search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burn to death"

    • வெந்நீர் வைக்க கியாஸ் பற்றவைத்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அடுத்த ஓகூரை சேர்ந்தவர் பழனி (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (33). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    பழனியின் தாயார் இவர்கள் இருக்கும் வீட்டின் அருகே வசித்து வருகிறார். தாயாரை பழனி அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி தனது தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.

    வெந்நீர் வைப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கியாசில் வைத்தார். கியாஸ் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல் அதனை பற்ற வைத்தார்.

    அப்போது திடீரென அவர் மீது தீப்பிடித்தது. அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். பழனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த பழனியை ஆம்புலன்ஸ் மூலம் போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பழனி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போளூர் போலீசார் பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி பெற்றோரிடம் தகராறு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சார்ஜ் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்.இவருடைய மனைவி மெர்சி.காட்பாடி வேளாண்மை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுடைய மகன் சாம் ரிச்சர்ட் (வயது 31).மாற்றுத்திறனாளியான இவர் தனது பெற்றோரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் மனமுடைந்த சாம்ரிச்சர்ட் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அபேத்கார் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அசோக் ராஜ் (36) சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாததால் மன வேதனையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அசோக்ராஜை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அசோக்ராஜ் உயிரிழந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரக்காணம் அருகே கணவன் மனைவியை அடித்து எரித்து கொன்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 62). இவரது மனைவி ஞானம்மாள் (60). இவர் நேற்று மாலை வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்து கிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியின் கணவர் செல்லக்கண்ணு போலீசாரிடம் தெரிவிக்கையுல் தனது மனைவியுடன் வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மனம் உடைந்த ஞானம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை கொண்டார் என கூறினார்.

    இதையடுத்து போலீசார் ஞானம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனக செட்டிக்கு ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரி சோதனையில், ஞான ம்மாகள் அடித்து கொலை செய்ய ப்ப ட்டு எரிக்க ப்பட்டு ள்ளது தெரிய வந்தது. இதனை த்தொட ர்ந்து ஞானம்மா ளின் கணவர் செல்லக்கண்ணுவை போலீஸ் நிலையத்தில் வைத்து மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×