search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது.
    • சுகைலை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார்.

    இந்த நிலையில் சுகைலின் வீட்டிற்கு நேற்று முன்தினம் கோட்டயம், கலால் பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 220 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சுகைலை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும், 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றதும் தெரிய வந்தது.

    • பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர்.
    • கழிவறை அருகில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.

    மயிலாடுதுறை:

    திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் திருப்பதி-மன்னார்குடி பாமினி எகஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா மாநிலம் திருப்பதி ரெயில்நிலையத்தில் இருந்து சோதனை செய்து வந்துள்ளனர்.

    சீர்காழி ரெயில் நிலையம் வருவதற்கு முன்னர் வண்டியின் பின்னால் உள்ள முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பொதுப்பெட்டியில் கழிவறை அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.

    அப்போது அருகில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது அது தங்களுடையது இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த பேக்குகளை மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறக்கி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    2 பேக்குகளிலும் மொத்தம் 11 பொட்டலங்கள் இருந்துள்ளது. பின்னர் அந்த கஞ்சா பொட்டலத்தை தனித்தனியாக எடைபோட்டு பார்த்ததில் 11 பொட்டலங்களில் தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா இருந்தது.

    இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் போலீசார் ஓப்படைத்தனர்.

    • சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
    • கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 8 கிலோ கஞ்சா பறிமுதல்; சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சம்பவத்தன்று எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    மாடக்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு கும்பல் மறைந்திருந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். இதைப்பார்த்து உடனே போலீசார் அவர்களை துரத்தினர். இதில் 5 பேர் பிடிபட, 2 பேர் தப்பினர்.

    சிக்கிய 5 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் 7 கிலோ 700 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் புது ஜெயில் ரோட்டை சேர்ந்த சகோதரர்களான ஜாக்கி என்ற பிரசாத் (வயது22), பாண்டியராஜன் (23) மற்றும் திருப்பாலை அன்பு நகர் முருகன் மகன் முத்துகிருஷ்ணன் (24), வில்லாபுரம் உருவாட்டி மகன் ஈஸ்வரன் 35, ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணியன் (24) என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    • கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வடகரை சுடுகாடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    திருமங்கலம், மே.31-

    திருமங்கலம் டவுன் போலீசார் வடகரை சுடுகாடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வந்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது அவர்களிடம் இருந்து 1.600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் அவர்கள் திருமங்கலம் ஊத்துப்மேட்டை சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 19 ), விருதுநகர் மாவட்டம் பாலவ நத்தத்தைச் சேர்ந்த மலையரசன் (53 )என்று தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் திருப்பூர் மாநகர பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், மதுவிற்பனை போன்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
    • பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் குழந்தையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டார்.

    அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஊர் பொது மக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவன் கஞ்சா போதையில் இருந்ததால் அவனது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கயிறுகளால் கைகளை கட்டி சிறைபிடித்தனர்.

    பின்னர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (22) என்பதும் இவர் அப்பகுதியில் எந்நேரமும் கஞ்சா போதையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 வயது ஆண் குழந்தையிடம் கையில் பணம் கொடுத்து ஆசை வார்த்தைகளை கூறி அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாகவும் அந்தக் குழந்தையின் பாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மேலும் கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    தற்போது குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசார் விக்கி என்ற விக்னேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ரூ.1,500 பணத்துக்காக போதை வாலிபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தார். அந்த மூதாட்டி சாலையோரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர். அவர் யார்? அவரது சொந்த ஊர் எது? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கஞ்சா மற்றும் மது போதையில் இரவு நேரங்களில் நகை பறிப்பில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிப்பதற்காகவும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து சென்று நகை பறிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

    • அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

     அவினாசி :

    அவினாசி அருகே கஞ்சா வைத்திருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி மங்கலம் ரோடு கருணை பாளையம் பிரிவு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சயிராப் குமார் (25 ) என்பதும் அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதன்படி நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் இதர இடங்களில் புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 70,782 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 232 சிகரெட்டு பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,730/- பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தென்காசி மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான கணவன், மனைவி, பெற்றோர் போன்றவர்களின் 28 வங்கி கணக்குகள் இதுவரை முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கஞ்சாக்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகள் முறைப்படி முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 வாரத்தில் சுமார் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுபோல், சேடபட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான 2 வழக்குகளில் சுமார் ரூ.59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, கடந்த 2 வாரங்களில் ஊமச்சிகுளம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் ஆகிய உட்கோட்டங்களில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா மொத்த விற்பனையாளர்கள் மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படும்" என்றார்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    திருநின்றவூர்:

    ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்தார். அவரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் அவர், குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.72 லட்சம் பணம், 218 பவுன் நகை, 100 செல்போன் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. லாக்கப்பில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

    ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுபோல் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும். அனைத்து காவலர்களும் என்னை நேரடியாக சந்திக்கலாம். குறைகளைத் தீர்க்க தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×