search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold medal"

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
    • பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாராட்டினார்.

    திருப்பூர் :

    மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

    தமிழக மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், பிரன்ட்லைன் பள்ளி மாணவ ர்கள் பங்கேற்று தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். குழு பிரிவில், மாணவர் சந்திரேஷ் தங்கமும், ஒற்றையர் பிரிவில், ரிஸ்வான்ட் வெண்கலம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • கைபந்தாட்ட போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
    • ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    கடற்கரை கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.

    19 வயது பிரிவில் ஆண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கோகுலன், அரிஷ் குமார், ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    இதேபோல் 17 வயது பெண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட பாவனா, பிரியதர்ஷினி இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    இதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர்கள் பிரவின் வசந்த்ஜபேஷ், அனுஷாமேரி, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் அபிரகாம் மற்றும் பெற்றோர்கள் ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ, மாணவிகளை கோப்பைகளுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    பள்ளியில் அனைத்து மாணவ, மாணவகளும் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் போது பரஞ்ஜோதி ஜூவல்லரி பழனியப்பன், ஆங்கில ஆசிரியர் ரெங்கநாதன் உடனிருந்தனர்.

    • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி டி.எஸ்.பி. பிரித்தி பேசினார்.
    • நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார்மேல்நிலைபள்ளி கலையரங்கத்தில் நாடார் தொடக்கப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.

    நாடார் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் செயலர் விஜயராஜன், மெட்ரிக் மேல்நிலைபள்ளி செயலர் ஆத்தியப்பன் வரவேற்று பேசினார். உறவின்முறைத் தலைவர் ஆதவன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உறவின்முறை செயலர் வெற்றிசெல்வன், பொரு ளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், காரியதரிசி நாகரத்தினம், இணைத்தலைவர் மதிப்பிர காசம் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலர் முத்து ராமலிங்கம், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரித்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா, ராஜபாளையம் வன சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5, 10, 12 ஆகிய வகுப்புகளில் அரசுப் பொதுத்தேர்வில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

    பின்னர் விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கும் தங்க பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கிய நன்கொடை யாளர்களுக்கும், உறவின்முறை நிர்வாகி களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் உறவின்முறை சார்பில் பொன்னாடை அணி விக்கப்பட்டது.

    நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ெதாடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தனர். மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழா நிகழ்ச்சிகளை தமிழாசிரியர்கள் லதா, பிச்சாண்டி,சொர்ணலதா கருப்பசாமி தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கணேசன், நவநீதகிருஷ்ணன், பேச்சி யம்மாள் செய்திருந்தார்கள்.

    முடிவில் நாடார் மேல்நிலைபள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் எம்.எல்.ஏ. பாராட்டினார்
    • தேசிய சிலம்பம் போட்டியில் மாணவர் தங்கபதக்கம் வென்றார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூரை சேர்ந்தவர் சுதாகர் மகன் விக்னேஷ். இவர் சிலம்பம் போட்டியில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 26, 27ம்தேதிகளில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 14-வயதுக்குட்பட்டோர் பிரிவில் விக்னேஷ் கலந்து கொண்டு ஒற்றைக்குச்சி போட்டியில் தங்க பதக்கமும், இரட்டைக்குச்சி போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்ற விக்னேசை எம்.எல்.ஏ பிரபாகரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா, பெரம்பலூர் வியாபாரிகள் சங்க தலைவர் செல்லப்பிள்ளை ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • காமன்வெல்த் செஸ் போட்டியில் மதுரை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சர்வதேச அளவிலான செஸ் போட்டி களில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை.

    மதுரை

    சர்வதேச காமன்வெல்த் யூத் செஸ் போட்டி இலங்கையில் நடந்தது. இதில் மதுரை டி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா (வயது 14) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

    அவர் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான செஸ் போட்டி யில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற கனிஷ்கா கூறுகையில், "செஸ் விளையாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன்.

