search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரில்"

    • புகையிலை பொருள்கள் பறிமுதல்
    • அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் ஒரு கார் வெகு நேரமாக நின்றது. அதன் டிரைவர் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அதனை அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர். அவர்கள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கிருஷ்ணகிரி குப்பச்சிபாறை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 20 சாக்கு மூடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. அதுபற்றி விசாரித்த போது, விஜயன் என்பவர் கூறியதின் பேரில் கிருஷ்ணகிரியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாக பிரகாஷ் தெரிவித்தார்.

    புகையிலை பொருட்களை அவர் குமரி மாவட்டத்தில் சப்ளை செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கடத்தி கொண்டு வந்துள்ளார். இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டிரைவர் பிரகா சும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.
    • ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி (27). இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து போனது. இந்த சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • காரை நிறுத்தி சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவின் பெயரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குழி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் ஒன்றிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப் பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • கே.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் இருந்து இன்று காலை 6 மணியளவில் ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் அரக்கன் கோட்டை அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 40 கிலோ எடையுள்ள 32 ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தது பவானி மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு ரேசன் அரிசி கொண்டு செல்வதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் மணிகண்டனை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    • மாணவர்களின் காரில் பள்ளிக்கு செல்லும் ஆசையை வட்டாரக் கல்வி அலுவலர் நிறைவேற்றினார்.
    • பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 1990-91-ல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த ஷீலாராணி சுங்க நரிக்குறவர் காலனியை அறிவொளி நகர் என்று பெயர் வைத்து அவர்களுக்கு அறிவொளி தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி கொடுத்து கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து பள்ளி செல்லும் வயது குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்.

    இந்த நிலையில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் பள்ளிக்கு செல்ல முடியாததால் அறிவொளி நகர் பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பதை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தியதோடு அவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அறிவொளி நகருக்கு ஆய்வுக்கு சென்ற திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரனிடம் சில மாணவ, மாணவிகள் எங்களை ஒரு நாள் ஏ.சி. காரில் ஏற்றிச் செல்வீர்களா? என்று கேட்டனர். மாணவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இன்று காலை வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் அறிவொளி நகருக்கு காருடன் வந்தார். அவர் வருவதற்குள் பல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். எஞ்சியிருந்த மாணவர்களை தனது காரில் ஏற்றிச் சென்று கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கிவிட்டதுடன் இன்று காரில் வராத மாணவ, மாணவிகளை மற்றொரு நாள் காரில் ஏற்றி வருவதாக கூறினார். நரிக்குறவர் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய வட்டாரக் கல்வி அலுவலரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • புளியம்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவரிடமிருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தர வின் பேரில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடித்து ரேஷன் அரிசி யை பறிமுதல் செய்து வரு கின்றனர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி அடுத்த ஆனூர் ரோடு, அவிநாசி பிரிவு பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து விசாரணை நடத்திய போது காரை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம், நேரு நகரை சேர்ந்த சதீஷ்குமார் (38) என தெரியவந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்க சென்றது தெரி யவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    கருமந்துறை அருகே விவசாயியை காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கரிய கோவில் அருகே உள்ள பகுடு பட்டி ஏரி வளைவுப் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). விவசாயி.

    இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது கீரைகடை பிரிவு ரோட்டில் டீக்கடை வைத்திருந்த மூலப் பாடியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணி வேலை 2 பேர் தேடி வந்ததாகவும், வீட்டு முகவரி மற்றும் போன் நம்பரை கேட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனால் மணிவேல் மனைவி ரஞ்சிதம் அதிர்ச்சி அடைந்தார் .இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மணிவேல் தனது மனைவி ரஞ்சிதத்திடம் செல்போனில் பேசினார் .அப்போது தன்னை 2 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

    உடனடியாக செல்போன் அழைப்பு துண்டிக்–கப்பட்டது . இதையடுத்து அவர் பேசிய நம்பரை தொடர்பு கொண்டபோது செல்போன் 

    ×