search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திர பாபு"

    சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று வழங்க வேண்டும் என சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் இணைய தளங்கள், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இணைய தளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 748 வந்தன. ஆனால் 2021-ம் ஆண்டு 13,077 சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள், 1,648 சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

    இதனால் தமிழக காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு தனியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சைபர் குற்றப்பிரிவு தனியாக உருவாக்கப்பட்டு, அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து ஏற்கனவே இருக்கும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தவிர்த்து புதிதாக 46 சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதேபோல 6 மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சைபர் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்திடும் வகையிலும், சைபர் குற்றத்தினால் ஏற்படும் பண இழப்பை முற்றிலும் தடுக்கும் வகையிலும், சைபர் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏற்படும் தாமதத்தை தவிர்த்திடும் வகையிலும், சைபர் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களை மட்டும் விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கும்படி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    காவல் நிலையத்தில் இந்த தனிப்பிரிவுக்கு ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு முதல் நிலை காவலர், ஒரு வரவேற்பாளர் தனியாக நியமிக்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த தனிப்பிரிவுக்கு நியமிக்கப்படும் போலீசார் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றவராகவும், அந்த குற்றங்களை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    இப்பிரிவில் உள்ள போலீசார், சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் குற்றத்தில் பணம் மோசடி குறித்து வரும் புகார்களை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் சைபர் குற்றப்பிரிவின் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பண மோசடி தவிர்த்து பிற சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களை தேசிய சைபர் குற்றப்பிரிவு தகவல் மையத்துக்கு அனுப்பி உதவி பெறலாம்.

    சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று (சி.எஸ்.ஆர்) வழங்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.


    ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அசுரவளர்ச்சி அடைந்து இருக்கிறது. 2021-22-ம் நிதியாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளமான பிக்கி தெரிவித்து இருந்தது. 2023-ல் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல் ஆசையை தூண்டி விட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல. மோசடி ரம்மி.

    ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்சினை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்.

    இந்த காணொலியை கண்ட பிறகும் விளையாடினால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவு செய்து யாரும் ஈடுபட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    திருநின்றவூர்:

    ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்தார். அவரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் அவர், குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.72 லட்சம் பணம், 218 பவுன் நகை, 100 செல்போன் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. லாக்கப்பில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

    ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுபோல் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும். அனைத்து காவலர்களும் என்னை நேரடியாக சந்திக்கலாம். குறைகளைத் தீர்க்க தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×