search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paying attention"

    • மேகதாது அணை பிரச்சினையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காவிரி நீர் பிரச்சினை என்பது உயிர் பிரச்சினை யாகும். 20 மாவட்டத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதார மாக விளங்கி வருகிறது. டெல்டா விவசாயிகளின் நெற்களஞ்சியத்துக்கு காவிரி உயிர் ஆதாரமாகவும் உள்ளது.

    காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளை ெஜயலலிதாவும், எடப்பாடி யாரும் முதலமைச்சராக இருந்த போது தடுத்து நிறுத்தினார்கள். குறிப்பாக 19.2.2013 அன்று மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் ெஜயலலிதா வெளி யிட்டார்கள். இதனை தொடர்ந்து காவிரி தாய் என்று டெல்டா மக்கள் புகழாரம் சூட்டினார்.

    அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதல்-அமைச்சராக இருந்தபோது ெஜயலலிதா வழியில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி 16.12.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குழுவை அமைக்க வர லாற்று தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார். தற்போது கர்நாடக சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி உள்ளது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தெரிந்தும் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க ஆயத்தமாகி விட்டாரா? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் சிவகுமார் அணை கட்டுவோம் என்று கூறியிருப்பது தமிழக மக்களிடத்தில் கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்- அமைச்சர் வாய் திறக்க வில்லை. அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை கடுமையான கண்டனமாக இல்லை. இதன் மூலம் ஜீவதார உரிமையில் அரசு கவனம் செலுத்தவில்லையோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×