search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்து சாவு"

    • தொழிலாளி தீக்குளித்து இறந்தார்.
    • இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கணபதியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 60), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள். இவர்களின் 2 மகள்கள், 1 மகனுக்கு திருமணமாகி விட்டது.

    திருமுருகன் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சொந்தமாக வாங்கிய இடத்தில் வாலிபர் தீக்குளித்து இறந்தார்.
    • ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் வசித்து வருபவர் வைரமுத்து (வயது 48), டிரைவர். இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கபிலன் (22) வசந்த் (21) என்ற மகன்கள் உள்ளனர்.

    வைரமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் 4 சென்ட் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சரிவர வேலை இல்லாததால் வீட்டில் வறுமை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டு மனையை விற்க முடிவு செய்தார். இதனை அறிந்த வைரமுத்துவின் மனைவி முத்துலட்சுமியின் தங்கை பார்வதி தன்னிடம் நிலத்தை விற்குமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு சம்மதித்த வைர முத்து அந்த இடத்தினை பார்வதிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இடத்திற்குரிய தொகையை பார்வதி சிறிது சிறிதாக கொடுத்துவந்துள்ளார். இதன் காரணமாக வைர முத்துவிற்கும் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி தங்கைக்கு ஆதரவாக பேசி யதால் குடும்பத்தில் பிரச் சினை ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்து கொண்டு வைரமுத்துவைப் பிரிந்து சென்று தென்காசி மாவட்டம் பொதிகை நகரில் இரு மகன்களுடன் தனியே வசித்து வருகிறார்.

    வீட்டுமனை விற்ற பணமும் முழுமையாக கிடைக்காததாலும், மனைவி, மகன்கள் பிரிந்து சென்றதாலும் வைரமுத்து மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற வைரமுத்து அங்கு வந்திருந்த தனது இரு மகன்களிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் வைரமுத்து மன வேதனைக்கு ஆளானார். இது குறித்து தனது தாய் மற்றும் உறவிரகளிடம் கூறி மனவேதனையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    மேலும் தனது தாயிடம் , குடும்பம் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் அந்த வீட்டுமனை தான் என்றும், அதனால் அந்த இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவந்துள்ளார். அதற்கு தாய் மற்றும் உறவினர்கள் வைரமுத்துவுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வீட்டுமனை பகுதிக்கு பெட்ரோல் கேனுடன் வைரமுத்து சென்றார். அங்கு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே வைரமுத்து பரிதாபமாக பலியானார். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் அவர் தீக்குளித்ததை உடனடியாக யாரும் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

    அந்த வழியாக சென்ற வர்கள் வைரமுத்து இறந்து கிடப்பதைப் பார்த்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வைரமுத்துவின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வறுமை மற்றும் குடும்பப்பிரச்சினையால் வைரமுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி பெற்றோரிடம் தகராறு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சார்ஜ் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்.இவருடைய மனைவி மெர்சி.காட்பாடி வேளாண்மை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுடைய மகன் சாம் ரிச்சர்ட் (வயது 31).மாற்றுத்திறனாளியான இவர் தனது பெற்றோரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் மனமுடைந்த சாம்ரிச்சர்ட் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அபேத்கார் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அசோக் ராஜ் (36) சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாததால் மன வேதனையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அசோக்ராஜை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அசோக்ராஜ் உயிரிழந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு தேர்வு எழுதி உள்ளார்.
    • பேச்சிப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மாங்காமலை பகுதியைச் சேர்ந்தவர் மணி.

    இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் மோனிஷா (வயது 20), நாகர்கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் அவரது தோழிகள் சிலர் சென்னை சென்று அழகுகலை படிப்பு படிக்கத் திட்டமிட்டனர். அவர்களுடன் தானும் சென்று படிக்க மோனிஷா முடிவு செய்தார். இதனை பெற்றோரிடமும் கூறினார்.

    ஆனால் அவர்கள் மேல்படிப்பு வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மோனிஷா மன வேதனை அடைந்தார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    இதில் உடல் கருகிய மோனிஷா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×