search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழை மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.க., அரசை விரைவில்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பேச்சு
    X

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் செல்வராஜ் எம்.எல்.ஏ., பேசிய போது எடுத்த படம்.

    ஏழை மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.க., அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பேச்சு

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திடங்களையும் முடக்கி உள்ளனர்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நல்லாட்சியை தந்தார்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க.சார்பில் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருமுருகன்பூண்டி சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ், அ.தி.மு.க. தலைமை பேச்சாளர் அறிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நல்லாட்சியை தந்தார். இன்று தி.மு.க. ஆட்சியில் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. சொத்து வரி அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடக்கி உள்ளனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்றுவரை அதை ரத்து செய்ய முடியாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏழை மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.க. அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×