இருக்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்க–வேண்டும்.

    போதிய வசதிகள் இல்லா–தது வருத்தம் தரக்கூடியது தான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம். விரைவாக சுப்பிரமணிய பாரதியார் பள்ளியை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தால் புதுவை–யில் கல்வி புரட்சி ஏற்படும். சி.பி.எஸ்.இ. பாடத்தில் தமிழ் நிச்சயம் இருக்கும்.

    இந்த பாடத்திட்டம் தேசியஅளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். 75 பள்ளிகளை பார்க்க வேண்டும் என கருதி 50 பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். அதில் உள்ள குறைபாடுகளை நான் கூறினேன், அதை சரிசெய்துள்ளனர். இது போதாது. வகுப்பறையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவது குறித்து கூறினர்.

    அந்த குறை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கனவு கண்டு வருகிறோம். அதற்கேற்ப கல்வித்துறையை மேம் படுத்த வேண்டும். தற்போதைய நிலை கவலை–யளிக்கக் கூடியதுதான், வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலத்தில் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    புதுவை அரசு மழைக்கால நோய்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக கவர்னர் குறித்து தி.மு.க. வின் முரசொலியில் வெளி யான கருத்து, நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு கவர்னர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு தெரி–வித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

    இதன்பின் சுப்பிரமணிய பாரதியார் பள்ளியையும் கவர்னர் தமிழிசை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
    • புதுவை அரசு சார்பில் மாகியில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ெரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    விபத்து நடந்த உடனே ெரயில்வே துறையுடன் இணைந்து மீட்பு பணிக்கு உதவிய உள்ளூர் மக்கள், விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி, வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தழைக்கட்டும் மனித நேயம்.ெரயில்வே விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுவை அரசு சார்பில் மாகியில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த புதிய திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்ஜெட்டில் அறிவித்த படி எந்திரமயமாக்கல், கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு வழங்கிவரும் பராமரிப்பு செலவு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் ஆணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    கண்ணாடி நுண்ணிழை, கட்டுவலை விசைப்படகுகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அரசின் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வழி முறைகள் வகுத்து அரசாணை வெளியிடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும்.
    • உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள்.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். பொரு ளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவர்கள். அவர்களுடைய வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும்.

    உழைக்கும் மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    ×