search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்
    X

    தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்

    • 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதா வது:-

    புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொழிலா ளர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்து டன் இணைந்து வருகின்ற னர். 2 கோடி சேர்க்கையை எடப்பாடி பழனிசாமி நிர்ணயித்துள்ளார். ஆனால் இன்றைக்கு 2½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாகும் நிலை உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தமி ழகத்தில் தான் சட்டம்- ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.அதேபோல் கள்ளச்சாரா யத்தால் அதிகளவில் உயிர் பலியான மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

    கடந்த 2022-2023ம் ஆண்டுக்கான கடன் வாங்கிய மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் மகாராஷ்ட்ரா, மூன்றாவது இடத்தில் மேற்கு வங்காளம், 4-வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளன.

    எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி கொடுத்தார். அதன் மூலம் தமிழகத்திற்கு 1,450 மருத்துவ இடங்கள் கிடைத்தது. மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் 565 மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற்று ஆண்டு தோறும் பயன் பெற்று வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் 650 இடங்கள் பறிபோகி உள்ளது. இதற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×