search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தீக்குளித்து சாவு
    X

    தொழிலாளி தீக்குளித்து சாவு

    • தொழிலாளி தீக்குளித்து இறந்தார்.
    • இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கணபதியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 60), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள். இவர்களின் 2 மகள்கள், 1 மகனுக்கு திருமணமாகி விட்டது.

    திருமுருகன் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×