search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. அரசு"

    • கனிமொழி எம்.பி. பேச்சு
    • தி.மு.க. அரசில் கருணாநிதி மீனவர் நலத்து றையை உருவாக்கினார்

    நாகர்கோவில், நவ.22-

    குமரி மாவட்டத்தில் கடற் கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை தி.மு.க. அரசு செய்ததாக இனயம் புத்தன்துறையில் நடந்த மீனவர் தின விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறையில் மீனவர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கனிமொழிஎம்.பி., கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடலில் மட்டுமல்ல போராட்டம், வாழ்க்கை நடத்தும் கடற்கரையிலும் இயற்கையினால் ஏற்படும் போராட்டங்களை விவரித்தனர். இதை அறிந்து தான் தி.மு.க. அரசில் கருணாநிதி மீனவர் நலத்து றையை உருவாக்கினார். இங்கு பேசும் போது தமிழக சட்டமன்றத்தில் மீனவர்க ளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றனர். கருணாநிதி அரசில் முதல் மீன்வளத்துறை அமைச்சர் சென்னை மீனவர் கே.பி.பி.சாமி தற்போது அவரது சகோதரர் கே.பி.பி. சங்கர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மீன்வளத்துறை மட்டுமின்றி தமிழகத்தின் மிக முக்கிய துறையான சுகாதார துறையின் தற்போதைய அமைச்சர் ஒரு மீனவர் என்பதை கூறிக் கொள்கிறேன். இங்கு முக்கிய பிரச்சனையாக மீனவர்களை பழங்குடியி னர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்து உள்ளனர். வரும் நாடாளு மன்ற தேர்தலில் மத்தியில் ஒரு மாற்றம் வரும். மாற்றம் வந்தால் மீனவர் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கு என ராமநாதபுரத்தில் தனி மாநாடு நடத்தியவர் ஸ்டாலின், மீன்வள கல்லூ ரிகளில் மீனவ மாண வர்களுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கியதும் தி.மு.க., அரசு தான். குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்தது தி.மு.க., அரசு. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத் தில், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்கு மார், பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திடங்களையும் முடக்கி உள்ளனர்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நல்லாட்சியை தந்தார்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க.சார்பில் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருமுருகன்பூண்டி சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ், அ.தி.மு.க. தலைமை பேச்சாளர் அறிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நல்லாட்சியை தந்தார். இன்று தி.மு.க. ஆட்சியில் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. சொத்து வரி அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடக்கி உள்ளனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்றுவரை அதை ரத்து செய்ய முடியாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏழை மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.க. அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதா வது:-

    புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொழிலா ளர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்து டன் இணைந்து வருகின்ற னர். 2 கோடி சேர்க்கையை எடப்பாடி பழனிசாமி நிர்ணயித்துள்ளார். ஆனால் இன்றைக்கு 2½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாகும் நிலை உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தமி ழகத்தில் தான் சட்டம்- ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.அதேபோல் கள்ளச்சாரா யத்தால் அதிகளவில் உயிர் பலியான மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

    கடந்த 2022-2023ம் ஆண்டுக்கான கடன் வாங்கிய மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் மகாராஷ்ட்ரா, மூன்றாவது இடத்தில் மேற்கு வங்காளம், 4-வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளன.

    எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி கொடுத்தார். அதன் மூலம் தமிழகத்திற்கு 1,450 மருத்துவ இடங்கள் கிடைத்தது. மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் 565 மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற்று ஆண்டு தோறும் பயன் பெற்று வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் 650 இடங்கள் பறிபோகி உள்ளது. இதற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது அணை பிரச்சினையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காவிரி நீர் பிரச்சினை என்பது உயிர் பிரச்சினை யாகும். 20 மாவட்டத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதார மாக விளங்கி வருகிறது. டெல்டா விவசாயிகளின் நெற்களஞ்சியத்துக்கு காவிரி உயிர் ஆதாரமாகவும் உள்ளது.

    காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளை ெஜயலலிதாவும், எடப்பாடி யாரும் முதலமைச்சராக இருந்த போது தடுத்து நிறுத்தினார்கள். குறிப்பாக 19.2.2013 அன்று மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் ெஜயலலிதா வெளி யிட்டார்கள். இதனை தொடர்ந்து காவிரி தாய் என்று டெல்டா மக்கள் புகழாரம் சூட்டினார்.

    அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதல்-அமைச்சராக இருந்தபோது ெஜயலலிதா வழியில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி 16.12.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குழுவை அமைக்க வர லாற்று தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார். தற்போது கர்நாடக சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி உள்ளது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தெரிந்தும் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க ஆயத்தமாகி விட்டாரா? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் சிவகுமார் அணை கட்டுவோம் என்று கூறியிருப்பது தமிழக மக்களிடத்தில் கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்- அமைச்சர் வாய் திறக்க வில்லை. அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை கடுமையான கண்டனமாக இல்லை. இதன் மூலம் ஜீவதார உரிமையில் அரசு கவனம் செலுத்தவில்லையோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
    • பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் வேடமிட்டவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பா.ஜ.க. (எஸ்.சி) அணி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, ஐகோர்ட்டு வக்கீலும், பா.ஜனதா பிரமுகருமான சண்முகநாதன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் பிரபு, நகர தலைவர் சுப நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சேகர், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொது செயலாளர் காளிராஜா மற்றும் நேதாஜி உள்பட பா.ஜனதா மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அந்த மனுவில், மத்திய அரசு பட்டியல் என சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை தி.மு.க. அரசு முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறது. மேலும் பட்டியலின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்தில் நகர தலைவர் பிச்சை, மாவட்ட செயலாளர் உமாரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஹீரோ கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு யூனியன் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன் வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி போன்ற பொது மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.இவற்றையெல்லாம் முடக்கி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனையாகும். இதனால் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது.

    தி.மு.க. அரசை பொது மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை. தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டு பிரதமர் ஆட்சியை கலைத்து விடுவார் என்பதை தடுப்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார். ரூ.600 கோடியை செலவழித்து ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றியானது ஜனநாயகத்தின் படுகொலை யாகும். எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேசுவரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்-கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என்று ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டினார்.
    • தமிழ் மொழி குறித்து தி.மு.க. விற்கு பேச எந்த தகுதியும் கிடையாது.

    சிவகாசி

    சிவகாசி அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    தமிழ் மொழி குறித்து தி.மு.க. விற்கு பேச எந்த தகுதியும் கிடையாது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, இலவச லேட்பாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதுடன் சொத்துவரி, வீட்டு வரி, மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் விஜய், துணை செயலாளர் சோலை இரா, க ண்ணன், தலைமை கழக பேச்சாளர்கள் சிங்கை. அம்புலம், மதுரை தமிழரசன், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்..ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா கலந்து கொண்டு பேசினர்.

    சிவகாசி கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் அசன்பதூருதீன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, சிவகாசி மாநகர பகுதி கழகச் செயலாளர்ள் கருப்புசாமி பாண்டியன், சாம்(எ) ராஜா அபினேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் வசந்தகுமார், மாவட்ட மாணவர் அணி ஜான் என்ற மாரி செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மகேஸ்வரி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய அம்மா பேரவை கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.

    • வரிச்சுமைகளை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
    • தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றினார்.

    மதுரை இன்று வளர்ந்த மாவட்டமாக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தான். அதை திறம்பட செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

    நம்முடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார் மு.க. ஸ்டாலின். மதுரையில் இருக்கும் இரு அமைச்சர்களும் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதி யாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு ஊழியர்களின் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.

    விடியல் ஆட்சி தருகிறேன் என சொல்லிவிட்டு ஸ்டாலின் விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.மின்சார கட்டணம், பால்விலை உயர்வு, சொத்துவரி என பல மடங்கு வரிகளை உயர்த்தி சாதனை படைத்துள்ளது தி.மு.க. அரசு.இதற்கு தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொங்கல் பரிசு வழங்கவே தி.மு.க. அரசு யோசிக்கிறது என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
    • வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    சிவகங்கை

    சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டையில் சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க நகரசெயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா காலத்தில் கூட பொது மக்களுக்கு பொங்கல் பரிசு, உதவி தொகைகளை வழங்கியது. வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    தற்போதைய தி.மு.க. அரசு பொங்கல் பரிசு வழங்கவே யோசித்து வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, கருணா கரன், அருள்ஸ்டிபன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    நிர்வாகிகள் மாரியப்பன், செல்வம், கவுன்சிலர் சின்ன மருது, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், அவைத்தலைவர் பாண்டி, கேபி.முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிகுமார், பாபு, மாவட்ட பாசறை துணைச்செயலாளர் சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும்.
    • உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம் குமரி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவநலத் துறை சார்பில் உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம் முட்டத்தில் நடந்தது.

