search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tax burden"

    • வரிச்சுமைகளை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
    • தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றினார்.

    மதுரை இன்று வளர்ந்த மாவட்டமாக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தான். அதை திறம்பட செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

    நம்முடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார் மு.க. ஸ்டாலின். மதுரையில் இருக்கும் இரு அமைச்சர்களும் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதி யாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு ஊழியர்களின் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.

    விடியல் ஆட்சி தருகிறேன் என சொல்லிவிட்டு ஸ்டாலின் விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.மின்சார கட்டணம், பால்விலை உயர்வு, சொத்துவரி என பல மடங்கு வரிகளை உயர்த்தி சாதனை படைத்துள்ளது தி.மு.க. அரசு.இதற்கு தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #GST #PChidambaram
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்பதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

    இதே நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் நாட்டின் வேலை வாய்ப்பு சீர் குலைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இன்று டெல்லியில் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், “ஜிஎஸ்டியின் வடிவம், கட்டமைப்பு முறை, வரி விதிப்பு மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாமானியர்களிடையே ஜிஎஸ்டி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜிஎஸ்டி தங்களது வரிச்சுமையை அதிகரித்துள்ளது என சாமானிய மக்களும் உணர்கின்றனர். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது எனவும் சிதம்பரம் கூறினார். 
    ×