என் மலர்

    நீங்கள் தேடியது "Governor Tamilisai"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • கவர்னர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

    புதுவை அரசு சார்பில் கருவடிகுப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் ஆசிரியர் திருநாள் விழா நடந்தது.கலெக்டர் வல்லவன் வரவேற்றார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டி கவுரவித்தார்.

    கவர்னர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – தலைமை ஆசிரியர் விஜயராகவன், ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, சோமசுந்தரம், சுரேஷ் ஆகியோருக்கும், முதல்வரின் சிறப்பு விருது – ஆசிரியர்கள் செல்வக்குமரன், கவிதா, லட்சுமி, தலைமை ஆசிரியை அபரணாதேவி, ஆசிரியை சாச்சி, தொழில்நுட்ப ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோருக்கும், கல்வி அமைச்சரின் வட்டார விருது, உடற்கல்வி ஆசிரியர் சுப்ரமணியன், விரிவுரையாளர் மதிவாணன், ஆசிரியர்கள் கணேசன், முரளீதரன், விரிவுரையாளர் ராஜசேகரன், ஆசிரியர்கள் பிரபாகரன், சுரேஷ்குமார், வாசுகி, விரிவுரையாளர் அஜித்குமார், தலைமை ஆசிரியர் குதுல வெங்க–டேஸ்வர ராவ் ஆகியோ–ருக்கும் வழங்கப் பட்டது.

    விருதுபெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை யாற்றினர். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நன்றி கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விதத்திலும் புதுவை வளர்ச்சி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் விநாயகர் சிலை விஜர்சனத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 375 ஏக்கர் நிலத்தை பெறுவது தமிழக வளர்ச்சிக்கும் பலன்தரும் என விளக்கியுள்ளோம்.

    பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விதத்திலும் புதுவை வளர்ச்சி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    தென்மாநிலங்கள் கூட்டம் என்பது மிகப்பெரும் வாய்ப்பு. அனைத்து முதல்-அமைச்சர்கள், கவர்னர்கள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகின்றனர். இதில் கவர்னராக பங்கேற்று புதுவைக்காக பேசியுள்ளேன்.

    கவர்னர் ஏன் சென்றார்? என கேட்பது சரியல்ல. புதுவை பற்றிய முழு தகவல்களை சேகரித்து 9 கோரிக்கைகளை வைத்துள்ளோம். கேரளா–வில் இருந்து நமக்கு தண்ணீர் கொடுக்க ஆயிரம் லிட்டருக்கு ரூ.28 வசூலிக்கின்றனர். கேரளாவில் உள்ளவர்க–ளுக்கு ரூ.4 வசூலிப்பதை விளக்கியுள்ளோம். இதை பரிசீலிப்பதாக கேரளா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    காரைக்காலில் இருந்து மணல் எடுத்துவர தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என விளக்கியுள்ளோம். நிதி நிலையை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதில் நேர்மறை விவாதங்களும் ஏற்பட்டது. தென்மாநில கவுன்சில் கூட்டத்தை ஆரோக்கியமான விவா–தங்களுக்கு வழிவகுத்த பிரதமர், உள்துறை மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்‘ பிரம்மாண்டமான போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த கப்பலில் இருந்து 31 போர் விமானங்களை இயக்க முடியும்.
    • வரலாற்று சாதனை புரிந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறி யிருப்பதாவது:-

    வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் விக்ராந்த்' பிரம்மாண்டமான போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த கப்பலில் இருந்து 31 போர் விமானங்களை இயக்க முடியும்.

    மேலும் இந்தியக் கடற்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்துள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முழுமையாக நம் நாட்டிலேயே உள்ள மூலப்பொருள்களை கொண்டு பிரமாண்டமான போர்க்கப்பலை உருவாக்கி வரலாற்று சாதனை புரிந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதன் மூலம், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம், அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்'என்று பாடிய மகாகவி பாரதியின் கனவும், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கனவும் நனவாகியுள்ளது.

    தற்சார்பு இந்தியா மூலம் பாரத மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
    • 2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்க–ளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்ப–ணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் "தேசிய நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்க–ளின் பட்டியல் வெளி–யிடப்பட்டது. அதில், புதுவை முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த–ராஜாவுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' அறிவிக்கப்பட்டது.

    தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து ச்செய்தியில், 2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற புதுவையில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலி யார்பேட்டை, அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு புதுவை மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும். புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×