search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Assembly"

    • கமுதி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராம லிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் தங்கமணி, மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர்.

    தலைமை கழக பேச்சாளர் நல்ல சேதுபதி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் விநாயக மூர்த்தி, பிரதிநிதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தளபதி அறிவாலய திடலில் நடந்தது
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலய திடலில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய கழக செயலாளர் மற்றும் வி.எஸ்.ஞானவேலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கணல் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஒன்றிய நிர்வாகிகள் எம்.சி. ராமநாதன், வி.ஜி.அன்பு, ஷோபா வெங்கடேசன், லட்சுமி பொண்ணம்பலம். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி மகேந்திரன், பாமிதா ஆசிப், ஊராட்சிமன்ற தலைவர் ஈச்சங்கால் ஏழுமலை, முருகன், செல்வம், பள்ளிபட்டு செல்வம், மெக்கானிக் நாகராஜ், பத்தாப்பேட்டை ஜெயராமன், கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டையில் தினத்தை முன்னிட்டு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ரமேஷ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் ஆன்லைன் தொழிற்சங்க கல்வியை உருவாக்கிடவும், நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் சார்பாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், ஒரு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாதவன் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொது செயலாளர்-முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    பெத்தானியாபுரம் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஆர். சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை தாங்குகிறார்.மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜா வரவேற்று பேசுகிறார்.

    மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் ரவிச்சந்திரன், மத்திய 6-ம் பகுதி செயலாளர் ராமச்சந்திரன், சக்தி மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கணேஷ் பிரபு, முன்னிலை வைக்கிறார்கள்.

    தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் மல்லன், தவசி, சுப்புராஜ், பாலகுமார், ராஜசேகரன், முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்று கிறார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டாக்டர் முத்தையா, துணைச்செயலாளர் எம். எஸ். பாண்டியன், பேச்சா ளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    தொழிலாளர்களின் மேன்மையை சிறப்பிக்கும் இந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவு நிர்வாகி கள் மற்றும் முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • நாளை நடக்கிறது
    • குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்

    வேலூர்:

    ராணுவ ஓய்வூதிய கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் ராணுவ ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை சம்பந்தமாக ராணுவ ஓய்வூதிய அதிகாரிகள் மூலமாக விளக்க நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூர் கோட்டை பின்புறம் உள்ள காவலர் நல வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இதில் முப்படை ராணுவ ஓய்வூதியம் பெறும் வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் சார்தோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இத்தகவலை நெல்சன் அந்தோணி தெரிவித்துள்ளார்.

    • ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.
    • நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி. மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஊரப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளரும் , ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. ஊரப்பாக்கம் ஊராட்சி கிளை கழக செயலாளர் மெய்யழகன், ஜான்தினகரன், தமிழ்ச் செல்வன், இன்பசேகரன், கண்ணன், சண்முகம், சாய்ராம், புஷ்பராஜ், வரலட்சுமிமுருகன், ஜே.கே.தினேஷ், சி.ஜெ.கார்த்திக், வாசு, கமலநாதன், செல்வகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கருணாகரன், மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தீபன் மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    விழாவில் கிளை செயலாளர் சி.ஜே.கார்த்திக் ஏற்பாட்டில் 2500 பெண்களுக்கு புடவை, பிரியாணி, சலவைத் தொழிலாளர்கள் 15 பேருக்கு அயன்பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி, இளைஞர்களுக்கு கேரம் போர்டு, வாலிபால், டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகிய நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவி.எம். இளங்கோவன் நன்றி கூறினார்.

    • கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது
    • உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட குலால்பாடி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு கலசப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஏ.கே.மூர்த்தி, ரமேஷ், நகர செயலாளர் ராதா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு யூனியன் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன் வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி போன்ற பொது மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.இவற்றையெல்லாம் முடக்கி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனையாகும். இதனால் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது.

    தி.மு.க. அரசை பொது மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை. தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டு பிரதமர் ஆட்சியை கலைத்து விடுவார் என்பதை தடுப்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார். ரூ.600 கோடியை செலவழித்து ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றியானது ஜனநாயகத்தின் படுகொலை யாகும். எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேசுவரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்-கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • சாயல்குடி அருகே காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
    • வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பொறுப்புக் குழு தலைவருமான மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர் மாநில பொதுச் செயலாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், கோபால் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்ட சேவா தள தலைவர் கணேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன், சிறுபான்மை மாநில செயலாளர் ஜெய்னுல் ஆலம், வழக்கறிஞர் சரவணா காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேசுவரன் ஆகியோர் பேசினர். வட்டாரச் செயலாளர் கனி வரவேற்றார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறப்பு பேச்சாளர் அலிம்அல் புஹாரி சிறப்புரை ஆற்றினர்.

    கடலாடி தெற்கு வட்டாரத் தலைவர் அப்துல் சத்தார், கடலாடி மேற்கு சுரேஷ் காந்தி, நரிப்பையூர் ஞானசேகரன், முன்னாள் வட்டாரத் தலைவர் சேசு மனோகரன், சாயல்குடி நகர தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர்கள் போஸ், கலைச்செல்வன், சகாயராஜ், சையது இப்ராஹிம், அமிர்தராஜ், கொக்காடி, கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    • காரைக்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நகர தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் துணை வேந்தருமான சபாபதி மோகன், தலைமை கழக பேச்சாளர் முகவை ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் மாநில மாணவரணி துணை செயலாளர் பூர்ணசங்கீதா, தேவகோட்டை நகர செயலாளர் பாலமுருகன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள் மைக்கேல், கார்த்திகேயன், சித்திக், ஹேமலதாசெந்தில், தனம்சிங்கமுத்து, பூமிநாதன், நாச்சம்மை, நகர துணை செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டி, ரமேஷ், விஜயகுமார், முகமதுகனி, மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.

    • முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேசினார்
    • இட ஒதுக்கீடு அரசு அளிக்கும் வரை வீர முத்தரையர் சங்கத்துடன் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் தொடர்ந்து போராடுவோம் என பேசி–னார்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசி–றியில் தமிழர் தேசம் கட்சி சார்பில் இடப்பங்கீடு எனது உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் கலந்து–கொண்டு பேசியதாவது:- முத்தரையர் மக்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும், ஜாதிவாரிய கணக் கெடுப்பு எடுத்து மக்களுக்கு உரிய இடப்பங்கீட்டை வழங்க வேண்டும்.

    இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எங்களது இடப்பங்கீடு உரிமை குறித்து தமிழகத்தில் 12 இடங்களில் கூட்டம் நடத்தி தமிழக அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததை தொடர்ந்து, முசி–றியில் 13-வது கூட்டத்தை நடத்துகிறோம். ஆகவே முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இட ஒதுக்கீடு அரசு அளிக்கும் வரை வீர முத்தரையர் சங்கத்துடன் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் தொடர்ந்து போராடுவோம் என பேசி–னார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் குரு–மணிகண்டன், மாநில கொள்கை பரப்பு செய–லாளர் தஞ்சை சாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராஜ், முசிறி செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


    • திருமங்கலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருமங்கலம் ஜவகர்நகர் ரவுண்டானாவில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். நகர் செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேசன், நகர்மன்ற தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் குன்னூர் ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாநில அணி நிர்வாகிகள் முத்துராமலிங்கம்,கொடிசந்திரசேகர், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், செல்வம்.மாவட்ட அணி அமைப்பாளர்கள் தங்கேசுவரன், பாண்டி, முருகன், கிருத்திகா தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செய லாளர் மதன்குமார் நன்றி கூறினார்.

    ×