search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரே‌ஷன் கஞ்சா வேட்டை"

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதன்படி நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் இதர இடங்களில் புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 70,782 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 232 சிகரெட்டு பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,730/- பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தென்காசி மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான கணவன், மனைவி, பெற்றோர் போன்றவர்களின் 28 வங்கி கணக்குகள் இதுவரை முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கஞ்சாக்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகள் முறைப்படி முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 வாரத்தில் சுமார் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுபோல், சேடபட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான 2 வழக்குகளில் சுமார் ரூ.59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, கடந்த 2 வாரங்களில் ஊமச்சிகுளம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் ஆகிய உட்கோட்டங்களில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா மொத்த விற்பனையாளர்கள் மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படும்" என்றார்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    திருநின்றவூர்:

    ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்தார். அவரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் அவர், குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.72 லட்சம் பணம், 218 பவுன் நகை, 100 செல்போன் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. லாக்கப்பில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

    ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுபோல் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும். அனைத்து காவலர்களும் என்னை நேரடியாக சந்திக்கலாம். குறைகளைத் தீர்க்க தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×