என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- செங்கோட்டையன் தலைமையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு.
- அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாகன பிரசாரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் வருகிற 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முழு ஏற்பாட்டில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜயின் வாகன பிரசாரம் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தற்போது வரை வாகன பிரசாரத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் த.வெ.க.வினர் பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.
இன்று காலை செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் பெருந்துறை அடுத்த சரளையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செங்கோட்டையன் முன்னி லையில், பெருந்துறையில் மறைந்த அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி பெரியசாமியார் அண்ணன் அருணா ச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
அவர்களுக்கு செங்கோட்டையன் த.வெ.க துண்டை போட்டு வரவேற்றார். பின்னர் அவர்களுடன் புகை ப்படங்கள் எடுத்துக்கொ ண்டார்.
இதை அடுத்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்துறை தொகுதியில் அணி அணியாக த.வெ.க.வில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர்.மக்கள் சக்தியாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தியோடு த.வெ.க தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி பெருந்துறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் அவரது உரை இருக்கும்.
பெருந்துறையில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்திற்கான பணி இன்று தொடங்கப்பட்டு விட்டது.த.வெ.க.வில் விருப்ப மனு பெரும் தேதி குறித்து தலைவர் விஜய் அறிவிப்பார். விருப்ப மனு பெறப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் அறிவிப்பார்.த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் நடத்த காவல்துறையினர் தரப்பில் கேட்கப்பட்ட 84 கேள்விகள் தற்போது மாறிவிட்டது. அனைவரும் பாராட்டும் வகையில் எங்களது பணி இருக்கும்.
சீனாபுரத்தை சேர்ந்த தி.மு.க.வினர் தற்போது த.வெ.க.வில் இணைய உள்ளனர்.தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலா இணைப்பதற்கான நடை பெறும் பேச்சுவார்த்தை குறித்து அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.தேர்தல் களம் எவ்வாறு செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
த.வெ.க-அதிமுக கூட்டணி அமையுமா ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். த.வெ.க.விற்கு போட்டி என்று யாரையும் சொல்லவில்லை.தனிப்பட்ட முறையில் யார் போட்டி என கருத்து சொல்ல முடியாது. த.வெ.க.விற்கு மக்கள் சக்தி உள்ளது.மக்கள் சக்தியால் த.வெ.க தலைவர் விஜய் முதல்-அமைச்சர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
- விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி எனு தகவல் வெளியாகியுள்ளது.
- திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
- வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும், ஆதவ் அர்ஜுனா புகைப்படத்தை பேனரில் பயன்படுத்திய வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தவெக தொடங்கப்பட்ட நாள் முதலே பதவிகளுக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் பணத்திற்காக பதவிகள் விற்கப்படுவதாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் உள்ளேயே தவெகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாக அவர்கள் கோஷம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார்.
- முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
திருச்செங்கோட்டில் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில் வேட்பாளர்களை விஜயே அறிவிப்பார் என்று த.வெ.க. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக த.வெ.க. ஐ.டி. விங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
- அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
கூட்ட நெரிசல்..!
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை வடமாநிலங்களில் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததா என்றால் அது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத மிகவும் சோகமான, கருப்பு நாளாக 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி மாறியது.
தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மக்கள் சந்திப்பு என்ற அரசியல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். அதன்படி, 27-ந்தேதி சனிக்கிழமை மதியம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுவதை காண காலை முதலே மக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

குறுகிய இடத்தில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும் காலை முதல் தண்ணீர், உணவு ஏதுமின்றி வெயிலில் இரவு வரை காத்திருந்ததுதான் கொடுமை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வராத விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்து மக்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசும்போதே கூட்டத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் பேசிமுடித்துவிட்டு சென்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சம்பவ இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூட்ட நெரிசல் குறித்து தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலில் கரூர் நகர காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும் இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, விசாரணையை தொடங்கி நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா, மூச்சுத் திணறி இறந்தார்களா, அல்லது அதிர்ச்சியில் இறந்தார்களா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு த.வெ.க.வினரே முழு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், த.வெ.க.வினரோ ஆளும் கட்சியின் சதிதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.
எது, எப்படியோ... கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் எவராலும் மறக்கமுடியாத துயர நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்விற்கு பிறகு மக்கள் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
மேலும் அரசியல் சார்ந்த கூட்டமோ, இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் சரி முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கடந்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், மக்கள் என அனைவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். எனினும், இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
- கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
- ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.
பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.
- விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
- விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
- ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
- பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் கரூர் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சென்னை ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 'அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன? சென்னை ஐகோர்ட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.
மதுரை அமர்வு விசாரித்து வந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு பிரதான அமர்வு விசாரித்தது எப்படி? மதுரை கிளை விசாரித்து இருக்க வேண்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பதில் அளித்துள்ளார். அது ஏன்' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு தமிழக அரசு சார்பில், 'அருணா ஜெகதீசன் ஆணையத்தை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கான தடையை நீக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை ஒருநபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை எப்படி எடுத்தது என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது.
- விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி, நாகப்பட்டினம், கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த 3 இடங்களிலும் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய்யின் பிரசாரத்துக்காக தேர்வு செய்து ஒப்புதல் கேட்கும் இடங்களை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் கூறும் போது, விஜய்யின் அனைத்து கூட்டங்களுக்கும் கடுமையான போராட்டத்துக்கு பிறகே அனுமதி கிடைத்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இப்படி தமிழகத்தில் கூட்டம் நடத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
தமிழகத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று 70 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஈரோட்டில் விஜய்யின் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் அங்கு 3 இடங்களை தேர்வு செய்து அடையாளம் காட்டியுள்ள நிலையிலும் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது மாவட்டமான ஈரோட்டில் செல்வாக்கை நிரூபிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இதை தொடர்ந்து விஜய்யின் பிரசாரத்துக்கான இடங்களை அவரே நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வருகிறார்.
இதன்படி ஈரோடு மாவட்டம் பவளத்தாம் பாளையம் பகுதியில் தனியார் இடத்தை தேர்வு செய்து அங்கு விஜய்யின் பொதுக்கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இடமும், தேதியும் மாற்றப்பட்டது. 16-ந்தேதிக்கு பதில் வருகிற 18-ந்தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவித்த செங்கோட்டையன் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற இடத்தில் 19 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.
அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மீண்டும் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.
அங்கு பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் தரப்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் த.வெ.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியாவது அந்த இடத்தில் பிரசார கூட்டம் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த த.வெ.க.வினர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதிய சிக்கலாக பிரசாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பின் ஒரு பகுதியாக இருப்பது தெரிய வந்தது. இதனால் கோவில் இடத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் அரசின் ஆவணங்களின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சம்பந்தப்பட்ட நிலத்தை நீண்ட காலமாக அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பி ட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியான 19 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க. வினர் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்திருக்கின்றனர். இதனால் பொதுக்கூட்டம் நடத்து வதற்கான அனுமதியை இந்து சமய அற நிலையத்துறையிடம் த.வெ.க.வினர் அனுமதி வாங்காத நிலையில் அங்கு பிரசார கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட போலீஸ் துறைக்கும் விஜயபுரி அம்மன் கோவில் செயல் அலுவலர் கடிதம் அளித்துள்ளார் என்றனர்.
இதனால் திட்டமிட்டபடி வரும் 18-ந்தேதி மேற்கண்ட இடத்தில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்து நீடித்து வருகிறது. அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டை நாடுவதா? அல்லது வேறு இடத்தை தேர்வு செய்வதா? என்ற குழப்பத்தில் த.வெ.க.வினர் உள்ளனர்.
இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் தேர்வு செய்யப்பட்ட சரளையில் விஜய் பிரசார கூட்டம் நடத்துவதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் போலீசாரின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசாரக்கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர், த.வெ.க, அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான த.வெ.க. வினர் இன்று பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்கு வரும் 18-ந் தேதி வருகை தர உள்ளார்.
பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகிறோம்.
அரசு அலுவலர்கள் கேட்டது போல பல்வேறு பணிகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்னென்ன ஆலோசனைகளை சொல்கிறார்களோ, அதனை ஏற்று செய்வதற்கு தயாராக இருக்கிறோம்
புதுச்சேரி பிரசாரத்திற்கு பிறகு தமிழகத்தில் முதன் முறையாக ஈரோடு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கும் வகையில் இருக்கும்.
தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நாயகன், மக்களால் எதிர்காலத்தில் அரியணையில் அமர்த்த போகிற தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம்.
நாங்கள் அன்போடு அரவணைத்துக் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். நேற்று நடந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்கிறோம்.
யாரைக் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார்.
இந்து அறநிலைத்துறை பொறுத்தவரை கடிதங்கள் கொடுப்பது அந்த துறையைச் சார்ந்த ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும். ஆனால், அங்கு கொடுக்காமல் காவல்துறைக்கு கொடுத்திருக்கிறார்கள்.
த.வெ.க. அ.தி.மு.க.வாக மாறும் என்று நான் சொல்லவில்லை. த.வெ.க.வில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது என்றேன்.
விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை.
என்னை வரவேற்கிற வாழ்த்தும் என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. த.வெ.க.வில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் த.வெ.க.வில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் த.வெ.க,வுக்கு வரவேற்பு இருக்கிறது என்றார்.
- விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் விஜய்க்கு இல்லை.
மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. இதனாலேயே விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய்யை கட்சி தொடங்க சொன்னதே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தான். அப்படி இருக்கும் போது புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார்.
- த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது.
- ஆட்டோ சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு, அதில் ஒன்றை ஒதுக்க விஜய் தரப்பினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் என்று சின்னம் கேட்கப்பட்ட நிலையில், மோதிரம் சின்னம் த.வெ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே நடுவூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.170.22 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கான்கிரீட் சிமெண்ட் தளம் அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதனை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு கட்டப்பட உள்ள சேமிப்பு கிடங்கில் 1 லட்சம் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படும். தமிழக மக்களை வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று கூறுகிறார்.
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் செயல்பாடு கூரை மீது ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என்பது போல உள்ளது.
அவர் முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு புதுச்சேரி போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான்.
தொடர் மழையால் டெல்டாவில் எந்தெந்த பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
பயிர் பாதிப்பிற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான வழிவகைகளில் நாங்கள் முயற்சி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






