search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூதலூர்"

    • வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளுர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • செஸ் போட்டியில் பூதலூர் பள்ளி மாணவன் சிவராமன் முதல் சுற்றில் பூனாவை சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு வென்றார்.
    • இறுதி சுற்றில் மகாராஷ்டிரா மாநில அணியுடன் மோதி 28 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கம் மற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    பூதலூரில் செயல்பட்டு வரும் புனித ஆரோக்கிய அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கபடி மட்டும் செஸ் போட்டிகளில் பங்குகொண்டனர்.

    14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் நடைபெற்ற கபடி மட்டும் செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கபதக்கத்தை வென்றனர். கபடி போட்டியில் கேப்டன் பொன்னிவளவன் தலைமை–யிலான குழுவினரும், செஸ் போட்டியில் சிவராமனும் கலந்து கொண்டனர்.

    செஸ் போட்டியில் பூதலூர் பள்ளி மாணவன் சிவராமன் முதல் சுற்றில் பூனாவை சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு வென்றார். இறுதிச்சுற்றில் ஹரியானா மாணவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்று தங்கப்ப–தக்கம் வென்றார். கபாடியில் பொன்னிவளவன் தலைமை–யிலான குழுவினர் முதல் சுற்றில் ஹரியானாவுடன் விளையாடி 23 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றனர்.

    இறுதி சுற்றில் மகாராஷ்டிரா மாநில அணியுடன் மோதி 28 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கம் மற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் நேற்று மாலை ரயில் மூலம் பூதலூர் வந்தனர். பூதலூர் ரயில் நிலையத்தில் பள்ளி முதல்வர் மரிய ஜோஸ்லின் அமலா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரண்டு நின்று வெற்றி வீரர்களை வரவேற்றனர். பேண்ட் வாத்தியம் முழங்க, சரவெடி வெடிக்க வெற்றி பெற்ற மாணவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    கபடி பயிற்சியாளர் பிரசாந்த், கபடி கேப்டன் பொன்னிவளவன், செஸ் வெற்றியாளர் சிவராமன் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் சந்தனமாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வெற்றி திலகமிட்டு பெற்றோர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.

    தமிழ் நாட்டின் பழமையான விளையா–ட்டான கபடியில் தேசிய சாதனை படைத்த கிராமத்து மாணவர்களையும் பயிற்சி அளித்த பயிற்சியா ளர், ஊக்குவித்த பள்ளித்த லைமை ஆசிரியர், உள்ளி ட்டோர்களை விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.

    • பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது

    பூதலூர்:

    பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் தஞ்சை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதுநிலை விரிவுரையாளர் ஜெயராஜ், பூதலூர் ஒன்றிய எண்ணும் எழுத்தும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் செங்குட்டுவன், பூதலூர் வட்டார கல்வி அலுவலர் ரமாபிரபா, உதவி பேராசிரியர் இளையராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×