search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கபதக்கம்"

    மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பெரம்பலூருக்கு 2 தங்கபதக்கம்

    பெரம்பலூர், 

    65-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் குடியரசு தின விழா போட்டிகளில் முதல் 2 இடங்களை வென்ற மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்த போட்டிகளில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி. எஸ்.சாத்விகா, 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.

    அதே போல் பெரம்பலூர் தந்தை ஹென்ஸ் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சஜீவா, 14 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 2 பேரும் தங்க பதக்கம் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்

    • பெரம்பலூர் எம்.எல்.ஏ. பாராட்டினார்
    • தேசிய சிலம்பம் போட்டியில் மாணவர் தங்கபதக்கம் வென்றார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூரை சேர்ந்தவர் சுதாகர் மகன் விக்னேஷ். இவர் சிலம்பம் போட்டியில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 26, 27ம்தேதிகளில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 14-வயதுக்குட்பட்டோர் பிரிவில் விக்னேஷ் கலந்து கொண்டு ஒற்றைக்குச்சி போட்டியில் தங்க பதக்கமும், இரட்டைக்குச்சி போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்ற விக்னேசை எம்.எல்.ஏ பிரபாகரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா, பெரம்பலூர் வியாபாரிகள் சங்க தலைவர் செல்லப்பிள்ளை ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் - தீபா தம்பதியரின் மகள் சீதளாதேவி. இவர் சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்து தமிழகத்திற்கு பேருமை சேர்த்த மாணவி சீதளாதேவியை வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • செஸ் போட்டியில் பூதலூர் பள்ளி மாணவன் சிவராமன் முதல் சுற்றில் பூனாவை சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு வென்றார்.
    • இறுதி சுற்றில் மகாராஷ்டிரா மாநில அணியுடன் மோதி 28 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கம் மற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    பூதலூரில் செயல்பட்டு வரும் புனித ஆரோக்கிய அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கபடி மட்டும் செஸ் போட்டிகளில் பங்குகொண்டனர்.

    14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் நடைபெற்ற கபடி மட்டும் செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கபதக்கத்தை வென்றனர். கபடி போட்டியில் கேப்டன் பொன்னிவளவன் தலைமை–யிலான குழுவினரும், செஸ் போட்டியில் சிவராமனும் கலந்து கொண்டனர்.

    செஸ் போட்டியில் பூதலூர் பள்ளி மாணவன் சிவராமன் முதல் சுற்றில் பூனாவை சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு வென்றார். இறுதிச்சுற்றில் ஹரியானா மாணவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்று தங்கப்ப–தக்கம் வென்றார். கபாடியில் பொன்னிவளவன் தலைமை–யிலான குழுவினர் முதல் சுற்றில் ஹரியானாவுடன் விளையாடி 23 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றனர்.

    இறுதி சுற்றில் மகாராஷ்டிரா மாநில அணியுடன் மோதி 28 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கம் மற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் நேற்று மாலை ரயில் மூலம் பூதலூர் வந்தனர். பூதலூர் ரயில் நிலையத்தில் பள்ளி முதல்வர் மரிய ஜோஸ்லின் அமலா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரண்டு நின்று வெற்றி வீரர்களை வரவேற்றனர். பேண்ட் வாத்தியம் முழங்க, சரவெடி வெடிக்க வெற்றி பெற்ற மாணவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    கபடி பயிற்சியாளர் பிரசாந்த், கபடி கேப்டன் பொன்னிவளவன், செஸ் வெற்றியாளர் சிவராமன் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் சந்தனமாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வெற்றி திலகமிட்டு பெற்றோர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.

    தமிழ் நாட்டின் பழமையான விளையா–ட்டான கபடியில் தேசிய சாதனை படைத்த கிராமத்து மாணவர்களையும் பயிற்சி அளித்த பயிற்சியா ளர், ஊக்குவித்த பள்ளித்த லைமை ஆசிரியர், உள்ளி ட்டோர்களை விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.

    ×