search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling Ration rice"

    • ரேஷன் அாிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • நடைமேடை எண் 1-ல் மூட்டைகளுடன் 2 பெண்கள் சந்தேகப்படும்படி இருந்தனர்

    திருப்பூர்:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாா் மாவட்ட எல்லைக்குட்பட்ட பஸ் மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் ரேஷன் அாிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் நடைேமடை எண் 1-ல் மூட்டைகளுடன் 2 பெண்கள் சந்தேகப்படும்படி இருந்தனர். அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் கோவை சித்தாபுதூரைச் சேர்ந்த அமுதா மற்றும் கோவை சிங்கநல்லூரை சேர்ந்த ராபியா என்பது தொியவந்தது.

    இருவரும் திருப்பூர் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு ரெயில் மூலம் கொண்டுசென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேனில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி வழிகாட்டுதல் படி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, தட்டக்கரை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் தட்டக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமாக அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அப்போது வேனில் 50 கிலோ அளவில் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் பவானி, திருவ ள்ளுவர் நகரை சேர்ந்த பாலு (50), உதயகுமார் (55) என்பது தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசியை கர்நாடகா வுக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் ேரஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் பாலு, உதயகுமார் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
    • இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தர வின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை யில் போலீசார் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி பங்களாபுதூர் அருகே கொண்டைய ன்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் கொண்ட 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்ப டுவது தெரிய வந்தது.

    இது குறித்து விசாரித்த போது பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த முருகன் (25), பவானி கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தி குமார பாளையத்தில் உள்ள வடமாநில தொழிலா ளர்க ளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு 640 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். 

    • சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.
    • அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கு மூட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து அவர் வைத்து இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பழைய தபால் ஆபிஸ் வீதியை சேர்ந்த வசந்தி (வயது 53) என தெரிய வந்தது.

    மேலும் அவர் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி கர்நாடகா மாநிலம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பு வதற்காக பஸ்சுக்காக காத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 7 மூட்டைகளில் சுமார் 100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப்பபட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகா ப்பு மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
    • காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு அருகே லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி (வயது 40), கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரை சேர்ந்த குலாம் முஸ்தபா மொண்டல் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவ ர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர்.
    • மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குளி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப்பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த முத்தம்மாள் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கே.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் இருந்து இன்று காலை 6 மணியளவில் ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் அரக்கன் கோட்டை அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 40 கிலோ எடையுள்ள 32 ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தது பவானி மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு ரேசன் அரிசி கொண்டு செல்வதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் மணிகண்டனை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    ஆந்திராவுக்கு வேனில் கடத்தப்பட்ட 10 டன் ரேசன் அரிசி வாலாஜா அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
    வாலாஜா:

    வாலாஜா தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் சவுந்தரராஜன் ஆகியோர் சென்னை-பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள வாணிசத்திரத்தில் இன்று காலை மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, வேலூர் மார்க்கமாக வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். வேனில் 50 கிலோ எடையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 10 டன் எடையுள்ள 200 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது, டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    ரேசன் அரிசி கடத்தி வந்த வேன், ஆந்திர பதிவெண் கொண்டது. எனவே, 10 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, 10 டன் ரேசன் அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    10 டன் ரேசன் அரிசி மூட்டைகளிலும் அரசின் முத்திரை சீல் உள்ளது. எனவே, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை கிடங்கில் இருந்து அப்படியே கடத்தி வந்துள்ளனர். இதற்கு உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வளவு டன் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முடியாது. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி, ஆந்திராவுக்கு ரெயில்கள், பஸ்கள் மூலம் கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது என்று அதிகாரிகளே குற்றம் சாட்டினர்.

    சமீபத்தில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில், சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 26) என்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தாலும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

    குறிப்பாக, ஆந்திராவுக்கு கடத்தபடும் ரேசன் அரிசி, அங்கு பாலிஷ் போட்டு புதுரக அரிசியாக தமிழக சந்தைக்கே கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தலில் அதிகாரிகள் முதல் ஆந்திர கும்பல் வரை சங்கிலி தொடர் போல் இணைந்து செயல்படுகின் றனர்.

    எனவே, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    ×