என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆரோவில் தமிழ் மரபு மையத்தில் திருவள்ளுவர் சிலை
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்
- தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி மையத்தினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். "தி கலர்ஸ் ஆப் லைப்" என்னும் தலைப்பில் ஓவியர் சத்திய அருணாச்சலம் உருவாக்கிய ஆயில் மற்றும் ஆக்கிரலிக் மூலம் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் இதில் இடம் பெற்று இருந்தது.
பின்னர் ஒடிசா மாநில கலைஞர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கலாச்சார மையங்கள் இயங்கி வரும் பாரத் நிவாஷில் பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் மரபு மைய வளாகத்தில் முழு உருவ திருவள்ளுவர் சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவர்கள் மத்தியில் திருக்குறளையும் வாசித்தார். தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த சிலையை வி.ஜி.பி நிறுவனம் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்