என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coir cotton"
- ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் தேங்காய் நார்களை இருப்பு வைக்க குடோன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடோனில் இன்று காலை 9 மணி அளவில் தேங்காய் நார்கள் திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக எருமப்பட்டி, நாமக்கல் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை குடோன் முழுவதும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமானதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்