    மாநில அளவில் தொடங்கி, தேசிய அளவில் முன்னேறி, இன்றைக்கு சர்வதேச அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சி தருகிறது. இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், ருமேனியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 6-வது இடமும் கிடைத்தது.

    இந்த போட்டிகள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல உதவியாக இருந்தது. சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை. இதற்காக தினமும் 10-12 மணி நேரம் வரை கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன்" என்றார்.

    கனிஷ்காவுக்கு, தர்ஷனி செஸ் அகாடமி பயிற்சியாளர் ராஜதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் அழகு செந்தில்வேல், மணிமாறன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலை பெருந்தொழுவு ரோட்டில் அமைந்துள்ள பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைப்பெற்றன. இந்நாட்களில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், தடைகளைத் தாண்டி ஓடுதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.

    மேலும் இவர்களை பள்ளித்தாளாளர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன் மற்றும் துணை இயக்குனர் வைஷணவி நந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இறுதியாக, அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற அக்வா அணிக்கும், 2-ம் இடம் பிடித்த ஏரிஸ் அணிக்கும் பள்ளித்தலைமை ஆசிரியை சியாமளா தேவி கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

    • சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த லோகப்பிரியா மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
    • கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள்-வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

    தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய போட்டிகள், வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

    போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை லோகப்பிரியாவும் ஒருவர் ஆவார்.

    கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வமுத்து-ரீட்டா மேரி தம்பதியின் மூத்த மகளான லோகப்பிரியா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக பெற்றோரும் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வந்தனர். சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த அவர் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

    தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற லோகப்பிரியா நேற்று நடந்த பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். இதற்கிடையில் லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார்.

    தந்தை இறந்த செய்தியை மகளுக்கு தெரிவித்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார். தங்கம் வென்ற அவர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்கம் வென்ற மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவரது தந்தை இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து போட்டிக்கு சென்ற வீரர்கள் அவரை அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றினர்.

    அப்போது வீராங்கனை லோகப்பிரியா கூறுகையில், தங்கம் வாங்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, நான் தங்கம் வாங்கிதைப் பார்க்க கூட இல்லாமல் போய்விட்டாரே. தங்கத்தை வென்று விட்டேன், தந்தையை இழந்து விட்டேன் என துடித்தார். இது அங்கிருந்தவர்களின் மனதை கலங்கவைத்தது.

    அதேவேளையில், அவர் பிறந்த மண்ணான கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே இறந்த செல்வமுத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வறுமையில் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சர்வதேசப் போட்டியில் மேலூர் மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி, விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் வர்ஷினி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற அவர் தனது சொந்த கிராமத்திற்கு இன்று வந்தார். அவரை வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் கிராம மக்கள் வரவேற்றனர்.

    அப்போது பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, அவருக்கு மாலை அணிவித்தனர். வர்ஷினி அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார். அவர் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தற்போது அவர் மதுரை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், பயிற்சியளித்த ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள்.
    • ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக " சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது " 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ஐந்து லட்சம் ) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

    2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாதனை
    • ஆசிரியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா (வயது 16). இவர் நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 17 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 35வது மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இதில் ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவி கீர்த்திகா பங்கேற்று 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    இந்நிலையில் அவர் பயிற்சி பெற்ற நாட்டறம்பள்ளியில் உள்ள எஸ்கே விஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் தங்க பதக்கம் பெற்ற மாணவிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    • நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
    • நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி மாணவர் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.

    கடந்த மாதம் ஜூலை 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி தம்பதியரின் மகன் கலையரசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

    சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்து மாணவர் கலையரசுவை ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் அய்யாத்துரைபாண்டியன், பயிற்சியாளர்கள் பிரவீன் குமார், பிரியா மற்றும் பெருமாள், ராமலட்சுமி, பூலித்தேவன் மக்கள் கழக மாநில தலைவர் பெருமாள்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக களும் தெரிவித்தனர்.

    ×