    பொதுக்கூட்டத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சகாயராஜ் தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசினார்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய உங்களோடு இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாதி மீனவர்கள் வசிக்கின்றனர். மெரினா கடற்கரை பாதி தொகுதியில் வருகிறது. என் எம்.எல்.ஏ. அலுவலகம் மீனவ பகுதியில் தான் உள்ளது. அவர்களின் செல்ல பிள்ளையாக அவர்கள் வீட்டில் ஒருவராக நான் உள்ளேன். இங்கே உங்களை அன்போடு பார்க்கிறேன்.

    கலைஞர் அரசு தான் கை ரிக்‌ஷாவை ஒழித்தது. படகுகளுக்கு இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தந்தது, மீனவர் நல வாரியம், மீன்பிடி தடை கால நிவாரணம், டீசல் மானியம் உயர்வு போன்றவற்றை தந்தது கலைஞர் அரசுதான்.

    சிறு படகுகளுக்கு மண்எண்ணெய், காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டியது வெளிநாடுகளில் சிறையில் வாடிய 170 மீனவர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்து வந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.ரூ.320 கோடி மீனவர்களுக்கு நிவாரணம் ரூ.743 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெய் மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 6000 ஆக உயர்த்தியது மு க ஸ்டாலின் அரசு தான். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ.8000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

    14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். கடலில் காணாமல் போன மீனவர்களில் இறந்தவர்க ளாக அறிவிக்க 7 ஆண்டுகள் என்பது அதிகம்.இதை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

    கணவரை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் கிடைக்க பரிசீலனை செய்யப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். கடல் ஆம்புலன்ஸ் சர்வதேச அடையாள அட்டை அரசின் கவனத்தில் உள்ளது. நிதி நிலையை பொறுத்து அவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார் என உறுதி அளிக்கிறேன். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகள் காலி செய்ய வேண்டும் தி.மு.க. இதனை ஏற்காது. மீனவர்களின் கோரிக்கைகளை முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.

    மத்திய அரசு மீனவர்க ளுக்கு எதிராக எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் மீனவர்கள் பக்கம் தான் திமுக அரசு இருக்கும் அதனால் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.

    13 கோரிக்கைகள் இங்கு தந்துள்ளீர்கள். மீன வர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணும் பணியில் திராவிட மாடல் அரசு ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மீன் துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில தலைமை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணியையும், அவனியா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி மற்றும் நவீன வகுப்பறையை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு டேபிள், சேர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வகுப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள் இது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    234 தொகுதிகளில் மக்களின் 10 கோரிக்கைகள நிறைவேற்றும் வகையில் ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டுமென்றும், கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையான நிலையூரில் அரசு கைத்தறி கூடம் வேண்டும் என்றும், அதேபோல் நாகமலை புதுக்கோட்டையில் சிப்காட் அமைக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை? மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வரும் தேர்தல் காலங்களில் தி.மு.க. தோல்வி தழுவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியசெயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், வட்ட செயலாளர்கள் ஜெய கல்யாணி, நாகரத்தினம், தவுடன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண் ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கிழக்கு பகுதி செயலாளர் ஜெயகோபால் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தெற்கு பகுதி செயலா ளர் முருகேஷ்வரன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது, மாநக ராட்சியாக தரம் உயர்த்தி யது அ.தி.மு.க. ஆட்சியில் தான். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் பல ஆண் டுகளுக்கு முன்பாக கட்டப் பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை மீண்டும் கட்டுவ தற்கு கட்டிட வரைபட அனுமதிகோரி விண்ணப் பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் பழைய வீடுகளை புதுப்பிக்க விரும்பும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள் ளார்கள்.

    ஆட்சியின் குறையை வெளியே தெரியாமல் மறைக்க தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டர், இலவச மடிக்க ணினி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பச் சைமால், அனைத்துலகஎம். ஜி.ஆர். மன்ற இணைச்செய லாளர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தலை மைக்கழக பேச்சாளர் முரு கானந்தம், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணிஇணைச்செயலாளர் சிவசெல்வராஜன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸிம், மகராஜன் பிள்ளை மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர் வடிவை மாதவன், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் முத்துக் குமார், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் நீலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×