search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது
    X

    கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

    அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது

    • அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என்று ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டினார்.
    • தமிழ் மொழி குறித்து தி.மு.க. விற்கு பேச எந்த தகுதியும் கிடையாது.

    சிவகாசி

    சிவகாசி அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    தமிழ் மொழி குறித்து தி.மு.க. விற்கு பேச எந்த தகுதியும் கிடையாது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, இலவச லேட்பாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதுடன் சொத்துவரி, வீட்டு வரி, மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் விஜய், துணை செயலாளர் சோலை இரா, க ண்ணன், தலைமை கழக பேச்சாளர்கள் சிங்கை. அம்புலம், மதுரை தமிழரசன், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்..ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா கலந்து கொண்டு பேசினர்.

    சிவகாசி கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் அசன்பதூருதீன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, சிவகாசி மாநகர பகுதி கழகச் செயலாளர்ள் கருப்புசாமி பாண்டியன், சாம்(எ) ராஜா அபினேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் வசந்தகுமார், மாவட்ட மாணவர் அணி ஜான் என்ற மாரி செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மகேஸ்வரி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய அம்மா பேரவை கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×