search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire"

    • பெரம்பலூர் அருகே ஓடும் லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    பெரம்பலூர்,

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்க என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினார். இதையடுத்து லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை கொண்டு, லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீைய அணைக்க முயன்றனர். இதற்கிடையே பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி கடை முழுவதும் எரிந்தது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் பேக்கரியில் இருந்த கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருப்பினும் தீயில் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது.
    • டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை, செருப்பு கடை, இனிப்பு தயார் செய்யும் கடை, சலூன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது60) என்பவர் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை வாரசந்தை கூடும் என்பதால், நேற்று பஸ்நிலையத்தில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்த வண்ணமாக இருந்ததால், அப்பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் முருகேசன் டீக்கடையில் திடீரென்று கியாஸ் சிலிண்டர் காலியானதால், வேறு சிலிண்டரை எடுத்து வந்து கியாஸ் அடுப்பில் பொருத்தினார். அப்போது திடீரென்று அதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே முருகேசன் மற்றும் கடையில் டீக்குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    அதற்குள் தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது. உடனே அங்கிருந்தவர்கள் உடனே போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டீக்கடையில் பற்றி கொண்ட தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டீக்கடைக்காரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிலிண்டர்களை வைத்து பயன்படுத்துவதால் இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் பல முறை குற்றசாட்டியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

    எனவே, இதுபோன்ற திறந்த வெளியில் டீக்கடை, பலகரா கடை, ஓட்டல் கடை ஆகிய கடைகளில் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்து கடைக்காரர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் தேங்காய் நார்களை இருப்பு வைக்க குடோன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குடோனில் இன்று காலை 9 மணி அளவில் தேங்காய் நார்கள் திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக எருமப்பட்டி, நாமக்கல் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை குடோன் முழுவதும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமானதாக கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.
    • ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி (27). இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து போனது. இந்த சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
    • இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 60). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியரான இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்க ளுக்கு சொந்தமான விவ சாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெங்கடாசலமும், சுமதியும் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது இவரது கூரை வீடு திடீரென புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை கண்ட வெங்கடாசலமும், சுமதியும் அலறி அடித்துக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மல மலவென கொழுந்து விட்டு எறிந்தது.

    இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முழுவது மாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம், பீரோ, கட்டில், டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்ப லானது. திடீரென கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது.
    • சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் இது ஆகஸ்ட் மாதமா?, அல்லது ஏப்ரல்,மே மாதமா? என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது. சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை அடுத்த துர்கா நகர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று இரவு இப்பகுதியில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதன்காரணமாக வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து தீப்பிடித்தன. அடுத்தடுத்து சுமார் 20- க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்பகுதியில் உள்ள கோலாகியம்மாள் (53) என்பவரது வீட்டிலும் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்தன. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கோலாகியம்மாள், ஏழு மாத கர்பிணியான சித்ரா(30), இரண்டு மாத குழந்தையான அஜய்குமார், 4 வயது சிறுவன் ரோஹித் ஆகியோர் மீது மின்வயரில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டு உடல் லேசாக கருகியது. மேலும் மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குரோம்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். மின்ஊழியர்கள் உயர்மின் அழுத்தத்தை சரிசெய்தனர். வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சொந்தமாக வாங்கிய இடத்தில் வாலிபர் தீக்குளித்து இறந்தார்.
    • ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் வசித்து வருபவர் வைரமுத்து (வயது 48), டிரைவர். இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கபிலன் (22) வசந்த் (21) என்ற மகன்கள் உள்ளனர்.

    வைரமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் 4 சென்ட் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சரிவர வேலை இல்லாததால் வீட்டில் வறுமை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டு மனையை விற்க முடிவு செய்தார். இதனை அறிந்த வைரமுத்துவின் மனைவி முத்துலட்சுமியின் தங்கை பார்வதி தன்னிடம் நிலத்தை விற்குமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு சம்மதித்த வைர முத்து அந்த இடத்தினை பார்வதிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இடத்திற்குரிய தொகையை பார்வதி சிறிது சிறிதாக கொடுத்துவந்துள்ளார். இதன் காரணமாக வைர முத்துவிற்கும் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி தங்கைக்கு ஆதரவாக பேசி யதால் குடும்பத்தில் பிரச் சினை ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்து கொண்டு வைரமுத்துவைப் பிரிந்து சென்று தென்காசி மாவட்டம் பொதிகை நகரில் இரு மகன்களுடன் தனியே வசித்து வருகிறார்.

    வீட்டுமனை விற்ற பணமும் முழுமையாக கிடைக்காததாலும், மனைவி, மகன்கள் பிரிந்து சென்றதாலும் வைரமுத்து மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற வைரமுத்து அங்கு வந்திருந்த தனது இரு மகன்களிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் வைரமுத்து மன வேதனைக்கு ஆளானார். இது குறித்து தனது தாய் மற்றும் உறவிரகளிடம் கூறி மனவேதனையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    மேலும் தனது தாயிடம் , குடும்பம் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் அந்த வீட்டுமனை தான் என்றும், அதனால் அந்த இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவந்துள்ளார். அதற்கு தாய் மற்றும் உறவினர்கள் வைரமுத்துவுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வீட்டுமனை பகுதிக்கு பெட்ரோல் கேனுடன் வைரமுத்து சென்றார். அங்கு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே வைரமுத்து பரிதாபமாக பலியானார். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் அவர் தீக்குளித்ததை உடனடியாக யாரும் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

    அந்த வழியாக சென்ற வர்கள் வைரமுத்து இறந்து கிடப்பதைப் பார்த்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வைரமுத்துவின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வறுமை மற்றும் குடும்பப்பிரச்சினையால் வைரமுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லையில் உள்ள 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
    • குப்பை கிடங்கில் பற்றிய தீயை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களை உள்ளடக்கியது. இந்த 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் 100 டன்னுக்கும் மேலாக மட்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

    தீ விபத்து

    இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு சங்கரன்கோவில் சாலை யில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சிரமம் ஏற்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அதனை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வாளர் சஸ்பெண்டு

    இந்நிலையில் தீ விபத்து நடந்த சில நாட்களில் அந்த பகுதி மேஸ்திரி பெருமாள் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது பேட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன்(வயது 52) சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார். பணி யில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டுள்ளார்.

    • ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
    • சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கடைகள் உள்ளது. இதன் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிகரெட் புகைத்து விட்டு குப்பைகளின் மேல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மளமளவென பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் - பக்கம் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடம் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மர்ம நபர் ஒருவர் சுடலைமணி வீட்டின் கதவுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
    • விசாரணையில், தீ வைத்து சென்றது முருகன் என்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மேலப்பாளையம் மேலநத்தம் பகுதியில் சேர்ந்தவர் சுடலை மணி. தொழிலாளி. நேற்று இரவு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுடலைமணி வீட்டின் கதவுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். உடனே வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து சுடலைமணி மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டு கதவின் அருகில் பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது. இதனால் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா? அல்லது பெட்ரோல் குண்டு ஏதேனும் வீசிவிட்டு சென்றார்களா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியில் கீழத்தெருவில் வசிக்கும் டேங்கர் வைத்து தண்ணீர் விற்பனை செய்யும் முருகன் (வயது 40) என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றது தெரிய வந்தது. சமீபத்தில் முருகனின் குழந்தை சுடலை மணிக்கு வீட்டுக்கு விளையாட சென்றதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் முருகன் தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×